kane and abelMy kid friend Vaidhees, who introduced me to English fictions, got me this book as my B'Day present. I took sometime to read this as I was heavily engaged in other activities like painting and travelling. When I went to Nagercoil this time, I took this 550 paged book along, and the novel was so engrossing that I completed 470 pages in 4 days. Jeffrey Archer had penned an engaging story of two men born on same day but different parts of the world who cross each other's path only to save and destroy others. The fiction throws a light on the life during 1906 - 66, the turmoil the world underwent with the world wars and evolving of dynamic financial world, banking systems etc. Still the novel remains fresh and has been a source material for so many films and soaps (including 'Junoon' in DD-2). I almost gave up this book on the crude gang rape of Florentyna by Russian army soldiers, Jeffrey Archer had explained so graphically that it sends shivers even today if I think about it. But he makes up for these by the breezy and matured romance between Kane and Kate. The last 50 pages where the children of Kane and Abel fall in love is yawn inducing and unwarranted. At the end of the novel Kane looms large in our minds whereas everyone can understand the ruthlessness Abel had inherited over the passage of time. Sentiments, loyalty, friendship, passion, love, betrayal, boardroom politics.... any emotions, you name it, "Kane & Abel" has it. A perfect recipe for a sureshot blockbuster.

ராமாயணத்திலே எல்லா காண்டங்களிலும் ராமரே வியாபித்து இருப்பார் ஆனால் சீதையின் பெருமையையும், அனுமனின் உயர்வையும் சொல்வது சுந்தரகாண்டம். சீதையின் துக்கங்கள் இந்த காண்டத்தில் முடிவுக்கு வருவதால் இதை சுந்தரகாண்டம் என்றும், அனுமனின் மற்றொரு பெயரான "சுந்தரன்"-ஐ ஒட்டி சுந்தரகாண்டம் என அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் எழுத்தாளர் ஜெயகாந்தனின் "சுந்தரகாண்டம்" தற்காலத்திய ராவணன்களும், அவர்களிடம் சிக்கும் சீதைகளையும் படைத்து உலாவவிட்டு, பெண்களை சுதந்திரமாக, பொருந்தா உறவுகளில் சிக்காமல் இருக்க அறிவுறுத்துகிறார். பலவந்தமாக நவீன ராவணனிடம் திருமண பந்ததில் சிக்கும் சீதை எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறாள் என சுவாரசியமாக கொண்டுபோயிருக்கிறார். அட்டையை பார்க்காமல் படித்தால் லட்சுமி / ரமணிசந்திரன் எழுதியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

Da Vinci CodeA really new experience in reading an English fiction. I didn't understand the controversies this novel courted when released as movie, but now when read it I can make out why it ruffled the Christians. Normally I read about 50-75 pages in an hour, but when it came to this book I could go in snail pace only. Dan Brown packs too much of details in each line, page and contexts. Also the vocabulary is of somewhat high standards for me that I have to look at the thesarus often. The backdrop the novel is set in offers a high voltage experience. The author engrosses you deeply that you can't feel like keeping the book down till you complete. More than the controversies of Jesus' lineage, I think there lies the beauty of respecting the feminity in the novel. Also I can draw similarities between the early Hinduism and other religions. In fact after reading this novel, I could understand that the religious phenomenon in supressing the women was universal. Even if you are not a religous fanatic, there is enough suspense in "Da Vinci Code" to hold your attention.

Tell me your dreamsThe second novel of late. Sydney Sheldon I have ever read. I am always fond of psychological thrillers and this one too dealt with the much discussed MPD (Multiple Personality Disorder). TMYD starts with a thriller note of the protagonist Ashley Patterson being feared of getting stalked. The following incidents just compounds her fears and her security is at stake. There are other two pratagonists Toni Prescott and Alette Peters, making fun of Ashley's "Miss Goody" image. There happens the murders of Ashley's colleague, a painter, a diamond merchant and a cop who is incharge of Ashley's security from her stalker. All the murders point to Ashley who is confused of herself being dragged to the brutal murders. First half is better, second half's court scenes and hospital episodes could have been better. However the second half makes up for the detailed research and can prove as documentation. A sense of "Deja-Vu" prevails through out the novel. Looks like Shankar had been "inspired" by this novel to make "Anniyan". But after reading this novel my respect for Madhu Muttom, who wrote "Manichitrathaazhu" much before TMYD rose highly because "Mani..." was more clear, linear and gripping than TMYD. Overall TMYD made an intresting read but doesn't deserve to be carried forever.

எண்டமூரி விரேந்திரநாத்இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஓரளவுக்கு நல்ல முயற்சி. தன்னை சுற்றியிருந்தவர்களின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அப்பாவி கிருஷ்ணனை சிறைவாசம் எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் வெளியே வந்தானா? பழிவாங்கினானா? என்று விரியும் ஒரு சாதாரண கதை. இதை சுவாரசியமாகவும், வித்தியாசமாகவும் ஆக்குவது இதில் வரும் கிருஷ்ணனின் குருவான தாகூரின் கதாபாத்திரம். முடிவில் கிருஷ்ணன் தன்னை சமுதாயத்தின் பாதுகாவலாளியாக நியமித்துக்கொண்டு புரட்சி பாதை மூலம் பயணிக்க தொடங்குகிறான். பல இடங்களில் மிகவும் cliched-ஆக பயணிக்கும் இந்த நாவலை ஒரு முறை படிக்கலாம். பதிப்பு: அல்லையன்ஸ், 244 ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர் சென்னை. பக்கங்கள்: 216, விலை: ரூ. 50

Kadhal Sadhurangamஇந்திரா சௌந்தர்ராஜனிடம் 'ஆன்மீக த்ரில்லர்'களை மட்டுமே எதிர்பார்த்த என் போன்ற வாசகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி இந்த 'காதல் சதுரங்கம்'. பொதுவாக சதுரங்கத்தை (chess) mind game என்று சொல்வார்கள். உடல் அசையாவிட்டாலும் மனதால் அசராமல் ஆடவேண்டிய விளையாட்டு இந்த சதுரங்கம். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே அனுமானித்து எல்லாவற்றையும் யோசித்து விளையாடுவதால் இது எல்லோராலும் ஆடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த 'காதல் சதுரங்கமும்' அப்படிப்பட்ட ஒரு ஆட்டம் தான். காதலர்களை பிரிக்க அவர்கள் தந்தையர்கள் கட்டம் நகர்த்தும் சதுரங்கம். இது இந்திரா சௌந்தர்ராஜன் சன் டி.விக்காக எழுதிய தொடராம். இந்த நாவலை படிக்கும்போது ஆரம்பத்திலிருந்தே நமக்கு தெளிவாக தெரிகிறது - இது visual medium-க்காக எழுத்ப்பட்டது என்ற். அந்த அளவுக்கு காட்சிகளை ஷாட் வாரியாக பிரித்து எழுதியிருக்கிறார் இந்திரா. தடதடவென்று காட்சிகள் மாறுவதால் படிக்கும் நமக்கும் அந்த பரபரப்பு தொற்றிக்கொள்வதில் வியப்பு இல்லை.

24 ரூபாய் தீவுசுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் 'categorise' செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் 'ஒண்டித்வளி' என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததாம். இந்த நாவலை 'அப்படியே' எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாஸன் அடிக்கடி சொல்வார் என்று சுஜாதா தன் நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். 120 பக்கங்களில் ஒரு நிருபரின் அபாயகரமான வாழ்க்கையை அச்சு அசலாக நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சுஜாதா. நம்புங்கள்... இந்த நாவலை படிப்பது ஒரு roller-coaster ride-க்கு சமானம்.

{mosimage}

இது என்ன Chicken flu மாதிரி Writer Flu-வா? அடுத்தடுத்து எழுத்தாளர்கள் இறக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார். அந்த துக்கம் அடங்கும் முன்பே இடியென இறங்கியது எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை செய்தி. தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் எவருக்குமே அவரது எழுத்துக்கள் மீது மோகம் இல்லாமல் இருக்கமுடியாது. அவரது "அது ஒரு நிலாக்காலம்" படித்தவுடன் துக்கம் என்னை பல நாட்களுக்கு வாட்டியது. இத்தனை சோகங்களை ஒரு மனிதனால் தாங்கமுடியுமா என்று வருத்தம் கொண்டபோது ஆனந்த விகடனில் வந்த அவர் பேட்டி என்னை உலுக்கிப் போட்டது. காரணம் "அது ஒரு நிலாக்காலம்" அவருடைய சுயசரிதையில் சில பக்கங்கள் என்று வெளியிட்டு இருந்தார்.

{mosimage}

பக்கம் பக்கமாக எழுதப்படுபவையே இலக்கியம், மக்களிடம் எடுபடும் என்ற மாயையை தன் நேரடியான எழுத்துக்களால் முறியடித்து தமிழ் எழுத்துலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா. இன்றும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்குபவர் சுஜாதா. இவர் பேரை போட்டாலே படித்த இளைஞர்கள் யோசிக்காமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பது பதிப்பாளர்களின் கருத்து. அத்தகைய ஒரு role model இன்று நம்மைவிட்டு எட்டாத உயரத்துக்கு போய்விட்டார் என்பது உண்மையிலேயே வருத்தமான விஷயம். இன்று காலை ஆஃபீஸுக்குள் நுழைந்தவுடனே திரு. சுஜாதா நம்மை விட்டு போய்விட்டார் என்பதை கேள்விப்பட்டேன். ஏதோ ஒரு சோகம் நெஞ்சை அழுத்தியது. அவர் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். என்னை போன்ற வாசகர்களுக்கு உங்கள் மறைவு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஏதோ ஒரு வகையில் உங்கள் பாதிப்பு எங்கள் வாழ்க்கையில் எப்போதும் இருக்கும் - உங்கள் எழுத்துக்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக..

கடிகைநான் படித்த பாலகுமாரனின் முதல் சரித்திர நாவல் (புதினம் என்று எழுதனுமோ?) - 'கடிகை'. அந்த காலத்தின் குருகுலத்தை, கல்வியிலும், ஆட்சியிலும் அந்தணர்கள் செலுத்திய ஆதிக்கத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் புத்தகம் இது. சரித்திர ரீதியாக எவ்வளவு உண்மை என்று ஆராயாமல் 'கடிகை'யை அந்த காலத்து வாழ்வின் Documentation என்ற மட்டில் ஏற்றுக்கொண்டால் மிக அற்புதமான அனுபவம். கிட்டத்தட்ட கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு' parallel-ஆக பயணிக்கிறது இந்த கதை. 'பொன்னியின் செல்வனில் வந்த அருண்மொழிய்ம், ஆதித்த கரிகாலனும், குந்தவையும், வந்தியத்தேவரும், ரவிதாஸனும், வீரபாண்டியனும் இந்த புத்தகத்தில் வருகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் Negative Characters-ஆக வருகின்றனர். பொன்னியின் செல்வனை தீவிரமாக நேசிப்பவர்களுக்கு 'கடிகை' பிடிப்பது சற்று கடினமே.

நான் படித்த ஜெயகாந்தனின் இரண்டாவது நாவல். ஒரு வாக்கியத்தில் விவரிக்க வேண்டும் என்றால் இது ஒரு முதிர்ச்சியான & அற்பமான காதல் கதை. அற்பம்? ஜெயகாந்தனின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் 'காதல் மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும்'. நாமெல்லாம் காதல் என்று நினைத்து செய்யும் ஆக்கிரமிப்பையும், காதலை ஏற்றுக்கொள்வது என்ற பெயரில் அந்த மனோ பலாத்காரத்தை ஏற்றுக்கொள்வதையும், அதனால் சுயத்தை இழப்பதையும், அந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளாத சமயத்தில் காதலே தன்னை அழித்துக்கொள்வதையும் மிக நிதானமாக, அதே சமயம் நறுக்கு தெரித்தது போல எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கையும் இப்படி தான் போய்கொண்டு இருக்கிறது. இந்த கொடுமையை அகற்ற முயலுவதைவிட, மானுட இயல்பேயான இதனின்றும் விலகுவதே விவேகம். இதை படிக்கும் பொறுமை இருந்தால் இந்த இளம் சமுதாயம் நிறைய விவாகரத்துகளை தவிர்க்கும்.

{mosimage}'சில நேரங்களில் சில மனிதர்கள்' - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது. இதை முதலில் நான திரைப்படமாகத்தான் பார்த்தேன். எனது 13ஆம் வயதில், DD-1இன் மாநில மொழி திரைப்பட வரிசையில் ஒரு ஞாயிற்றுகிழமை மதியம் பார்த்தேன். அந்த சமயம் நான் ராமாயணம், மகாபாரதம் என இதிகாசங்களை படித்து முடித்திருந்த சமயம். அதில் வந்த chauvinistic கருத்துக்களால் கற்பு, கலாச்சாரம் குறித்து ஒரு மாதிரியான அபிப்பிராயம் தோன்ற ஆரம்பித்திருந்த formative years-இல் இருந்தேன். அந்த படத்தில் லக்ஷ்மிக்கு (அதாவது கங்காவுக்கு) இழைக்கப்பட்டது கொடுமை என்று மட்டும் புரிந்தது. வேறு எதுவும் புரியவில்லை. காலப்போக்கில் எனக்கு அந்த படத்தை பற்றி நிறைய மறந்து போய்விட்டது. கடந்த வாரம் வேறு சில புத்தகங்கள் வாங்கப்போன போது இந்த நாவல் கண்ணில்பட்டு வாங்க நேர்ந்தது.