அமரர் கல்கியின் புத்தகங்கள் மிக “voluminous" ஆக உள்ளது / படிக்க நேரமில்லை என்று சொல்லி அவற்றை படிக்காமல், அந்த சுவாரசியமான அனுபவங்களை இழந்த நண்பர்களுக்காக அனன்யா அக்காவின் நண்பர் திரு. பாம்பே கண்ணன் கல்கியின் காலத்தை வென்ற படைப்பான “பொன்னியின் செல்வன்” புத்தகத்தை ஒலிநூலாக (3 DVD தொகுப்பு) வெளியிட்டு இருந்தார். என் அம்மாவுக்காக நான் அதை வாங்கியிருந்தேன். இனிய அனுபவம்... இப்போது அவர் அமரர் கல்கியின் மற்றொரு காவியமான “பார்த்திபன் கனவு” புத்தகத்தை ஒலி நூலாக வெளியிடுகிறார். இதுவும் இனிய அனுபவமாக இருக்கும் என்று உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த படத்தை click செய்து திரு. பாம்பே கண்ணனை அனுகவும்.

I had almost abandoned the blogging habit which some of my friends condemn me for kicking off the expressing medium. When I wanted to restart the activity, I wanted to do something, that should add value for the people who visit my pages. Now Aadhithya is growing up and had started using his Asus 7" tablet for his drawing, writing and watching Rhymes. This made me think why can't I do something which will start the reading habits in him. What else is the best way than starting with Amar Chitra Katha comics.

 

கன்னிகள் ஏழு பேர்

இந்திராவிடம் எனக்கு எப்போதும் ஒரு பிரச்சினை... எப்போதெல்லாம் அவர் முகவுரையில் தன் நாவல் பற்றி ஆஹா ஓஹோ என்று சிலாகித்துவிடுகிறாரோ அப்போதே அந்த நாவல் மீது எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இம்முறை தனது எழுத்தாளர் பயணத்தை பற்றி சொல்லிவிட்டு, ஆன்மீக த்ரில்லர் வகையில் தான் மட்டுமே எழுதுவதாக சந்தோஷப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த “கன்னிகள் ஏழு பேர்” தனக்கு பெயர் சொல்லும் நாவலாக இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளார். மற்றவர்களுக்காக எழுதுவதும், தனக்கு திருப்திக்காக எழுதுவதும் பல சமயங்களில் எதிர்கோட்டில் பயணிக்கும் சமாசாரம். அதனால் அவரது இந்த “பெயர் சொல்லும் நாவல் ஆசை” எனது எதிர்பார்ப்புக்கு எதிர்கோட்டில் பயணித்துவிட்டது போல. கடந்த முறை “சிவம்” நாவல் படித்தபோதும் இத்த்கைய அனுபவத்துக்கு உள்ளானேன். எனினும் இந்த நாவலை நல்ல / கெட்ட நாவல் என்று judgemental-ஆக கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை. மேலும் ஒரு படைப்பாளியின் வயதை / அப்போதைய மனோநிலையை அவரது படைப்பை கொண்டு அறியலாம். இந்த நாவலில் இந்திராவின் வயது முதிர்ச்சி தெளிவாக புலப்படுகிறது. சொல்லப்போனால் இதை படிக்கும்போது எழுத்தாளர் பாலகுமாரனின் கடைசிகட்ட எழுத்துகளான “ரகசிய கண்ணி” மற்றும் காஞ்சி பெரியவரின் புகழ் பாடும் (பெயர் மறந்துபோன) நாவல்களை திரும்ப படிப்பது போல இருந்தது.

Panimalai

 

ரொம்ப நாளுக்கு அப்புறம் படித்த புத்தகம் இது. எனக்கு எண்டமூரியின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. முதல் சில பக்கங்களிலேயே இது “பெண்மை” பற்றி பேசும் புத்தகம் என்று தெரிந்தாலும், அவருடைய “பந்தம் பவித்ரம்” போல இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் படித்தேன். அந்த கல்லூரியின் கடைசி நாளில் வைஜெயந்தி, அனுராதா, விசாலி மற்றும் பார்கவி ஆகியோர் சில வருடங்களுக்கு பிறகு குறிப்பிட்ட இந்த நாளில் இதே மரத்தடியில் மீண்டும் சந்தித்து தங்கள் வாழ்க்கை எப்படி போகிறது, என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டன என்று பரிமாறிக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது. அப்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது இது பெண்கள் எப்படி “ஆணாதிக்க” சமுதாயத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரப்போகிறார்கள் என்ற கதையாக இருக்கும் என்று. நான் ஏற்கனவே episode format பிரியன் என்பதால் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.

Sujathaகொஞ்ச நாளாக புதிதாக எதுவும் படிக்கவில்லை. புத்தகம் எதுவும் கொண்டுவரவில்லை, ஏனோ எனது Amazon Kindle-ஐயும் கொண்டுவரவில்லை. என்றோ சுஜாதாவின் சிறுகதைகளை 4Shared வலைதளத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததும் அவற்றை பதிவிறக்கம் செய்து வைத்தேன். இருப்பினும் படிக்க நேரமே கிடைக்கவில்லை. ஊருக்கு கிளம்பும் excitement-ல் காலை 4:30 மணிக்கே எழுந்துவிட்டபோதும், விமானத்தில் தூக்கம் வராமல் ஒரே அசதி. திரையில் ஒன்றும் உருப்படியான படங்கள் இல்லாததால் என்ன செய்வது என்று யோசித்தபோது சுஜாதாவின் சில கதைகளை பதிவிறக்கம் செய்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. படித்துவிட்டு சுடச்சுட எழுதிய குறுவிமர்சனங்கள். இப்போது வானத்தில் பறக்கும்போது பதிவு எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம். இது இரண்டாவது முறை.

மாயநதிகள்

எந்த ஒரு கலைப்படைப்புமே ஒவ்வொரு வயதிலும் படிக்கும்போது / பார்க்கும்போது புது அனுபவத்தை அல்லது பரிமாணத்தை கொடுக்கும். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால் நீங்கள் மணிரத்தின் “மௌன ராக”த்தை படிக்கும்போது பார்த்தற்கும், கல்யாணம் / காதலிக்கும் போது பார்ப்பதற்கும் வித்தியாசம் தோன்றும். அதே போல “ஸ்டெல்லா புரூஸ்”ஸின் “மாய நதிகள்”புத்தகத்தை 5 வருடங்களுக்கு முன்பு படித்ததற்கும் இப்போது படித்ததற்கும் நிறைய வித்தியாசம். “மாயநதிகள்” மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்ஸின் பத்தாவது நாவல். எனினும் பெரிதாக பேசப்பட்ட அவரது படைப்புகளில் இதுவும் ஒன்று. மனித உறவின் / மனதின் சிதைவை இவ்வளவு நெருக்கமாக, தத்ரூபமாக வேறு எந்த நாவலாவது சொன்னதா என்று பட்டிமன்றம் போட்டே யோசிக்கலாம். அவ்வளவு நேர்த்தி. இதை நான் வைத்தியின் அறிமுகத்தால் முன்பு 2005-ல் படித்திருந்தேன். பின்பு இப்போது 6 வருடங்கள் கழித்து படித்தபோது இன்னும் அதிகமாக identify செய்துக்கொள்ள முடிந்தது.

ஏழாம் உலகம்பொதுவாக நான் dark-ஆன நாவல்களை / படங்களையும் படிப்பதை அல்லது பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். காரணம் அந்த அனுபவங்களிலிருந்து வெளியே வர எனக்கு நாட்கள் பிடிக்கும். அதனால் தான் ரொம்ப நாட்களாக ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை படிக்காமல் தவிர்த்து வந்தேன். இந்த நாவலை பாலாவின் ‘நான் கடவுள்’ வெளிவந்தபோது தான் முதன் முதலில் கேள்விப்பட்டேன். ‘நான் கடவுள்’ படத்தையே எனக்கு பார்க்க பிடிக்கவில்லை அப்படியிருக்க ‘ஏழாம் உலக’த்தை அவ்வளவு சீக்கிரம் படிக்க தோன்றுமா? எனினும் சமீபத்தில் ஜெயமோகனின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தவுடன் இதனை படிக்க முடிவு செய்தேன். இந்த நாவல் எதை பற்றியது என்று ஏற்கனவே தெரிந்துவிட்டதால் மனதை ஓரளவுக்கு தைரியப்படுத்திக் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். எனினும் நான் அந்த குறையிலிகளின் உலகத்துக்கு இழுத்துச்செல்லப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

Jeyamohanசமீபத்தில் (கடந்த 2-3 வருடங்களாக) ஏதோ ஒரு வகையில் ஜெயமோகனை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவரது எழுத்துகளை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்துக்கொண்டே இருந்தது. எங்கோ அவரது “விஷ்ணுபுரம்” பற்றி கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு அதை படிக்கவேண்டும் என்று தோன்றியது. எனது நண்பர் அண்ணாமலை சுவாமியிடம் ஒருமுறை அவரது எழுத்துக்கள் பற்றி கேட்டபோது “ஜெயமோகனின் எழுத்துக்களில் ஒரு ஆணவப்போக்கு இருக்கும். அது எனக்கு பிடிக்காது” என்று சொன்னார். மேலும் எனது circle-ல் நவீன இலக்கியம் படிக்கு நண்பர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஜெயமோகனின் எழுத்துக்களை பற்றிய சாமானியனின் கருத்துகள் கிடைக்கவில்லை. இப்படியாக 2-3 வருடங்கள் கழிந்துவிட்டன.

Pallavan Pandyan BhaskaranShift-ல் வேலை செய்யும்போது எப்போதுடா regular time-ல் வருவோம் என்று மனம் துடிதுடிக்கும். இப்போது மாலைகளில் வீட்டுக்கு வருவது என் அம்மாவுக்கு சங்கடமாக உள்ளது. காரணம் - அவர்களது மெகா சீரியல்கள் பார்ப்பது தடைபடுகிறது. வயதானவரை எதற்கு கஷ்டப்படுத்தவேண்டும் என்று என்னை அறைக்குள் சிறை வைத்துக்கொள்வதால் சில சமயம் SAP-ல் என்னை update செய்துகொள்வது, புத்தகம் படிப்பது என்று ஏதோ பொழுதுபோகிறது. அந்த வகையில் இன்று ஒரே மூச்சில் 328 பக்கங்கள் படித்து முடித்த புத்தகம் - “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதிய “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”. இ.சௌ-வின் புத்தகங்களை படித்தவர்களுக்கு அவருடைய ஆன்மீக த்ரில்லர்களின் layout தெரிந்துவிடும். அதிலிருந்து அச்சு அசல் மாறாத அடுத்த assembly production இந்த “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”.

Kanthaloor Vasanthakumaran Kathaiநான் படித்த சுஜாதா எழுதிய முதல் வரலாற்று புதினம் இது. தலைவர் மொத்தமே இரண்டு வரலாற்று நாவல்கள் தான் எழுதியிருக்கிறார் போல. இந்த நாவலை பற்றி பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ எனக்கு இந்த நாவலை பற்றிய ஓரளவுக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. அது பூர்த்தி அடைந்ததா என்று கேட்டால் பதில் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். பொன்னியின் செல்வன் முடிந்த சில காலங்களுக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் இதில் வருகின்றன. அதனால் நாம் பொன்னியின் செல்வனில் பார்த்த ராஜராஜ சோழனுக்கும், இதில் வரும் ராஜராஜ சோழனுக்கும் நிறைய வித்தியாசங்கள். மேலும் இதிலும் ராஜராஜ சோழன் கதாநாயகன் இல்லை. மாறாக பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல இதிலும் ஒரு ‘வ’ தான் கதாநாயகன் - வசந்தகுமாரன்.

Madhyamarமறைந்த எழுத்துலக ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா அவர்கள் தமிழ் நடுத்தர வர்கத்தினரை அடிப்படையாக கொண்டு எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்த ’மத்யமர்’. இது 1990-ல் கல்கியில் தொடராக எழுதப்பட்டாலும், கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கப்புறமும் பெரிய மாற்றமில்லாமல் நடுத்தர வர்க்கத்துக்கு பொருத்தமாகவே உள்ளது. மேலேயும் பணக்காரர்கள் வாழ்க்கைக்கும் போக முடியாமல், கீழே ஏழைகளின் வாழ்க்கைக்கும் இறங்கமுடியாமல் இரண்டாங்கெட்டானாக தவிக்கும் இந்த ‘மத்திய’ வர்க்கத்தை பின்புலமாக சோகம், துரோகம், தைரியம் என பலதரப்பட்ட ‘ரச’ங்களை கொண்டு எழுதப்பட்ட இந்த கதைகளை மேலும் சுவாரசியப்படுத்துகிறது ஒவ்வொரு கதைக்கப்புறம் பிரசுரிக்கப்பட்ட வாசகர்களின் கருத்து கடிதங்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி புத்தக கண்காட்சியில் வாங்கப்பட்ட இந்த புத்தகத்தை எடுக்கவே இவ்வளவு நாட்கள் பிடித்துள்ளது எனக்கு. 12 கதைகளையும், அதன் feedback-ஐயும் படிக்கும்போது கதைக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்தது போன்ற உணர்வு.

Marmadesamகிட்டத்தட்ட 90-களின் பிற்பகுதியில் - சன் டி.வி வீடுகளில் காலூன்ற ஆரம்பித்த சமயம் - cable TV connection இருந்த நகர்ப்புறங்களையும், டவுன்களையும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட முக்கால்வாசி தமிழகத்தை வியாழக்கிழமைகளில் பயமுறுத்தி முடக்கிய “பெருமை” கே.பாலசந்தரின் “மின் பிம்பங்க”ளுக்கும், இந்திரா சௌந்தர்ராஜன் - நாகா கூட்டணிக்கு மட்டுமே உண்டு. அவர்களது கைவண்ணத்தில் உருவான “மர்மதேசம்” தொடர் மூலம் தமிழக வாசகர்களின் முதுகுத்தண்டை உறையவைத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்த “ரகசியமாய் ஒரு ரகசியம்” ஒரு நாயை கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தது என்றால் அடுத்து வந்த “விடாது கருப்பு” ஒரு குதிரையை வைத்து தமிழ் நேயர்களை முடக்கிக்கொண்டிருந்தது. கடந்த முறை புத்தகங்கள் வாங்க போனபோது இது “விட்டுவிடு கருப்பா” என்ற பெயரில் புத்தகமாக பார்த்தேன், வாங்கினேன்.