ஆதலினால் காதல் செய்வீர்மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் இந்த படைப்பை சமீபத்தில் சென்னை ரயில் நிலைய ஹிக்கின்போத்தம்ஸில் பிடித்தேன். நாவலை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - Simply hilarious!!! ஆரம்பத்திலேயே கதையை யூகிக்க முடிந்தாலும், அடுத்த 142 பக்கங்களில் நம்மை கிட்டத்தட்ட விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறார். Diametrically opposite-ஆக - காதல் அவசியமில்லை என்ற ஆரிஸ், காதலிக்கவே பிறந்த ஜோமோ, விற்பனை பிரதிநிதியான கிட்டு / கிட்டா, கல்யாணம் ஆனபின்பும் மனையுடன் கடிதத்தில் காதலிக்கும் பார்ஸ்ஸாரதி மாமா என நான்கு நண்பர்கள், அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் - அபிலாஷா, அபிராமி, ஷாலினி, கஸ்தூரி மற்றும் நீலா ஆகிய பெண்கள் என செம ரகளை. இந்த நாவலை யாரும் இன்னும் சினிமாவாக எடுக்க முயற்சிக்காதது ஆச்சரியம் தான்.

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் penultimate என்று சொல்லக்கூடிய அந்த முக்கிய உச்சக்கட்டங்கள் இந்த ஐந்தாவது பாகத்தில் தான் நடைபெறுகின்றன. நான்கு புத்தகங்களில் வந்த சம்பவங்கள் எல்லாம் இந்த பாகத்தில் வந்து ஒரு புள்ளியில் குவிந்து முழுமை அடைகிறது. கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றபோதும், அவர்களின் நடத்தைகளுக்கு காரணம் கற்பிப்பதாக இந்த பாகம் முடிகிறது. என்ன தான் கற்பனை கதை என்று சொன்னாலும், வரலாற்றை மாற்றுவதாக எழுத முடியாதே. இந்த ஐந்தாம் பாகத்தில் என்ன நடக்கிறது?

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் நான்காவது பாகம் முடித்து இரண்டு வாரங்கள் ஆனபோதும் இதை பற்றி எழுத சமயம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு நேற்று ஐந்தாவது பாகத்தை ஆரம்பித்துவிட்டேன். நான்காவது பாகத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் முக்கிய கதாபாத்திரங்களான அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், குந்தவை ஆகியோருக்கு கிட்டத்தட்ட வேலையே இல்லாதது தான். மாறாக மற்ற துணைப் பாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அநிருத்த பிரம்மராயர், ஊமை ராணி ஆகியோரின் பங்கே அதிகம். மேலும் ஒரு புதிய பெண் கதாபாத்திரம் - மணிமேகலை இதில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகத்தில் சம்பவங்கள் அதிகமென்றால், நான்காவது பாகத்தில் சதிவேலைகளும், சூழ்ச்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகையால் சிற்சில தொய்வுகள் இருந்தபோதும் நான்காவது பாகம் நன்றாகவே நகர்கிறது.

Ponniyin Selvanஒரு நெடிய பயணத்துக்கு கிளம்பும் ரயில் வண்டி ஆரம்பத்தில் மெதுவாக கிளம்பி, தண்டவாளத்தில் பழகிய பிறகு, இனி பயணமே முக்கியம் என்று வேகம் பிடிப்பது போல பொன்னியின் செல்வனின் முதல் இரண்டு பகுதிகளில் கதையின் சம்பவங்களை விட சூழலையும், பின்புலத்தையும் அதிகம் அலசிய பின்பு மூன்றாவது பாகத்தில் கதை வேகம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்களை விட இதில் தான் சம்பவங்கள் அதிகம். அதனால் கதை விறுவிறுப்பு கூடியுள்ளது போல தோன்றுகிறது. 1 வாரத்தில் மொத்த புத்தகத்தையும் (3வது பாகத்தை) படித்த எனக்கே சம்பவங்களை மீண்டும் யோசித்து பார்க்கும்போது சில காட்சிகள் விட்டுப்போகும்போது, இதனை வருடக்கணக்கில் தொடராக படித்த வாசகர்களின் நினைவு சக்தியை பாராட்ட தோன்றுகிறது. எனினும் இந்த பதிவில் மூன்றாம் பாகத்தின் கதையை சுருக்கமாக summarise செய்ய முயற்சிக்கிறேன்.

Ponniyin Selvan - 2கடந்த வார இறுதியில் பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகத்தை வெற்றிகரமாக படித்து முடித்ததும் இவ்வளவு சீக்கிரமாகவா என்று தோன்றியது? பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகம் படிப்பது ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' பார்ப்பதற்கு சமம். படிக்கும் நாமும் அந்த இயற்கையில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துவது. கோடிக்கரையின் மணல்வெளிகளும், கடலின் நுரையலைகளும், மரங்களும், புதர்களும் நம் மீது உரசுவது போன்ற effect - ஐ உணரலாம். இம்முறை கதை 10௦% தமிழக கடற்கரையிலும், 30% தஞ்சை அரண்மனையிலும், மீதி 60௦% இலங்கை காடுகளிலும் நடக்கிறது. அதனால் இந்த பாகத்தில் இயற்கையின் பங்கை வாசகர்கள் உணரலாம். மேலும் இந்த பாகத்தில் தமிழ் அரசர்கள் இலங்கை அரசியலின் மீது ஏற்படுத்திய பாதிப்பையும், தமிழ் வரலாற்றுடனான நெருக்கத்தையும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் கல்கி.

Ponniyin Selvanகடந்த சில வாரங்களில் அடுத்தடுத்த தஞ்சை பயணங்கள், அதுவும் அந்த இடங்களோடு நெருக்கமாக இருசக்கர வாகன பயணம்..... அதை தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே “பொன்னியின் செல்வன்” படிக்க ஆரம்பித்துவிட்டதால் திடீரென்று தஞ்சையோடு ஒருவித பூர்வீக பந்தம் இருப்பது போல ஒரு உணர்வு. குறிப்பாக இம்முறை “பொன்னியின் செல்வன்” படிக்கும்போது (கடந்த முறையைவிட) இன்னும் அதிக பரிச்சயம் தோன்றியது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அதில் திருவையார் குறித்த வர்ணனைகள் வரும்போது உண்மையாகவே திருவாரூர் சாலைகள் நினைவுக்கு வந்தன. நான் என்ன சொல்லவருகிறேன் என்பது “பொன்னியின் செல்வன்” படிக்கும் / படித்தவர்களுக்கு புரியும்.

Are you afraid of dark?I came to know much later that this was the last novel of Sudney Sheldon before his demise. 'AYAOF' starts of well with four different murders leaving the protagonists devasted. All the murders seam to have a common thread pointing towards the organisation the victims worked for - KIG. Two widows of the victims - Kelly Mark and Diane Stevens have their path crossed accidentally but find themselves as target in the prowling claws of the murderer. Till the halfway, SS manages to hold your attention well but this time Sheldon doesn't bother to maintain the suspense. Instead he lays the thread of the whodunit yarn bare and later the novel turns to be on run. Then the novel becomes so predictable and unintentionally funny with the so called powerful 'villians' reducing themselves to a comedy stock. After a while the 'run' of Diane & Kelly becomes stale. At this point it reminds you a lot of SS's other novels - "If Tommorrow Comes", "The sky is falling" etc. However the saving grace of this novel is that it tried to get into the emotional domain of the widows and it works except for Ms. Reynold's episode. It might have been good if SS's other novels were not read but defintely not a worthy swan song for Sidney Sheldom. - {oshits} reads.

DisclosureI know that I had catched up with Michael Chrichton's "Disclosure" almost 17 years after its publishing, but it is fine that atleast I was able to read it. First I saw this as movie ofcourse of the titillation factor. Thanks to Vijayakrishnan, I read MC's "Prey" after which I discovered MC. To be frank I read 'Disclosure' only for the graphical sexual encounter, but once I passed that, after a lull, the novel picked up so fast that I found it irresistable to keep it down. 'Disclosure' says that 'Sex is all about power' in the workplace rather than a means of harassment. It gives a peek inside the corporate world, where you need to be competent player to move ahead in the corporate ladder.

Click the image to read furtherமறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் புகழ் பெற்ற விஞ்ஞான நாவல்களில் ஒன்று "என் இனிய இயந்திரா" மற்றும் அதன் தொடர்ச்சியான "மீண்டும் ஜீனோ"வும். இதில் "என் இனிய இயந்திரா" முதலில் எனக்கு தொலைக்காட்சி தொடராக தன் அறிமுகம் ஆனது. அப்போது பதினொன்றாவது படித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்திலேயே எனக்கு அந்த நாவல் பிடித்திருந்தது. எனினும் அதை புத்தகமாக கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் தான் வாங்கினேன். அதை விட கொடுமை வாங்கியதை படிக்க ஒரு வருடம் பிடித்தது. முதலில் “என் இனிய இயந்திரா” படித்ததும் அதன் தொடர்ச்சியான “மீண்டும் ஜீனோ”வையும் தேடிப்பிடித்து படித்த பிறகே இது குறித்த எனது பதிவை போடவேண்டும் என்று பொறுத்து இந்த வாரம் “மீ. ஜீனோ” படித்த பிறகு பதிவு இதோ.

mounaragamதெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி எழுதி கௌரி கிருபாநந்தன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் இது. பணக்கார வீட்டில் வேலைக்காரனாக வளரும் ஒரு ஏழை கதாநாயகன் விஜய், அவனிடம் பாசமாக (மற்றும் நோயாளியாக) இருக்கும் பணக்கார வீட்டு வாரிசு அனூப், ஏழை கதாநாயகனை காதலிக்கும் கதாநாயகி ஹேமா, அவள் மீது (முக்கோண) காதல் கொள்ளும் பணக்கார வீட்டு வாரிசு, இவர்களது நெருக்கத்தை விரும்பாத அனூப்பின் தாத்தா தீட்சிதர், மேனேஜர் ஹரி.. இப்படி ஒவ்வொரு எழுத்திலும், பக்கத்திலும் cliche-க்களால் நிரம்பியிருந்தாலும், படிக்கும் போது கொஞ்சம் சுவாரசியமாகவே இருந்தது. குறிப்பாக விஜய்க்கும் ஹேமாவுக்கும் நெருக்கம் உண்டாகும் நிகழ்ச்சிகள். முடிவு என்னவாயிருக்கும் என்பதை கருவில் இருக்கும் குழந்தை கூட யூகித்துவிட முடியும். எனினும் ஏதோ ஒரு old world charm இருப்பதாக தோன்றியது எனக்கு. மேலும் இதில் மொழிபெயர்ப்புக்கும் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிப்பதாக கருதுகிறேன். அது ஏன் பெண் எழுத்தாளர்கள் எல்லாரும் சொல்லிவைத்தார் போல ஒரே நடையிலேயே எழுதுகிறார்கள்? முதல் பக்கத்தில் எழுத்தாளரின் பெயர் - லட்சுமி, ரமணி சந்திரன், அனுராதா ரமணன் என்று எந்த பெயர் போட்டிருந்தாலும் படிப்பவர்களுக்கு பெரிய வித்தியாசம் தோன்றியிருக்காது. கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் பொறுக்கப்பட்ட இந்த புத்தகத்தை ஏதோ ஒரு பயணத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்தபோதும் இந்த பதிவை எழுத இத்தனை நாட்கள் பிடித்தது. புத்தக விவரம்: 288 பக்கங்கள், ரூ. 65/-, கலா நிலையம், மயிலாப்பூர், சென்னை.

Amar Chitra KathaI lovely call Buttu as "Kapeesh kutty" sometimes because he resembles one of my all time favourite cartoon character. If you are above 30 and having the habit of reading novels in your young age then you might know who "Kapeesh" is. Else you may not be able to identify with my excitement. How many of you know the existence of children books like Ambulimama / Chandamama from Vijaya Combines, and its close rival Balamitra, Rani Comics, Muthu Comics, Poonthalir / Tinkle from Pai House? They were very popular in 1980s and with the advent of TV channels and Cartoon Network, the reading habit if the children were in decline and all the above were closed. However Chandamama was revived by a Mumbai based corporate after 2 years in a different format. Balamitra is dead I believe. Tinkle had relauched itself with Animation and digital copies along with the regular Amar Chitra Katha titles. {sidebar id=2} Today whatever I am, those Ambulimama and ACK played a great role in shaping me up in my formative days. Whatever English I know, is because of reading Chandamama in school days. I was disappointed when I learnt that Chandamama and its contemporaries had their shutters down. I am yet to get accustomed to the newly revived Chandamama format. When I was browsing online for Amar Chitra Kadha Comics, I found that many people of my intrest had scanned and uploaded the ACK titles. Again it was disappointing to see that blog is also closed. So to keep those novels live, I have decided to collect the links, torrents related to them and index them in my Library pages. Expect the titles of Amar Chitra Katha soon in My Library. Already I have ordered a collection online for Buttu. BTW - Kapeesh is a lovable small monkey with a tail expanding and contracting whenever it wishes.

சுஜாதாஅமரர் சுஜாதா எழுதிய இந்த புத்தகம் வாங்கி சரியாக 1 வருடம் 1 வாரம் கழித்து தான் படித்து முடிக்க நேர்ந்தது. கடந்த வருடம் அனன்யா அக்கா சென்னை வந்தபோது புத்தக கடைக்கு அழைத்து சென்றபோது அவருடைய பரிந்துரையில் பொறுக்கிய புத்தகம் இது. சுஜாதாவின் மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இது - (1) மேற்கே ஒரு குற்றம், (2) மீண்டும் ஒரு குற்றம் (3) மேலும் ஒரு குற்றம். வாங்கும்போதே அக்கா இதில் மூன்றாவது கதை அற்புதமாக இருக்கும், படித்துவிட்டு சொல் என்று சொன்னார். அதனால் இதை படிக்க ஆரம்பித்தபோது 3-1-2 என்ற வரிசையில் படித்தேன். தொடர்ந்து கணேஷ்-வசந்தை படித்த பாதிப்போ என்னவோ கடைசி (2) கதையை படிக்கும்போது ஆரம்பத்திலேயே முக்கிய முடிச்சை கண்டுபிடித்துவிட்டேன். என்னவோடா மகேஷ்வரா!!