தாராசுரம்
தாராசுரம் - தஞ்சையை போலவே எனக்கு ரொம்ப நாள் தண்ணி காட்டிக்கொண்டு இருந்த கோவில். முதல் முறையாக இதன் பெருமையை எனது UK நண்பர் திரு. இயான் வாட்கின்சன் (Ian Watkinson) மூலம் தான் அறிந்தேன். கேரளா சுவரோவியம் (Murals) வகுப்புக்கு இருவரும் சென்றிருந்தபோது எனக்கு சிற்பக்கலையின் மீது ஈடுபாடு உள்ளதை தெரிந்துக்கொண்டு அவர் தாராசுரம் கோவில் பற்றி சொன்னார். அன்றிலிருந்து எனக்கு அந்த கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. ஒரு முறை தஞ்சைக்கு போகும்போது தாராசுரத்துக்கும் போகவேண்டும் என்று பலமுறை யோசித்து இருக்கிறேன். கடைசியாக தாராசுரம் போனது மிக மிக அழகான அனுபவமாக விரிந்தது. காரணம் - எனது கல்லூரித் தோழன் LMS உடன் போனது தான். அடுத்த நாள் நாங்கள் கங்கைகொண்டசோழபுரத்துக்கும் போனோம். இந்த பதிவு இந்த இனிய பயணத்தை பற்றியது.