மீண்டும் அந்த ஞாபகங்கள்
இது மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் புத்தகங்களில் ஒன்று. அவருடைய பல (சற்றே பெரிய) சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம் & மீண்டும் அந்த ஞாபகங்கள்' என்பது அந்த ஒரு சிறுகதைகளில் ஒன்று. பல கதைகள் இருப்பினும் நம் மனதில் சட்டென ஒட்டிக்கொள்வது இந்த 'மீண்டும் அந்த ஞாபகங்கள் தான்'. அத்தனை கதைகளிலும் இது மட்டுமே காதல் கதை. மற்றவை அனைத்தும் மனிதத்துவத்தின் பல்வேறு நிலைகளில் தனிமையின் தாக்கத்தை கூறுபவை. பொதுவாகவே ஸ்டெல்லா புரூஸின் எழுத்துக்களில் தனிமை கொஞ்சம் தூக்கலாகவே இழைந்தோடும் எனவே இந்த சிறுகதைகள் மட்டும் அதற்கு விலக்கல்ல. இருப்பினும் நம் மனதை பாறாங்கல் போல அழுத்தும் melodrama அல்ல. படித்து முடித்ததும் நாம் அந்த மனிதர்களை நம் அண்டை அயலாரிலேயே பார்க்கலாம். இந்த புத்தகத்தில் மொத்தம் 6 சிறுகதைகள் உள்ளன.இது திரு. ஸ்டெல்லா புரூஸின் கடைசி எழுத்துக்களில் ஒன்று என்கிற நினைப்பே நம் மனதில் பாரம் ஏற்றுகிறது.