உடல் பொருள் ஆனந்தி
திகில் தளத்தில் இந்திரா சௌந்தர்ராஜனுக்கெல்லாம் குருவான திரு. ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய இந்த நாவல் இன்றைக்கும் விறுவிறுப்பு குறையாமல் Oven-ல் இருந்து எடுத்தது போல சூடாக, ஃப்ரஷ்ஷாக இருக்கிறது. நான் 'காற்று காற்று உயிர்' படித்த அனுபவத்தை எழுதியிருந்தேன். அதை பார்த்துவிட்டு எனது நண்பர் பிரபு இந்த நாவலை பற்றி சொன்னார். இந்த நாவலை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், இந்த முறை அதை படித்துவிடவேண்டும் என்ற் தோன்றியது. அதிர்ஷ்டவசமாக நான் கோவையில் அள்ளிய புத்தகங்களில் இதுவும் இருந்தது. இது ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய இந்த புத்தகம் ஒரு முறை டி.டி-1ல் தொடராக வந்திருந்தது தெரியும். ஆனால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பார்க்கும்படி நேர்ந்தது. அதை comedy போல எடுத்திருந்தார்கள். நடிகர் சத்தியராஜ் ஒரு பேட்டியில் தனது கனவு பாத்திரமாக இந்த நாவலில் வரும் திலீபனை கூறியிருந்தார். இதை முழுவதுமாக படித்து முடித்தபோது தான் அந்த பாத்திரம் நடிப்புக்கு எவ்வளவு scope உள்ளது என்று புரிந்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நாவலை திரைப்படமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் நிறைவேறவில்லையாம்.