மூன்றாம் முறையாக பொன்னியின் செல்வன் - 2
கடந்த வார இறுதியில் பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகத்தை வெற்றிகரமாக படித்து முடித்ததும் இவ்வளவு சீக்கிரமாகவா என்று தோன்றியது? பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகம் படிப்பது ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' பார்ப்பதற்கு சமம். படிக்கும் நாமும் அந்த இயற்கையில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துவது. கோடிக்கரையின் மணல்வெளிகளும், கடலின் நுரையலைகளும், மரங்களும், புதர்களும் நம் மீது உரசுவது போன்ற effect - ஐ உணரலாம். இம்முறை கதை 10௦% தமிழக கடற்கரையிலும், 30% தஞ்சை அரண்மனையிலும், மீதி 60௦% இலங்கை காடுகளிலும் நடக்கிறது. அதனால் இந்த பாகத்தில் இயற்கையின் பங்கை வாசகர்கள் உணரலாம். மேலும் இந்த பாகத்தில் தமிழ் அரசர்கள் இலங்கை அரசியலின் மீது ஏற்படுத்திய பாதிப்பையும், தமிழ் வரலாற்றுடனான நெருக்கத்தையும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் கல்கி.