ஸ்டெல்லா புரூஸ்இது மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் புத்தகங்களில் ஒன்று. அவருடைய பல (சற்றே பெரிய) சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம் & மீண்டும் அந்த ஞாபகங்கள்' என்பது அந்த ஒரு சிறுகதைகளில் ஒன்று. பல கதைகள் இருப்பினும் நம் மனதில் சட்டென ஒட்டிக்கொள்வது இந்த 'மீண்டும் அந்த ஞாபகங்கள் தான்'. அத்தனை கதைகளிலும் இது மட்டுமே காதல் கதை. மற்றவை அனைத்தும் மனிதத்துவத்தின் பல்வேறு நிலைகளில் தனிமையின் தாக்கத்தை கூறுபவை. பொதுவாகவே ஸ்டெல்லா புரூஸின் எழுத்துக்களில் தனிமை கொஞ்சம் தூக்கலாகவே இழைந்தோடும் எனவே இந்த சிறுகதைகள் மட்டும் அதற்கு விலக்கல்ல. இருப்பினும் நம் மனதை பாறாங்கல் போல அழுத்தும் melodrama அல்ல. படித்து முடித்ததும் நாம் அந்த மனிதர்களை நம் அண்டை அயலாரிலேயே பார்க்கலாம். இந்த புத்தகத்தில் மொத்தம் 6 சிறுகதைகள் உள்ளன.இது திரு. ஸ்டெல்லா புரூஸின் கடைசி எழுத்துக்களில் ஒன்று என்கிற நினைப்பே நம் மனதில் பாரம் ஏற்றுகிறது.

எண்டமூரி விரேந்திரநாத்தெலுங்கில் ‘ப்ரேமா’ என்ற பெயரில் எழுதப்பட்டு தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எண்டமூரியின் இந்த நாவலை நான் ஏற்கனவே படித்து இருக்கிறேன் ஆனால் சரியாக நினைவில்லை. இம்முறை மீண்டும் படித்தபோது எனக்கு பிடித்து இருந்தது. தலைப்பு ’காதல் எனும் தீவினிலே’ என்றிருந்தாலும், என்னை பொருத்தவரை இது வழக்கமான காதல் கதை என்று ஒதுக்கிவிடமுடியாது. மனிதர்கள் பரஸ்பரம் வைக்கும் அன்பை, எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு லட்சியத்துக்காக வைக்கப்படும் அன்பை, நம்பிக்கையை அழகாக விவரிக்கிறது இந்த நாவல். It worked for me for various reasons - ஒரு எளிமையான கிராமத்தில் வாழும் எளிமையான மக்களிடையே நடக்கும் நாவல் என்பதால் எழுதப்பட்ட நடையும் மிக எளிமையாக இருக்கிறது. எனினும் கதை உலகளாவிய phenomenon-ஆன ஆழமான அன்பை பற்றி கொஞ்சம் complex-ஆகவே இருக்கிறது.

பாவை விளக்கு1958-ல் அகிலன் அவர்களால் எழுதப்பட்டு, பின்னர் அதே பெயரில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு புகழ் பெற்ற இந்த படைப்பை சமீபத்திய 32வது புத்தக கண்காட்சியில் வாங்கினேன். Quite a volumnous book by size. உருவத்தில் மட்டுமல்ல, உணர்விலும், கருத்திலும் கொஞ்சம் கனமான புத்தகம் இது. 60களின் திரைப்படங்களை போலவே கொஞ்சம் தூக்கலான melodrama-வும், யதார்த்தமும் விரவியுள்ள படைப்பு இது. இது ஒரு message based novel இல்லை. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை, அதிலும் ஒரு கலைஞனை, அவன் 17-18வது வயதில் இருந்து 35-40 வயது வரையான பரிணாம வளர்ச்சிகளை, உணர்ச்சிபூர்வமாக தொடர்ந்து எழுதப்பட்டது என்றபோதும் நாவல் முழுவதும் சமுதாய சிந்தனையும், அதன் தாக்கமும், கலைஞர்களின் உணர்ச்சி கொந்தளிப்புகளும் அது எப்படி அவர்களை சுற்றி உள்ளவர்களை பாதிக்கிறது என்பதும் இயல்பாக கூறப்பட்டுள்ளது. கடைசி வரை நமக்கு ஏன் இதற்கு பாவை விளக்கு என்று பெயர் வைத்திருக்கிறார் என்று புரியாவிட்டாலும், இதன் மூன்றாவது பாகத்தின் கடைசி பக்கங்களில் விளக்கம் கொடுத்து கச்சிதமாக பொருத்திவிடுகிறார் அகிலன்.

சுஜாதாஇந்த புத்தகத்தை பற்றி சொல்லும் முன்பு எனக்கு சொல்லத்தோன்றியது ஒன்றே ஒன்று. இயக்குநர் மணிரத்னத்துக்கும் சுஜாதாவுக்கும் பொதுவான ஒரு விஷயம் - இருவருடைய படைப்புக்களும் காலத்தை மீறி நிற்பவை. அதனால் தானோ என்னவோ இருவருக்கும் ”ரோஜா, பம்பாய், தில் சே..., கன்னத்தில் முத்தமிட்டால்..” என நன்றாக பொருந்திப்போனது. சுஜாதாவின் 'கொலையுதிர்காலமு'ம் அந்த வரிசையில் இடம்பெற்றதே. இது எழுதப்பட்டது 1981-ல் என்றபோதும், 28 ஆண்டுகளுக்கு பிறகு படிக்கும்போது அடுத்த நூற்றாண்டுக்கும் பொருந்துவதாக இருப்பது இதன் சிறப்பு. வழக்கம் போல ஒரு தொழிநுட்பத்தை எடுத்துக்கொண்டு சுஜாதாவால் அதை சுற்றி பின்னப்பட்ட ஃபார்முலா கதை. ஆச்சரியம் என்னவென்றால் அந்த தொழில்நுட்பம் இன்றும் வளர்ந்து வரும் நிலையிலேயே இருக்கிறது என்பது தான். அப்படியென்றால் சுஜாதா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை எத்தகைய தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று யூகித்துக்கொள்ளலாம். இருப்பினும் ‘கொலையுதிர்காலம்’ஒரே நிகழ்வை விஞ்ஞானத்தையும், பிசாசுகளை மையப்படுத்தும் பைசாசத்தையும் கொண்டு விவரிக்க முற்பட்டு அதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டிருப்பதிலும் ஒரு cult status-ஐ அடைகிறது. தங்கள் நம்பிக்கையை படிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இத்தனை பீடிகைகளுக்கு உள்ளாகும் ‘கொலையுதிர் காலம்’ தான் என்ன?

mulpaadhai

புத்தக விமர்சனத்துக்கு போகும் முன்பு இந்த புத்தகத்தை எப்படி நான் அறிந்தேன் என்பதற்கு ஒரு சிறிய கதை. அப்போது டி.டி-1 ல், சுஜாதாவின் ‘வாய்மையே வெல்லும்’ நாவல் ‘மறக்கமுடியவில்லை’ என்ற பெயரில் தொலைகாட்சி தொடராக வந்தது. அதனை அடுத்து ‘மறக்கமுடியவில்லை - 2’ என்று மற்றொரு கதை வந்தது. ஆனால் என்னால் அதை பார்க்கமுடியவில்லை. யதேச்சையாக 1 வாரம் மட்டும் பார்த்து இருந்தேன். பின்பு என் அண்ணி வீட்டுக்கு போனபோது பொழுதுபோகாமல் அங்கே இருந்த ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கினேன். பாதியில் நான் பார்த்த தொடரின் சில காட்சிகளை கதையின் சில பக்கங்களில் படித்தபோது எனக்கு ஆர்வம் அதிகமானது. விடாமல் வேகமாக 1 நாளில் அதை படித்து முடித்தேன். பின்பு தான் அதன் தகவல்களை படித்தேன். ’முள்பாதை’ என்பது அதன் பெயர், தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நாவல் (மீனா) என்றும் தெரிந்தது. For some strange reasons, அதை எழுதியது எண்டமூரி விரேந்திரநாத் என்று நினைத்துக்கொண்டேன். இது நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. நான் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு இந்த புத்தகத்தை தேடினேன்... தேடினேன்... தேடிக்கொண்டே இருந்தேன் ஆனால் கிடைக்கவில்லை... சமீபத்தில் 32வது சென்னை புத்தக கண்காட்சிக்கு போகும் வரை. அல்லையன்ஸ் பதிப்பகத்தாரின் ஸ்டாலில் இந்த புத்தகத்தை பார்த்தவுடன் அப்படி ஒரு பரவசம். எனினும் கடந்த வாரம் சேலம் போனபோது தான் முழுமூச்சாக படிக்க முடிந்தது.

32 Chennai Book fairவருடாவருடம் சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை பற்றி அறிந்திருந்தாலும், இந்த வருடம் தான் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் வளாகத்தில் அம்சமாக நடைபெற்ற இந்த கண்காட்சியை பார்க்க ஒரு நாள் பத்தாது என்று ஏற்கனவே எனக்கு எச்சரிக்கப்பட்டது. என்னால் 2-3 முறை எல்லா வரமுடியாது, எனவே ஒரே முறை ஆனால் ரொம்ப நேரம் இருப்பது போல போகவேண்டும் என்று முடிவு செய்து, பொங்கல் தினத்தன்று போனேன். உண்மையிலேயே திக்குமுக்காடிப்போனேன். கிட்டத்தட்ட 400 ஸ்டால்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள், ஒட்டு மொத்தமாக 8 லட்சம் பார்வையாளர்கள் என எல்லாமே கொஞ்சம் ‘மெகா’வாக இருந்தது. இருப்பினும் என்னை அதிகம் சந்தோஷப்படுத்தியது என்னவென்றால் இருந்த ஸ்டாலில் கிட்டத்தட்ட 80% கடைகள் நல்ல தமிழ் புத்தகங்களை விற்றதே. தமிழ்நாட்டில் இத்தனை பதிப்பகங்களா? தமிழில் இவ்வளவு புத்தகங்களா என்று வியக்க வைத்தது. ஸ்டால் வைத்திருந்தவர்கள் அனைவரும் கிரெடிட் கார்ட் வாங்கும் வசதி வைத்திருந்தால் நான் இன்னும் அதிகமாக வாங்கி இருப்பேன். நான் வாங்கிய புத்தகங்கள் என்னென்ன?

பொன்னியின் செல்வன்நவீன கால தமிழ் இலக்கியத்தின் முக்கியமான மைல்கல் இந்த ‘பொன்னியின் செல்வன்’. நான் 4-5வது படிக்கும்போது என் அம்மா இதனை படித்து காண்பித்தார். அப்போதே என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. எனினும் இதனை நான் அபுதாபிக்கு போனபிறகு தான் படிக்க முடிந்தது. ஐய்யோ..! வெறும் எழுத்துக்கள் மூலமே நம் மனக்கண்ணில் இப்படி பழங்கால தமிழகத்தையும், வளமான வாழ்க்கையையும், ராஜதந்திரங்களையும் விறுவிறுப்பாக கொண்டு வந்து நிறுத்தமுடியுமா? என்று பிரமிப்பு தான் வந்தது. இந்த பிரமிப்பில் எனக்கு ‘பொன்னியின் செல்வனின்’ நிறைகுறைகள் எதையும் சீர்தூக்கி கூட பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் சொல்லபோனால் இந்த புத்தகம் படிக்க படிக்க என் மனத்திரையில் படமாக விரிந்து ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் நான் மீண்டும் அதிகமாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்ததற்கு அபுதாபியில் படித்த ‘பொன்னியின் செல்வனும்’ ஒரு முக்கிய காரணம். அபுதாபியில் இருந்து திரும்பி வந்தபோது நான் பெற்ற இன்பம் என் தமிழ் நண்பர்களும் பெறட்டும் என்று அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். மீண்டும் படிக்க ஆரம்பித்தபோது 1 மாதத்திற்குள்ளாக 5 பாகங்களையும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படிக்க ஆரம்பித்தேன்.

LajjaThis dark, broody tale is set in Bangladesh amidst the riots of 1992 followed by the destruction of Babri Masjid in India. The protagonists of this novel are the Duttas - Sudhamoyi, his wife Kiranmoyee, son Suranjan and daughter Maya. It unfolds and moves forward in the perspective of Suranjan, whose belief in the leftists and communism were shattered by the happen ings around him including the abduction of his sister Maya. Quite a depressing tale of the turmoils a minority Hindu family in Dhaka undergoes. Lajja tracks the journey of people who believed in their homeland, love for the mother nation and the same things being crumbled and crashed by the fundamentalists and communals. The gradual transformation of East Pakistan to Democratic Bangladesh & from secular Bangaldesh to Islamized one are discussed in detail. At times the novel tends to be documentric with lot of statistics thrown in about gore rapes and plundering. However it took a lot of guts for the author Taslima Nasrin to throw stones living from the glass tower. Quite moving and poigant, relevant even after 17 years of writing, but not recommended for a timepass reading. - {oshits} reads for this post

பத்து செகண்ட் முத்தம்டில்லியில் நடந்த 1983 ஆசிய விளையாட்டு போட்டியின் போது சுஜாதா எழுதிய இந்த கதை ஒரு காதல் கதை அல்ல. உலகளாவிய பந்தயங்களில் கலந்துக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்த சில விநாடிகளுக்காவே தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிக்கின்றனர். அவர்களுடைய சிந்தையும், உடம்பும் விளையாட்டையன்றி வேறு எதுவும் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு பெண் ரசி என்கிற தமிழரசி, தன் கோச் மற்றும் மாமாவான ராஜ்மோகனின் மேற்பார்வையில் உலக சாதனையை நிகழ்த்தும் முயற்ச்சியில் இருக்கிறாள். இடையில் ரிப்போர்ட்டர் மனோ மூலம் அவள் மனதில் காதல் நுழைகிறது. ராஜ்மோகனின் அளவுகடந்த கண்டிப்பும், சாதனை நிகழ்த்தும் முனைப்பும் காயப்படுத்தியிருந்த தமிழரசியின் மனதுக்கு இந்த காதல் அமிர்தமாக இனிக்கிறது. விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிடும் மனநிலைக்கு போகிறாள் ரசி. தடுமாறிய ரசியின் விளையாட்டு ஆர்வத்தை மீண்டும் விளையாட்டுக்கு திருப்ப ஒரு பெறும் விலை கொடுக்கப்படுகிறது. மொத்தமே 2-3 நாட்களில் நடப்பதாக எழுதப்பட்ட இந்த நாவல் கீழே வைக்க தோன்றாத அளவுக்கு விறுவிறுப்பாகவும், மனதை தொடுவனவாகவும் உள்ளது. விசா பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள இந்த 104 பக்கங்களும், ரூ. 50/- விலையும் கொண்ட புத்தகம், நிச்சயம் உங்களை கவரும்.

நான் படித்த இந்த ஜெயகாந்தனின் நான்காவது நாவல் நான் மலையாள படங்களை பார்க்க ஆரம்ப காலத்தை நினைவூட்டியது. பரபரப்பான larger than life தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை பார்த்து பழகிய எனக்கு மலையாள படங்களின் எளிமையும், இயல்பான open endings-உம் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. பின்பு மெல்ல மெல்ல இந்த உயிரோட்டமுள்ள கதையோட்டங்களுக்கு பழகிய பின்பு இந்தி படங்களும், தெலுங்கு படங்களையும் பார்ப்பது மிக கஷ்டமாக இருந்தது. (இப்போதைய நிலைமை முற்றிலும் தலைகீழ் என்பது வேறு விஷயம்). அதுபோல ஒரு தொடக்கம், பிரச்சினை, விவாதம் பின்பு முடிவு என்ற format-க்கு பழகிவிட்ட என் போன்ற வாசகர்களுக்கு, இந்த எளிமையான ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” நாவலின் போக்கு முதலில் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. ஆனால் கதையோடு ஒன்றிவிட்டு படிக்கும்போது இந்த நாவல் நம்மை ஒரு அழகான, சுற்றுப்புற சூழலாலும், மக்கள் மனதாலும் மாசுபடியாத அற்புதமான் உலகத்துக்கு கொண்டு சென்றபிறகு அந்த உலகத்தை விட்டு வரவே தோன்றாத அளவுக்கு ஐக்கியமாக முடிந்தது. படித்த பின்பு இந்த நாவலை பற்றிய விவரங்களை அறிய இணைதளத்தில் தேடியபோது தான் தெரிந்தது இது அவர் எழுதிய master piece-களில் ஒன்று என்று. Sometimes ingnorance can be a bliss.

Five Point SomeoneThere are many factors that made me connect with Chetan Bahag's "Five Point Someone..." - (a) I belonged to dumb Mechanical Engineering Department deprived of girls... (b) I am someone who always believe that there is a life beyond the academics (& now work) even if it costed me the percentages (now appraisals)... (c) Screwed up an year in sitting for improvement exams to get into an Engineering college, who degree I never used in my life till date... Welcome to the world behind the closed doors of the gates of IIT, where life is pretty dull and reticent besides being amidst of plush and posh campuses sprawling over in hundres of acres... This Chetan Bhagat's best seller (to be a major movie soon) is deeply engaging for anybody who had spent their colleges  IIT-ians or Non IIT-ians. Chetan's simple English and a free flowing narrative structure makes it a reader's delight.

சித்திரப்பாவைஅகிலனின் சித்திரப்பாவை - தமிழுக்கு முதன்முதலில் சாகித்திய அகாடெமி விருதை கூட்டிவந்த பெருமை இந்த நாவலுக்கு உண்டு. இதை நான் முதலில் டி.டி-1ல் தொலைக்காட்சி தொடராக பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். சற்று complex-ஆன கதையெங்கிலும், அந்த இளம் வயதிலேயே எனக்கு மனதை கவர்ந்த படைப்பாக விளங்கியது. இருப்பினும் அதை புத்தகமாக படிக்க ஏன் எனக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்தன என்பது சற்று விந்தையே. கடந்த முறை மதுரைக்கு போனபோது, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே இருந்த ”சர்வோதயா நூல் நிலையத்”தில் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அடுத்தடுத்த வார இறுதிகளில் சேலம், மற்றும் ஆலப்புழைக்கு போனபோதே இதை படித்து முடிக்க முடிந்தது. இதை படிக்கும்போதே ஏன் இதற்கு விருது கொடுக்கப்பட்டது என்று தெளிவாக புரிந்தது. 1960-களின் இறுதியில், சென்னைப்பட்டணம் “மதராஸ்” ஆக மாறி வரும் காலக்கட்டத்தில், அதே நேரத்தில் பழைய தலைமுறையும், கலாச்சாரமும் மாறிவரும் சூழ்நிலையில், மனிதத்தையும், கலாச்சாரத்தையும் மதித்து புதிய பொருளாசை நிறைந்த கலாச்சாரத்துக்கு மாறமுடியாத மனிதர்களின் பின்புலத்தில், கலையும், காதலும் வழிந்தோடிய அற்புதமான கதை இது. இதை படித்து முடிக்கும்போது இதில் வரும் ஆனந்தியும், அண்ணாமலையும், மாணிக்கமும், சுந்தரியும் ரத்தமும் சதையுடனும் நம்மிடையே உலாவிய பாத்திரங்களைபோல ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்.