உள்ளம் கவர் கள்வன்'உள்ளம் கவர் கள்வன்' - இம்முறை சேலம் போகும்போது அதிர்ஷ்டவசமாக சென்ட்ரலில் உள்ள 'ஹிக்கின்போத்தம்ஸ்'-ல் கிடைத்தது. இதற்கு முன்பு 3 முறை இதே புத்தகத்தை வாங்கிவிட்டேன். ஒவ்வொரு முறையும் யாராவது வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். நானும் நல்ல புத்தகம் என் நினைவாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவேன். கடந்த முறை எனக்கென்று வாங்க 'விசா பதிப்பாளர்களுக்கே' போனபோது 'out of print' என்றார்கள். அடுத்த பதிப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை என்றார்கள். அப்போது நொந்து நூடில்ஸாகி போய் முடிவு செய்தேன் - இனி எனக்கென்று ஒரு பிரதி வைத்துக்கொண்டு தான் மற்றவர்களுக்கு எந்த புத்தகத்தையும் விட்டுத்தருவது என்று. அதனால் தான் என் அக்கா கேட்டபோது கூட தராமல் 'டிமிக்கி' கொடுத்துவிட்டேன். நான் சொல்ல வந்தது - இந்த புத்தகத்தை பற்றி வந்த வித்தியாசமான விமரிசனங்கள். எனது மாமாவும், அம்மாவும் சொல்லிவைத்தது போல இந்த நாவல் குப்பை என்று விமர்சித்தார்கள். நான் சொன்னேன் "நீ இதை முதல் முதலில் 20 வயதில் படித்திருந்தால் பிடித்திருக்கலாம் ஆனால் 60 வயதில் படித்ததால் இதன் nuances எனப்படும் நுணுக்கங்கள் புரியாமல் போயிருக்கலாம்

எண்டமூரி விரேந்திரநாத்சமீபத்தில் கல்லூரியில் சேர்ந்த என் அக்காவின் பெண் தன்னுடைய கண்டிப்பான பெண்கள் கல்லூரியை பற்றியும், 'காய்ந்து' கிடக்கும் வயசு பெண்களை பற்றியும் புலம்பி தீர்த்துவிட்டாள். மேலும் சில சுவாரசியமான தகவல்களையும் (பெண்கள் எப்படி சோப்புக்குள் மொபைல் ஃபோன்களை பதுக்கி வைத்து பாய் ஃப்ரெண்டுகளுடன் ரகசியமாக பேசுகிறார்கள், தினசரிகளில் வரும் ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களை அறையில் ஒட்டிக்கொள்ள நடக்கும் போட்டிகள், பார்வையாளர்களாக வரும் ஆண்களோடு கடலை போடுவது....) தந்தாள். அதனாலோ என்னவோ என்னால் இந்த நாவலை புரிந்து படிக்க முடிந்தது. 'லேடீஸ் ஹாஸ்டல்' - பேரே கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கிறதே கதை எப்படியிருக்கும் என்று முன்னுரையில் பார்த்தபோது, இது கிரிக்கெட்டும், சைக்காலஜியும் கலந்த கலவையென்று போட்டிருந்தது. கிரிக்கெட் தேர்வில் நடக்கும் அரசியலும், வழி தவறும் கல்லூரி பெண்களும் விவாதிக்கப்படும் இந்த கதை ஒரு கொலையின் பின்புலத்தில் நடக்கிறது. இந்த கொலையின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் பாதையில் கிரிக்கெட் வாரிய அரசியல், பெண்கள் கல்லூரி விடுதியில் நடக்கும் அவலங்கள் என நிறைய தகவல்கடு நகர்கிறது இந்த கதை.

எண்டமூரி விரேந்திரநாத்'பவித்ரபந்தம்' என்று பெயர் வைத்திருந்தால் சற்று வழக்கமானதாக இருந்திருக்குமோ என்னவோ, எண்டமூரி விரேந்திரனாத்தின் தெலுங்கு நாவலான 'அநைத்திகம்'-இன் தமிழ் மொழிபெயர்ப்புக்கு 'பந்தம் பவித்ரம்' என்று கொஞ்சம் வித்தியாசமாக பெயர் வைத்திருக்கிறார் கௌரி கிருபானந்தன். 1998-இல் எழுதப்பட்ட இந்த நாவல் பிரபல திரைப்படமான 'அமோரெஸ் பெரெஸ்' மூலம் பிரபலமான 'segmented screenplay' முறையில் எழுதப்பட்டுள்ளது. (இதே திரைக்கதை யுக்தியில் மனிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' 2001-ல் வெளியானது). 3 கதாபாத்திரங்கள் தங்களது கண்ணோட்டத்தில் நிகழ்வுகளை நமக்குரைத்து, முடிவில் ஒரு பொதுவான நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து ஒரு முடிவுக்கு வருவது இந்த style திரைக்கதை யுக்தி. பந்தம் பவித்ரமும் ஷியாமலா, அகல்யா, ராக்காயி என்று சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்த மூன்று பெண்களின் perspective-இல் விரிந்து, கடைசியில் ஒன்றாக ஒரு தெளிவான முடிவுக்கு வருகிறது. எண்டமூரியின் வழக்கமான எழுத்துக்களில் இருந்து 'U turn' எனப்படும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பயணிக்க தயாராவோம்.

பிரிவோம் சந்திப்போம்மனதில் நின்ற, higher benchmarks ஏற்படுத்திய ஒரு நாவலுக்கு sequel எனப்படும் இரண்டாம் பாகம் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பதை எண்டமூரியிடம் கேளுங்கள். மனிதர் 'துளசிதளத்'தில் score செய்து, அதை 'மீண்டும் துளசிதளத்'தில் தொலைத்தார். இப்போது சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' இரண்டாவது பாகத்தை படிக்கலாமா? வேண்டாமா? என்று ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியாக 'சரி! புத்தகத்தை வாங்கிவிட்டோம் எனவே படித்து தான் வைப்போமே' என்று படிக்க ஆரம்பித்தேன். எனது 'worst fears come true' போல ஆரம்பித்த நாவல், கடைசியில் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டது. எனக்கு முன்பு என் அம்மா இதனை படித்துவிட்டார். எனவே அவரிடம் நிறைய இதனை பற்றி பேசினேன். A worthy sequel for a successful prequel.

உடல் பொருள் ஆனந்திதிகில் தளத்தில் இந்திரா சௌந்தர்ராஜனுக்கெல்லாம் குருவான திரு. ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய இந்த நாவல் இன்றைக்கும் விறுவிறுப்பு குறையாமல் Oven-ல் இருந்து எடுத்தது போல சூடாக, ஃப்ரஷ்ஷாக இருக்கிறது. நான் 'காற்று காற்று உயிர்' படித்த அனுபவத்தை எழுதியிருந்தேன். அதை பார்த்துவிட்டு எனது நண்பர் பிரபு இந்த நாவலை பற்றி சொன்னார். இந்த நாவலை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், இந்த முறை அதை படித்துவிடவேண்டும் என்ற் தோன்றியது. அதிர்ஷ்டவசமாக நான் கோவையில் அள்ளிய புத்தகங்களில் இதுவும் இருந்தது. இது ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய இந்த புத்தகம் ஒரு முறை டி.டி-1ல் தொடராக வந்திருந்தது தெரியும். ஆனால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பார்க்கும்படி நேர்ந்தது. அதை comedy போல எடுத்திருந்தார்கள். நடிகர் சத்தியராஜ் ஒரு பேட்டியில் தனது கனவு பாத்திரமாக இந்த நாவலில் வரும் திலீபனை கூறியிருந்தார். இதை முழுவதுமாக படித்து முடித்தபோது தான் அந்த பாத்திரம் நடிப்புக்கு எவ்வளவு scope உள்ளது என்று புரிந்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நாவலை திரைப்படமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் நிறைவேறவில்லையாம்.

சுஜாதாOne thing leads to another... and we end up experiencing new pleasures.. சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலின் முன்னுரையில் அதன் நாயகி நிதியை 'பிரிவோம் சந்திப்போம்' மதுமிதாவுடன் ஒப்பிட்டு இருப்பார். எனவே கோவையில் புத்தகம் வாங்க போனபோது 'பிரிவோம் சந்திப்போம்'-இன் இரண்டு பாகங்களையும் வாங்கினேன். சுஜாதாவிடம் இருந்து ஒரு hard hitting stark நாவலை எதிபார்த்த எனக்கு இனிய அதிர்ச்சி. 24 வயதில் வரும் முதல் காதலை அதன் அப்பாவித்தனம் குறையாமல், பிரமிப்பு நீங்காமல், மிக அழகாக, தெளிந்த நீரோடையின் நடையை போல சலசலத்திருக்கிறார்.

இரண்டாவது காதல் கதைஇது வைத்தியிடம் இருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். ஏதெங்கிலும் பயணத்தின் நினைவாக புத்தகங்கள் வாங்கி அந்த பயணத்தை பத்திரப்படுத்துவது. இந்த முறை கோவை சென்றபோது சென்ட்ரலில் உள்ள ஹிக்கின்போத்தம்ஸில் வாங்கியது சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை'. இதன் நடை சுஜாதாவின் 'அனிதாவின் காதல் கதை'யை ஒத்திருந்தாளும், இம்முறை கதையின் களம் Board Room Politics-ல் மையம் கொண்டுள்ளது. வாழ்க்கையை பட்டாம்பூச்சியை போல சிறகடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருக்கும் நிதியின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது, கூடவே எதிர்ப்புக்களும். வாழ்க்கையை போல கட்டுப்பாடான ஆசானும் இல்லை. நிதியின் வாழ்க்கையில் இரண்டாம் காதல் நுழைகிறது. வழக்கமான தனது விறுவிறுப்பான நடையில், சுஜாதாவின் முத்தியரையோடு ஜிவ்வென பறக்கிறது இந்த 'இரண்டாவது காதல்'.

Kaatru Kaatru Uyirஇந்த முறை முன்னுரையில் இந்திரா 'பலவீனமான இதயமுள்ளவர்கள் இந்த நாவலை படிக்க வேண்டாம்' என்று ஒரு வரி எழுதியிருக்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய 'காற்று காற்று... உயிர்' நாவலை படிக்கும் நீங்கள் ஆவியுலகில் நம்பிக்கையற்றவராக இருக்கலாம், ஆனால் இதை படிக்கும் அந்த தருணங்களில் ஒரு வித பரபரப்பும், மெல்லிய உடல் நடுக்கங்களும் வந்து ஒட்டிக்கொள்வதை தவிர்க்க இயலாது. எண்டெமூரியின் 'துளசிதளம்' நாவலுக்கு பிறகு நான் பயந்து நடுங்கி படித்த த்ரில்லர் இது. மீண்டும் சொல்கிறேன், இதை படிக்கும்போது நீங்கள் அதை உருவகப்படுத்தி கொள்வதிலேயே இதன் வெற்றி அடங்கி இருக்கிறது. அதற்கு நீங்கள் நல்ல கற்பனை வளம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் கற்பனைகளை இந்திராவின் எழுத்துக்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அது போதும். ஆன்மீக பின்புல நாவல்களை எழுதி பெயர் வாங்கிய இந்திரா இந்த ஆவி நாவலின் மூலம் புதிய எல்லைகளை தொட்டிருக்கிறார். இது தேவி வார இதழில் 40 வாரங்களாக வெளிவந்து தமிழ் நாட்டை கட்டிப்போட்ட தொடராம்.

சில புத்தகங்களுக்கு முன்னுரையை படிக்காமல் இருப்பதே நல்லது. இது நான் இந்திரா சௌந்த்தர்ராஜனின் 'சிவம்' என்ற நாவலை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது. காரணம் அவர் தேவை இல்லாமல் ஒரு பலமான பீடிகையை போட்டுவிட்டு, ஒரு 'hype' உருவாக்கிவிட்டு அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றமுடியாமல் தடுமாறியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஒரு வேளை முன்னுரையை படிக்காமல் நேராக நாவலை படிக்க ஆரம்பித்து இருந்தால், சுவாரசியமாகவே இருந்திருக்கும். இந்திராவின் பலமே அவரது 'ஆன்மீக த்ரில்லர்கள்' என்று அழைக்கப்படும், கோவிலின் பின்புலத்தில் எழுதப்பட்டும் மர்மங்களும், முடிச்சுக்களும். அவரது வழக்கமான பிரியப்பட்ட 'மரகதலிங்கம்' இருந்தாலும், இம்முறை அவர் அதிலிருந்து சற்று விலகி இராம நாராயணன் பாணியில் முழு நீள பக்தி த்ரில்லரை தந்திருக்கிறார். போனஸாக அவர் லிங்கங்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பு அளித்திருக்கிறார்.

{mosimage}This week's Ananda Vikatan had more in store for me. I was able to identify with a couple of articles like "Child Prodigy" and "Killing periods of unemployment". Surprisingly the article about Child Prodiges sounded synonymous with what I wrote some months back about today's children losing their innocence in the name of intelligence. This time the writer took real life examples like Dileep (15), son of doctor parents in Trichy, who had performed surgery and his father, who aspired his son's name in Guinness Book of Records, is now in problem and Pudhiya (5) from Orissa whose (parent's) efforts of a 500 KM non-stop Marathon was thwarted by the police. Last time when Pudhiya completed his 5 KM run in 7+ minutes, he fainted and the pressures of performance and psychological nature were attributed for it. Gnani completes his article by citing his experience of interviewing a child star about 15 years ago, thus suubstantiating his argument that it is the parent's greediness for name, fame and money that the child prodigies are formed in most cases. Let kids be the kids, let us allow them enjoy their innocence rather than repenting at the later age.

Kamba RamayanaI am not a hardcore religious person, but somewhere it stayed in my subconscious mind that reading "Sundara Kanda" at the trying times will bring in good things. I always used to recommend the same to my friends and sister, gift them a copy of "Sundara Kanda", even though till now I hadn't got a chance to do so. Right now I am jobless, somewhere the insecurity is trying to creep in and I thought why not we practise what we used to preach. Then I changed my mind - why "Sundara Kanda" alone, why not whole of "Ramayana". It had been many years since I read that epic last time. So I started reading "Ramayana", written / translated in Tamil by the renowned poet of classic literature - "Kambar". Since I had read the Valmiki Ramayana also, I noticed small changes adapted to Tamil nativity, which I found intresting the liberties taken while adapting to local culture.

It would have been a big loss to the literary field if Endemoori Virendranath hadn't decided to resign his bank job to become a full fledged writer. This was exactly what I felt when I read his thriller "Thookku Thandanai" which is a translated version of Telugu "Abhilasha". He is one of the few writers who is able to carve a niche for himself in the minds of readers of other language. Speciality of EV is his versatility. He can write thrillers, family dramas and romance at ease. He writes in Telugu and his most of the works are translated by Susila Kanagadurga and Gowri Kribanandhan. Gowri Kribhanandhan had done a neat job in translating it into Tamil and juxtaposing it with the Tamil milieu. If you had travelled in the hairpin bends of a hill station, then you can feel the same thrilling experience throughout the 376 pages of this novel.