Sujathaகொஞ்ச நாளாக புதிதாக எதுவும் படிக்கவில்லை. புத்தகம் எதுவும் கொண்டுவரவில்லை, ஏனோ எனது Amazon Kindle-ஐயும் கொண்டுவரவில்லை. என்றோ சுஜாதாவின் சிறுகதைகளை 4Shared வலைதளத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததும் அவற்றை பதிவிறக்கம் செய்து வைத்தேன். இருப்பினும் படிக்க நேரமே கிடைக்கவில்லை. ஊருக்கு கிளம்பும் excitement-ல் காலை 4:30 மணிக்கே எழுந்துவிட்டபோதும், விமானத்தில் தூக்கம் வராமல் ஒரே அசதி. திரையில் ஒன்றும் உருப்படியான படங்கள் இல்லாததால் என்ன செய்வது என்று யோசித்தபோது சுஜாதாவின் சில கதைகளை பதிவிறக்கம் செய்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. படித்துவிட்டு சுடச்சுட எழுதிய குறுவிமர்சனங்கள். இப்போது வானத்தில் பறக்கும்போது பதிவு எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம். இது இரண்டாவது முறை.

மாயநதிகள்

எந்த ஒரு கலைப்படைப்புமே ஒவ்வொரு வயதிலும் படிக்கும்போது / பார்க்கும்போது புது அனுபவத்தை அல்லது பரிமாணத்தை கொடுக்கும். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால் நீங்கள் மணிரத்தின் “மௌன ராக”த்தை படிக்கும்போது பார்த்தற்கும், கல்யாணம் / காதலிக்கும் போது பார்ப்பதற்கும் வித்தியாசம் தோன்றும். அதே போல “ஸ்டெல்லா புரூஸ்”ஸின் “மாய நதிகள்”புத்தகத்தை 5 வருடங்களுக்கு முன்பு படித்ததற்கும் இப்போது படித்ததற்கும் நிறைய வித்தியாசம். “மாயநதிகள்” மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்ஸின் பத்தாவது நாவல். எனினும் பெரிதாக பேசப்பட்ட அவரது படைப்புகளில் இதுவும் ஒன்று. மனித உறவின் / மனதின் சிதைவை இவ்வளவு நெருக்கமாக, தத்ரூபமாக வேறு எந்த நாவலாவது சொன்னதா என்று பட்டிமன்றம் போட்டே யோசிக்கலாம். அவ்வளவு நேர்த்தி. இதை நான் வைத்தியின் அறிமுகத்தால் முன்பு 2005-ல் படித்திருந்தேன். பின்பு இப்போது 6 வருடங்கள் கழித்து படித்தபோது இன்னும் அதிகமாக identify செய்துக்கொள்ள முடிந்தது.

ஏழாம் உலகம்பொதுவாக நான் dark-ஆன நாவல்களை / படங்களையும் படிப்பதை அல்லது பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். காரணம் அந்த அனுபவங்களிலிருந்து வெளியே வர எனக்கு நாட்கள் பிடிக்கும். அதனால் தான் ரொம்ப நாட்களாக ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை படிக்காமல் தவிர்த்து வந்தேன். இந்த நாவலை பாலாவின் ‘நான் கடவுள்’ வெளிவந்தபோது தான் முதன் முதலில் கேள்விப்பட்டேன். ‘நான் கடவுள்’ படத்தையே எனக்கு பார்க்க பிடிக்கவில்லை அப்படியிருக்க ‘ஏழாம் உலக’த்தை அவ்வளவு சீக்கிரம் படிக்க தோன்றுமா? எனினும் சமீபத்தில் ஜெயமோகனின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தவுடன் இதனை படிக்க முடிவு செய்தேன். இந்த நாவல் எதை பற்றியது என்று ஏற்கனவே தெரிந்துவிட்டதால் மனதை ஓரளவுக்கு தைரியப்படுத்திக் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். எனினும் நான் அந்த குறையிலிகளின் உலகத்துக்கு இழுத்துச்செல்லப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

Jeyamohanசமீபத்தில் (கடந்த 2-3 வருடங்களாக) ஏதோ ஒரு வகையில் ஜெயமோகனை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவரது எழுத்துகளை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்துக்கொண்டே இருந்தது. எங்கோ அவரது “விஷ்ணுபுரம்” பற்றி கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு அதை படிக்கவேண்டும் என்று தோன்றியது. எனது நண்பர் அண்ணாமலை சுவாமியிடம் ஒருமுறை அவரது எழுத்துக்கள் பற்றி கேட்டபோது “ஜெயமோகனின் எழுத்துக்களில் ஒரு ஆணவப்போக்கு இருக்கும். அது எனக்கு பிடிக்காது” என்று சொன்னார். மேலும் எனது circle-ல் நவீன இலக்கியம் படிக்கு நண்பர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஜெயமோகனின் எழுத்துக்களை பற்றிய சாமானியனின் கருத்துகள் கிடைக்கவில்லை. இப்படியாக 2-3 வருடங்கள் கழிந்துவிட்டன.

Pallavan Pandyan BhaskaranShift-ல் வேலை செய்யும்போது எப்போதுடா regular time-ல் வருவோம் என்று மனம் துடிதுடிக்கும். இப்போது மாலைகளில் வீட்டுக்கு வருவது என் அம்மாவுக்கு சங்கடமாக உள்ளது. காரணம் - அவர்களது மெகா சீரியல்கள் பார்ப்பது தடைபடுகிறது. வயதானவரை எதற்கு கஷ்டப்படுத்தவேண்டும் என்று என்னை அறைக்குள் சிறை வைத்துக்கொள்வதால் சில சமயம் SAP-ல் என்னை update செய்துகொள்வது, புத்தகம் படிப்பது என்று ஏதோ பொழுதுபோகிறது. அந்த வகையில் இன்று ஒரே மூச்சில் 328 பக்கங்கள் படித்து முடித்த புத்தகம் - “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதிய “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”. இ.சௌ-வின் புத்தகங்களை படித்தவர்களுக்கு அவருடைய ஆன்மீக த்ரில்லர்களின் layout தெரிந்துவிடும். அதிலிருந்து அச்சு அசல் மாறாத அடுத்த assembly production இந்த “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”.

Kanthaloor Vasanthakumaran Kathaiநான் படித்த சுஜாதா எழுதிய முதல் வரலாற்று புதினம் இது. தலைவர் மொத்தமே இரண்டு வரலாற்று நாவல்கள் தான் எழுதியிருக்கிறார் போல. இந்த நாவலை பற்றி பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ எனக்கு இந்த நாவலை பற்றிய ஓரளவுக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. அது பூர்த்தி அடைந்ததா என்று கேட்டால் பதில் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். பொன்னியின் செல்வன் முடிந்த சில காலங்களுக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் இதில் வருகின்றன. அதனால் நாம் பொன்னியின் செல்வனில் பார்த்த ராஜராஜ சோழனுக்கும், இதில் வரும் ராஜராஜ சோழனுக்கும் நிறைய வித்தியாசங்கள். மேலும் இதிலும் ராஜராஜ சோழன் கதாநாயகன் இல்லை. மாறாக பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல இதிலும் ஒரு ‘வ’ தான் கதாநாயகன் - வசந்தகுமாரன்.

Madhyamarமறைந்த எழுத்துலக ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா அவர்கள் தமிழ் நடுத்தர வர்கத்தினரை அடிப்படையாக கொண்டு எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்த ’மத்யமர்’. இது 1990-ல் கல்கியில் தொடராக எழுதப்பட்டாலும், கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கப்புறமும் பெரிய மாற்றமில்லாமல் நடுத்தர வர்க்கத்துக்கு பொருத்தமாகவே உள்ளது. மேலேயும் பணக்காரர்கள் வாழ்க்கைக்கும் போக முடியாமல், கீழே ஏழைகளின் வாழ்க்கைக்கும் இறங்கமுடியாமல் இரண்டாங்கெட்டானாக தவிக்கும் இந்த ‘மத்திய’ வர்க்கத்தை பின்புலமாக சோகம், துரோகம், தைரியம் என பலதரப்பட்ட ‘ரச’ங்களை கொண்டு எழுதப்பட்ட இந்த கதைகளை மேலும் சுவாரசியப்படுத்துகிறது ஒவ்வொரு கதைக்கப்புறம் பிரசுரிக்கப்பட்ட வாசகர்களின் கருத்து கடிதங்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி புத்தக கண்காட்சியில் வாங்கப்பட்ட இந்த புத்தகத்தை எடுக்கவே இவ்வளவு நாட்கள் பிடித்துள்ளது எனக்கு. 12 கதைகளையும், அதன் feedback-ஐயும் படிக்கும்போது கதைக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்தது போன்ற உணர்வு.

Marmadesamகிட்டத்தட்ட 90-களின் பிற்பகுதியில் - சன் டி.வி வீடுகளில் காலூன்ற ஆரம்பித்த சமயம் - cable TV connection இருந்த நகர்ப்புறங்களையும், டவுன்களையும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட முக்கால்வாசி தமிழகத்தை வியாழக்கிழமைகளில் பயமுறுத்தி முடக்கிய “பெருமை” கே.பாலசந்தரின் “மின் பிம்பங்க”ளுக்கும், இந்திரா சௌந்தர்ராஜன் - நாகா கூட்டணிக்கு மட்டுமே உண்டு. அவர்களது கைவண்ணத்தில் உருவான “மர்மதேசம்” தொடர் மூலம் தமிழக வாசகர்களின் முதுகுத்தண்டை உறையவைத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்த “ரகசியமாய் ஒரு ரகசியம்” ஒரு நாயை கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தது என்றால் அடுத்து வந்த “விடாது கருப்பு” ஒரு குதிரையை வைத்து தமிழ் நேயர்களை முடக்கிக்கொண்டிருந்தது. கடந்த முறை புத்தகங்கள் வாங்க போனபோது இது “விட்டுவிடு கருப்பா” என்ற பெயரில் புத்தகமாக பார்த்தேன், வாங்கினேன்.

Appusami and Seethapatti'பாக்கியம்' ராமசாமி உருவாக்கிய அப்புசாமி 1980-களில் வாசகர்களுக்கு மிகப்பிரியமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஒன்று. கிட்டத்தட்ட தமிழ் ‘டாம் & ஜெர்ரி' வகை நகைச்சுவை தான். எப்போது பார்த்தாலும் சீதா பாட்டியிடம் திட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் அப்புசாமி தாத்தா, அவரது துணைவர்களான ரசகுண்டு, பீமாராவ் என எப்போதும் கலகலப்புக்கு பஞ்சமில்லாத கும்பல் இது. பல நாவல்களிலும், தொடர்களிலும் கடந்த தலைமுறை வாசகர்களை மகிழ்வித்த அப்புசாமி தாத்தாவும், சீதாப்பாட்டியும் தற்போது புத்தகங்கள் வாயிலாகவும், நகைச்சுவை டி.வி.டி-களிலும், இணையத்தில் ‘http://www.appusami.com' என்ற முகவரியிலும் இந்த தலைமுறை வாசகர்களை தங்கள் பக்கம் கவர முயற்சித்து வருகிறார்கள். இந்த இணையதளத்தில் இருந்து படித்த தொடர் / நாவல் - ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும். இதை நான் Amazon Kindle-க்கு ஏற்ப மின் புத்தகமாக உருமாற்றியுள்ளேன்.

மின்னல் மழை மோகினிஉடல் பொருள் ஆனந்தி’ படித்ததிலிருந்து ஜாவர் சீதாராமனின் ரசிகனாக மாறிய பின்பு படித்த நாவல் தான் ‘மின்னல் மழை மோகினி’. இதுவும் ‘உ.பொ.ஆ’ போலவே supernatural thriller-ஆக இருக்கும் என்ற நினைப்பில் வாங்கினேன். இதிலும் ஆரம்பம் ‘A' class... 'matter இல்லேங்க... தரமானதுன்னு சொன்னேன்’. அதே இடி, மின்னல், மழை பின்னணியில் நமது கதாநாயகி மோகினி அறிமுகம் ஆகிறாள் - குழந்தையாக. ஆனால் அவள் பேய் இல்லை. வாழ்க்கையில் அதீத அழகே ஆபத்தாக மாற, தகுந்த உறைவிடம் தேடி அலையும் அபலையாக வருகிறாள். படித்து முடித்துவிட்டு புத்தகத்தை மூடிவைத்து அசைபோடுகையில் - ’இது ஒரு அபலை பெண் குழந்தை தனது நல்ல மனதுக்காக ஒரு நல்ல வாழ்க்கை அமையப்பெறும் பயணம்’ என்பதை சாராம்சமாக உணரமுடிகிறது. ஏனோ.. இந்த புத்தகத்தை ஆமை வேகத்தில் படித்தேன். முதல் 150 பக்கங்களை படிக்க பல மாதங்கள் ஆனது. ஆனால் மீதி 300 பக்கங்களை கடந்த வாரம் சேலம் - பெங்களூரு பயணத்தில் கிட்டத்தட்ட 2-3 மணி நேரங்களிலேயே கடந்துவிட்டேன்.

47 நாட்கள்சிவசங்கரி எழுதிய இந்த நாவல் ஒரு நல்ல ’Tearjerker' வகையில் சேர்த்தலாம். கிராமத்தில் பிறந்து வளர்ந்த விசாலிக்கு அதிர்ஷ்டம் பிய்த்துக்கொண்டு வெளிநாட்டு மாப்பிள்ளையான குமாருடன் திருமணம் நடக்கிறது. தனக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று உணரும் முன்பு விசாலியின் வாழ்க்கையில் சூறாவளி அடித்து அவளை தூரதேசத்தில் நிராதரவாக விடுகிறது. அந்த நரகத்திலிருந்து படிப்பறிவே இல்லாத விசாலி எப்படி தப்பிக்கிறாள் என்பதே இதன் சாரம். ஆயிரம் காலத்து பயிரான கல்யாணம் விசாலிக்கு 47-ஏ நாட்களில் முடிந்துவிடுவதை படிப்பவர்களின் மனதில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக எழுதியிருந்தார் சிவசங்கரி. நாவலின் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இது விசாலியின் பார்வையிலே எழுதப்பட்டிருந்தாலும், நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே சொல்லியிருப்பதன் மூலம் melodrama-வை குறைத்து விறுவிறுப்பாக கொண்டுபோயிருப்பது தான். சமயத்தில் பெண் எழுத்தாளரின் வாடை அடித்தாலும், இந்த நாவலை கிட்டத்தட்ட ஒரு page turner வகையில் சேர்க்கலாம்.

இதற்கு பெயரும் கொலைசமீபத்தில் அடுத்தடுத்து படித்த சுஜாதாவின் நாவல் இது. வழக்கம் போல சுஜாதா ஒரு கொலைக்களத்தை எடுத்து விறுவிறுப்பாக கையாண்டிருக்கிறார். வழக்கம் போல கணேஷும், வசந்தும் வருகிறார்கள் என்ற போதும் இம்முறை பாத்திரப்படைப்பில் கொஞ்சம் வித்தியாசம். உதாரணம் - வசந்த் அடிக்கடி பேசும் தே*** பையா மற்றும் இதர கெட்ட வார்த்தைகள். கணேஷ் இதில் இன்ஸ்பெக்டர் இன்பானந்தியை காதலிக்கிறான். வேறு எந்த நாவலிலாவது கணேஷ் கல்யாணம் ஆனதாக வந்ததா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். மற்றபடி வழக்கில் இறங்கியதும் துப்பறியும் அந்த வேகம் வழக்கமான துறுதுறுப்பு.