Yandamoori Virendranathதெலுங்கு எழுத்தாளர் “யண்டமூரி” விரேந்திரநாத் தனது படைப்பான இந்த புத்தகத்தில் Abstract பாணி கதை சொல்லும் முயற்சியை கையாள முயற்ச்சித்திருக்கிறார். Abstract பாணி என்பது சில நிகழ்ச்சிகளை கொஞ்சம் மிகைப்படுத்தி படிக்கும் வாசகர்களை அதிர்ச்சி அடையவோ அல்லது amuse செய்தோ தான் சொல்லவந்ததை வேறு விதமாக அவர்களது மனதில் பதிக்கும் முறை. வித்யாதரி புத்தக கடையில் த்ரில்லர் என்ற புத்தகத்தை வாங்கி அதில் வெறும் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருப்பதை கண்டு பொழுதுபோக்காக தன் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கிறாள். சிறிய வயதிலிருந்து சூழ்நிலைகள் காரணமாக ஆண்களை வெறுக்கும் வித்யாதரியை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி தன்னுடைய காதலை சொல்கிறான் அனுதீப். அவ்வப்போது தன் காதலை நிரூபிக்க சில சில அதிசயங்களை நிகழ்த்திக்காட்டும் அனுதீப்பிடம் வித்யாதரிக்கு காதல் தலைதூக்கும் போதெல்லாம் அந்த அதிசய நிகழ்ச்சிகளுக்கு logical reasoning மூலம் காரணம் கற்பித்துக்கொண்டு வித்யாதரி அவனை மேலும் மேலும் அவமானப்படுத்துகிறாள். கடைசியில் அதிசயங்களின் உச்சக்கட்டமாக உலகமெங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுகிறான் அனுதீப். அந்த ஆச்சரியத்தில் இருந்து மீளும் வித்யாதரிக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. பல இடங்களில் இந்த புத்தகம் Mushy romance என்னும் அளவுக்கு காதல் காதல் காதல் என்று ஒரே லெக்சராக இருக்கிறது. கடைசியில் அந்த எல்லாமே காதல் என்பது சுயநலமில்லாத எதிர்பார்ப்பில்லாத அன்பு, காதல் என்பது காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்ச்சி என்கிற cliche-க்களுடன் முடிகிறது. கதை Abstract முயற்சி என்பதால் அனுதீப் யாரென்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்த எழுத்தாளர் விரேந்திரநாத்தே வித்யாதரியை பார்த்து விளக்கம் கூறிவிட்டு அவளிடம் இருக்கும் “த்ரில்லர்” நாவலை எடுத்துக்கொள்வதாக முடித்திருக்கிறார். புது வகையான முயற்சி என்பதால் பாராட்டலாம் என்றாலும் நீளத்தையும், பல இடங்களில் வளவளவென்று தேவைக்கு மீறிய வசனங்களையும் குறைத்திருந்தால் இன்னும் எடுபட்டிருக்கும்.

SujathaIt is a long due... இந்த புத்தகத்தை படித்து ரொம்ப நாள் ஆனாலும் ஏனோ என் கருத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. பொதுவாக சுஜாதாவின் புத்தகங்கள் படித்து முடிக்கும்போது ஒரு வித பிரமிப்போடும், கதைகளத்தை பற்றிய புதிய ஞானத்தோடும் முடிப்பது வழக்கம். மாறாக இந்த மூன்று குறுநாவல்கள் (ரோஜா, ஜோதி, 6991) கொண்ட புத்தகத்தை படித்துமுடித்தபோடு ஒருவித சோக உணர்ச்சி நம் மனதை பிசைவதாக உணரமுடிகிறது. Quite unusual of Sujatha. (i)”ரோஜா” - துஷ்டனான ஒரு தொழிற்சங்க தலைவன் துரையால் கற்பழிக்கப்பட்டு இறந்துபோகும் இளம்பெண் லட்சுமியின் கொலையை துப்புதுலக்க வரும் இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு துப்பு கொடுப்பது ஒரு உதிர்ந்த ரோஜா மலர். ஏற்கனவே கற்பழிப்புகளை படித்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் என்னை இந்த நாவல் பாதித்ததில் ஆச்சரியமில்லை. குறிப்பாக லட்சுமியின் குருட்டு தாத்தா அவளுடைய கல்யாணத்துக்கால சேர்த்து வைத்த காசு உண்டியலை சிதறடித்து போலீஸிடம் பேசும் காட்சி. கதை தான் இப்படி என்றால் முடிவு இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது. (ii) ’6991’ - சிறிய வயதிலிருந்து அழகாக இருக்கும் ஒரே குற்றத்துக்காக பல முறை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் விமலாவின் மனப்போராட்டத்தை, பயணத்தை அவளுடைய பார்வையிலேயே, அதிக melodrama இல்லாமல் கொஞ்சம் sophisticated urban style-ல் சொல்லியிருக்கிறார். இதில் சுஜாதா ஓரளவுக்கு நம் மனதை தொடவும் செய்கிறார். (iii) ஜோதி - இந்த கதையை பற்றி அதிகம் நினைவில்லை. அதனால் pass. (புத்தக விவரம்: விசா பதிப்பகம், 120 பக்கங்கள், விலை: ரூ. 60/-) - {oshits} வாசகர்கள்!!!

Kurudhippunalஇது இந்திரா பார்த்தசாரதி எழுதி சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். நடிகர் கமல்ஹாசன் கோவிந்த் நிஹாலனியின் ‘துரோஹ்கால்’ என்ர இந்திப்படத்தை தமிழில் “துரோகி” என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ரசிகர்கள் ஆட்சேபித்ததால் அதன் தலைப்பை“குருதிப்புனல்” என்று மாற்றிய போது தான் அந்த பெயரில் ஒரு புகழ் பெற்ற நாவல் இருப்பதை அறிந்துக்கொண்டேன். என்றாவது ஒரு நாள் அந்த நாவலை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை இன்றைய ரயில் பயணத்தில் தான் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது. நம்புங்கள்... படத்தை (கதை வேறானாலும்) போல நாவலும் பரபரப்பாக இருந்தது. தஞ்சை கீழ்வெண்மணியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புணையப்பெற்ற இந்த கதை படிப்பவர்களின் மனதை உலுக்கிவிடும். அது என்ன கீழ்வெண்மணி சம்பவம்? Google-ல் தேடிக்கண்டு பிடிக்கும் பொறுப்பை உங்களுக்கு விட்டுவிடுகிறேன். மேலும் உங்களில் எத்தனை பேருக்கு - குருதிப்புனல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்?

Parisukku Poஇது நான் படித்த 6வது ஜெயகாந்தனின் படைப்பு. அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்று என்று அறிந்த பிறகே வாங்கினேன். மேல்நாட்டில் வாழ்ந்துவிட்டு பின் தன் தாய்நாட்டில் குடியேற விரும்பும் இசைக்கலைஞன் ஒருவன் கடைசியில் பாரீஸுக்கே போய்விடுவதாக முடிகிறது இதன் கதை. 1966-களில் எழுதப்பட்ட இந்த நாவல் இந்திய மேல்தட்டு சமூகத்தில் பழக்கவழக்கங்கள் ’நவீன முறை’ என்கிற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை தழுவிக்கொண்டாலும், கருத்து ரீதியாக சில நூற்றாண்டுகள் பின்தங்கியே இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஜெயகாந்தன். ‘பாரீஸுக்கு போ’வில் ஜெயகாந்தன் வாழ்க்கையும் கலைகளும் நவீனமுற வேண்டும், அப்படி ஆகவேண்டுமென்றால் மனதளவில் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று தன் கருத்தை நாவல் முழுவதும் வலியுறுத்துகிறார். ஜெயகாந்தனின் பாணியே கொஞ்சம் விஸ்தாரமாக எழுதுவது என்பதால் அவர் வார்த்தைகளை மனதளவில் படமாக விரித்து ரசிக்கவும், அவருடைய கருத்துகளை ஒத்துக்கொள்ளவும், மறுக்கவும் நிறைய வாய்ப்பளிக்கிறார்.

Click the image to read furtherமறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் கன்னி முயற்சி - நாவல் எழுதுவதில். இது இவர் திரைக்கதையாசிரியராக செய்த முயற்சி கைகூடாததால் நாவலாக மாற்றி தன்னுடைய முதல் நாவலாக எழுதினாராம் ஸ்டெல்லா. ஆனால் இந்த கதையை நான் திரைப்படமாக பார்த்திருக்கிறேன். அதை பற்றி கடைசியில் சொல்கிறேன். தலைப்பே சொல்லிவிடும் - இது ஒரு காதல் கதை என்று. இது ஒரு முக்கோண காதல் கதையும் கூட. குற்றாலத்திலிருந்து சென்னை வரும் வைத்தியநாதன், அவனது மேலாளர் சூர்யா (பெண்), அவனது சக ஊழியை ஆனந்தி என மூவரிடையே பின்னப்பட்ட காதல் வலை தான் - ஒரு முறை பூக்கும். இறுதியில் யாருடைய காதல் ஜெயித்தது என்பது தான் முடிவு. ஒரு சிறந்த எழுத்தாளருடைய கன்னி முயற்சி என்பதை தவிர பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை.

சாருலதாஇம்முறை சென்னை புத்தக கண்காட்சியில் நான் அதிகம் வாங்கியது ரவீந்த்ரநாத் தாகூரின் படைப்புக்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள். (இம்முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு போனது பற்றி ஒரு பதிவு இடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் நேரம் தான் கிடைக்கமாட்டேன் என்கிறது). சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே மாறி மாறி சுற்றிக்கொண்டிருந்ததாலும், புது வீடு ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதாலும், படிக்கவும் அதிகம் சமயம் கிடைக்கவில்லை. எனினும் ஒரு சிறிய புத்தகமாக பார்த்து எடுத்து படித்தேன். அது ரவீந்த்ரநாத் தாகூரின் - சாருலதா. வங்காளத்தில் “நஷ்டநீர்ஹ்” (உடைந்த கூடு) என்ற பெயரில் வெளிவந்து, பின்னர் 1964-ல் திரு. சத்யஜித் ரே அவர்களால் “சாருலதா” என்ற பெயரில் எடுக்கப்பட்டு பல விருதுகளை அள்ளியதாம். இன்றும் தனக்கு மிகவும் திருப்தி தந்த (என்னை அந்த படத்தை மீண்டும் எடுக்க சொன்னால் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே எடுக்கும் அளவுக்கு நிறைவான படம் - சத்யஜித் ரே) படைப்பாக சத்யஜித் ரே-யால் சிலாகிக்கப்பட்ட பெருமை இந்த சாருலதாவுக்கு மட்டுமே உண்டு. இதன் கதை என்ன? உறவுகளில் உள்ள சிக்கல்களை, அதன் complexity-ஐ காமத்தை மீறிய ஈர்ப்பை இயல்பாக சொல்கிறது இந்த குறுநாவல்.

Sagarasangamamதெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி விரேந்திரநாத் எழுதி, தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலை சமீபத்திய பயணத்தில் தான் படித்தேன். பெங்களூரில் இருந்து வரும்போது ஏறிய அந்த பாடாவதி Express Bus-க்கு நன்றி. என் வழக்கமான கொள்கைக்கு எதிராக ஒரு புத்தகத்தை முழுமூச்சாக படிக்க நேர்ந்தது அந்த பயணத்தில் தான். அதனால் தானோ என்னவோ அந்த நாவலின் தாக்கத்தை முழுமையாக என்னுள் இறக்கிக்கொள்ள முடிந்தது. படித்து முடித்தவுடனேயே கௌரி அவர்களுக்கு SMS மூலம் எனது கருத்தை அனுப்பினேன். அவ்வளவு பிடித்திருந்தது அந்த புத்தகம். எனினும் முழுவதுமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதை பற்றிய பதிவு வேண்டாம், ஒரு 3-4 நாட்கள் கழிந்த பின்பும் அப்படியே உணர்ந்தால் தோன்றியதை எழுதலாம் என்று சிறு அவகாசத்தின் பின்பு எழுதப்படும் பதிவு இது. பயங்கர பில்டப் கொடுக்கிறேன் எனவே இது ஒரு path breaking நாவலாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள். It is a 60-70s styled drama with an old world charm. சில சமயங்களில் பின்னோக்கி செல்வதும் ஒரு இனிமையான அனுபவமே.

ஐந்தாவது அத்தியாயம்சமீபத்தில் படித்த சுஜாதாவின் (சற்று பெரிய) சிறுகதை தொகுப்புகளில் ஒன்று - “ஐந்தாவது அத்தியாயம்”. இதில் “ஐந்தாவது அத்தியாயம்” மற்றும் “ஓரிரவில் ஒரு ரயிலில்” என இரு கதைகள் இருந்தன. இதில் என்னை கவர்ந்தது “ஓரிரவில் ஒரு ரயிலில்”. சக்திவாய்ந்த இந்து தலைவரான சுவாமி ராஜ் பண்டிதருக்கு பாதுகாப்பாக வரும் அஷோக்குக்கு சுவாமிஜி அருள்வாக்கு சொல்கிறார் - அவனுடைய வருங்கால மனைவி, இரண்டாவது எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டு, அதே ரயிலில் வருகிறாள் என்று. ஆச்சரியமாக அஷோக்கின் நண்பனுடைய தங்கையான பிருந்தாவும் அதே ரயிலில் வர... அந்த ஓரிரவில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கும் குறுநாவல் - ”ஓரிரவில்..”. அடுத்த கதையான “ஐந்தாவது அத்தியாயம்” கணேஷ் - வசந்த் தோன்றும் ஒரு கொலை த்ரில்லர். தனது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் ஒரு தொடர்கதையில் வருவதாகவும், அதில் ஐந்தாவது அத்தியாயத்தில் தான் கொல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கும் ஆபத்து வரும் என்று அபூர்வா வக்கீல்களான கணேஷ் - வசந்தை அணுக.. குறித்த தினத்தில் கொலையும் நடந்துவொடுகிறது. (எனக்கு) கொஞ்சம் குழப்பமாக கதையாக முடிகிறது. மேலும் இதில் பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. உங்களில் யாரேனும் இந்த “ஐந்தாவது அத்தியாய”த்தை படித்திருந்தீர்கள் என்றால் கொலைகாரர் யாரென்று பின்னூட்டமிடவும்... ப்ளீஸ்!!! {oshits} வாசகர்கள் இந்த பதிவுக்கு

The sky is fallingI picked up this novel during my recent trip to Bangalore. I expected to finish this novel in 10 days but to much of my surprise I finished it in 2-3 sittings. Normally I have problem with reading English novels because I used to forget the names of the characters, so everytime I read that book it is like - who this guy is? Sidney Sheldon's "The Sky is Falling" is quite racy and keeps you engrossed in major parts. Ms. Dana Evans, a famous TV reporter in WTN, sets out to unravel the mystery behind the successive murders of the Winthrops, who could be the kings if America is a dynasty. In the course Dana Evans travels across to the globe to hunt down the killer but realises that she is being hunted in the process. Quite an irresistable thriller, "The Sky is Falling" becomes predicatble towards the end and no brownie points for us guessing who the actual culprit would have been. To make this murder mystery a complete dish, Sidney Sheldon inserts a love making scene with her lover Jeff, laces the sentiments with a Rachel as a third angle of love triangle, the breast cancer element and adopting Kemel from Balkans. It may not be a great novel in the terms of characterisation or plot, but when it exists "The Sky is Falling" entertains you. Best recommended for a paperback reading!!!

விரும்பி சொன்ன பொய்கள்சுஜாதாவின் இந்த 1987-ல் ’குங்குமச் சிமிழ்’ இதழுக்காக எழுதப்பட்ட நாவல், ஒரு புதுமையான முயற்சி. நாவலின் கடைசியில் வரும் ஒரே வார்த்தையில் மொத்த நாவலின் course-உம் மாறிப்போகக்கூடிய சாத்தியம் உண்டு. The best part is - அந்த வார்த்தையை படிக்கும் வாசகர்களான நாம் முடிவு செய்துக்கொள்ளவேண்டும். கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால் இது ஒரு adult love story with a strong undercurrent of eroticism. கோபத்திலும், காமத்திலும் எப்போது obsession எனப்படும் ஒரு வெறித்தனமான நிலையில் இருக்கும் ராதாகிருஷ்ணனின் கடந்த காலத்தை அறிந்தும் அவனுக்கு வேலை கொடுக்குகும் புருஷோத்தமன், தன் இளம் மனைவி மந்தாகினிக்கு மதுரையை சுற்றிக்காட்டும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். கொஞ்சம் abnormal-ஆக நடந்துக்கொள்ளும் மந்தாகினியுடன் மரக்குடியில் சலனமான இரவில் கடற்கரை வெளியில் passionate உடலுறவு ஏற்படுகிறது. இப்போது ராதாகிருஷ்ணனுக்கு மந்தாகினி பைத்தியம் பிடித்துவிட அவளை தொடர்ந்து சென்னைக்கு வந்த இடத்தில் எதிர்பாராதது நடந்துவிடுகிறது. இந்த 80 பக்கக்கதையில் 78 பக்கங்கள் வரை ஒரு கண்மூடித்தனமாக காமம் / காதலில் விழுந்த மனிதனின் உளவியல்ரீதியான பயணமாக போய்விட்டு கடைசி 2 பக்கங்களில் சடாரென்று கியர் மாற்றி வேறு தளத்தில் முடிகிறது. ஆரம்பம் கொஞ்சம் மந்தமாக ஆரம்பித்தாலும் கதை சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் (உபயம்: மந்தாகினியின் உடற்கூறு பற்றிய சுஜாதாவின் வர்ணனை மற்றும் ராதாகிருஷ்ணனுடனான உடலுறவு) கதையில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வதை உணரமுடிகிறது. சுஜாதாவின் பலமே இந்த பளீரென்று முகத்தில் அடிக்கும்படியான எழுத்துக்கள் தான். நிச்சயம் இதை நான் (வயதுக்கு வராத) சிறுவர்களுக்கு படிக்க கொடுக்கமாட்டேன். ஆனால் பெரியவர்கள் இந்த கதைப்போக்கை உணர்ந்து பாராட்ட முடியும். இந்த புத்தகம் ஏற்கனவே என்னோடு இருந்தபோதும் இது குறித்த அனன்யாவின் பதிவை படித்தபிறகே ஒரு குறுகுறுப்பு வந்து ஒரே மூச்சில் படித்தேன், ரசித்தேன். புத்தக விவரங்கள்:- விசா பதிப்பாளர்கள், சென்னை; 80 பக்கங்கள்; விலை: ரூ. 38/- .

PreyI took up this novel on the suggestion of our Chef, Vijay and I enjoyed every bit of this Michael Chrichton's 2002 novel. What held me towards the novel was its intriguing start.. a Nanotech engineer Jack Forman is relegated to a full time husband, with his wife Julia's changing attitude making Jack doubt whether she is into any extra marital affairs. He joins her company Xymos on an urgent basis and has lot of shocks in store for him. This book is a beautiful blend of Biology, Engineering and Electronics. You need not be a technical guy to understand this book, but even a layman like me can be able to relate to. While reading I remembered many concepts I had read in school like mutation, symbiosis and I got an idea / insight about nanotechnology. Since the novel was told by Jack in first person, the novel takes a re approach instead of being non committal. The novel is a page turner right from the page 1 with the emotional contents making the page move in the first half and the encounters with the dangerous swarms moving the pages fast in the second half. Michael Chrichton had done his research seriously and it shows in the Bibliography section. A honest effort to blend information with entertainment. While reading Michael Chrichton I remembered a lot about Tamil writer Late. Sujatha's style especially with the way they educate their readers. Now I am planning to read as much Michael Chrichton's works as possible. This is the first book I read it in pdf completely. While I was going to Salem last weekend standing on the crowded train, I couldn't resist reading this book in my iPod touch's screen and I didn't move a bit here and there for 5 hours. I was engaged so much by this novel.

Aaaa....சுஜாதா எழுதிய இந்த ‘ஆ’ நாவல் இதனை படிப்பவர்களை நிச்சயம் ‘ஆ’ என்று வாயை பிளக்க வைக்கும்.. கொட்டாவி விடுவதற்கு அல்ல... பிரமிப்பில்... பயத்தில்.... ஆச்சரியத்தில்... 1992-இல் குமுதத்தில் தொடராக எழுதப்பட்ட இந்த கதை முற்பிறவி / Split personality / பேய் என்று பல விஷயங்களை உள்ளடக்கியது. இது பேய்க்கதையா இல்லை விஞ்ஞானபூர்வமான கதையை என்று படித்து முடித்த பின்பு தான் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் படிக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வாக்கியத்திலும், ஒவ்வொரு எழுத்திலும் போதை போல / விஷத்தை போல விறுவிறு என்று நம் மண்டைக்குள்ளே பரபரப்பு ஏறுவதை உணரலாம். முடிவில் இது அறிவியல் ரீதியாக அலசப்படுவதும் சுவாரசியமாக தான் இருக்கிறது. இது தொடர்கதையாக வந்த காலத்தில் படித்த பல வாசகர்கள் தங்களுக்கும் அது போன்ற அமானுஷ்ய குரல்கள் கேட்பதாக சுஜாதாவுக்கு எழுதினார்களாம். அதற்கு சுஜாதா ஒரு கற்பனை கதையை நம்பும்படியாக எழுதுவதால் வரும் பின்விளைவுகள் என்று பதிலளித்திருக்கிறார்.