சிவம்
சில புத்தகங்களுக்கு முன்னுரையை படிக்காமல் இருப்பதே நல்லது. இது நான் இந்திரா சௌந்த்தர்ராஜனின் 'சிவம்' என்ற நாவலை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது. காரணம் அவர் தேவை இல்லாமல் ஒரு பலமான பீடிகையை போட்டுவிட்டு, ஒரு 'hype' உருவாக்கிவிட்டு அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றமுடியாமல் தடுமாறியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஒரு வேளை முன்னுரையை படிக்காமல் நேராக நாவலை படிக்க ஆரம்பித்து இருந்தால், சுவாரசியமாகவே இருந்திருக்கும். இந்திராவின் பலமே அவரது 'ஆன்மீக த்ரில்லர்கள்' என்று அழைக்கப்படும், கோவிலின் பின்புலத்தில் எழுதப்பட்டும் மர்மங்களும், முடிச்சுக்களும். அவரது வழக்கமான பிரியப்பட்ட 'மரகதலிங்கம்' இருந்தாலும், இம்முறை அவர் அதிலிருந்து சற்று விலகி இராம நாராயணன் பாணியில் முழு நீள பக்தி த்ரில்லரை தந்திருக்கிறார். போனஸாக அவர் லிங்கங்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பு அளித்திருக்கிறார்.