{mosimage}

ஓரு regressive கே. பாலசந்தர் படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கும். யதேச்சையாக online-இல் இதன் கதைச்சுருக்கத்தை படித்தவுடன் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியது. எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. ஒரு கல்லூரி பேராசிரியர் மீது அவர் மாணவி கற்பழிப்பு புகாரை வீசுகிறாள். கிணறு தோண்ட பூதம் புறப்பட்டது போல சரமாரியாக அடுத்தடுத்து இரு பெண்கள் மேலும் புகார் கூற பேராசிரியரின் பாடு திண்டாட்டமாகிறது. உலகமே அவரை கைவிட்டுவிட்ட சமயத்தில், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மட்டும் அவரை உத்தமன் என்று நம்புகின்றாள். படத்தை காப்பாற்றுவது நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. அனாவசியமான பாடல்களோ, தேவையற்ற பில்ட்-அப்களோ இல்லாமல், நேர்க்கோட்டில் வேகமாக பயணிக்கிறது இந்த கதை. ஸ்ரீவித்யா, லட்சுமி, விஜயலலிதா என மூன்று நாயகிகள் இருந்தும், நம் மனதில் பதிவது என்னவோ விஜயலலிதா தான். கே.பியின் வழக்கங்களான ஜெமினி கணேசனும், ஜெயந்தியும் வந்து போகிறார்கள். ‘உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’ பாடல் ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கிலும் நுனுக்கமான ஆனால் முக்கியமான வித்தியாசங்களுடன் வருவது நல்ல யுக்தி. ஆங்காங்கே கே.பியின் நாடகத்தனமான டச்சுகள் தெரிந்தாலும், ‘நூற்றுக்கு நூறு’ ஒரு வித்தியாசமான அனுபவமே!!!

இதை படித்த {oshits} வாசகர்கள்களில்... எத்தனை பேர் இந்த படத்தை இனிமேல் பார்க்கப்போகிறார்களோ தெரியவில்லை.

{mosimage}

நமக்கு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது & என்னுடைய அந்த வரிசையில் இடம் பெற்ற ஒரு திரைப்படம் - ‘சதி லீலாவதி’. கமல்ஹாஸன் - கிரேஸி மோகன் கூட்டணியின் முத்தான படைப்புக்களில் இதுவும் ஒன்று. படம் சீரியஸான படம் போல இருந்தாலும், இதில் வரும் காமெடி காட்சிகள் ஒரு நகைச்சுவை சுரங்கம். கமல்ஹாஸனின் சொந்த பேனரிலிருந்து வழக்கம் போல இதுவும் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் - மெரில் ஸ்ட்ரீப் நடித்து 1989-ல் வெளிவந்த ‘She Devil'-ன் தமிழ் பதிப்பு. இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளாமல் ‘கதை - அனந்து’, ’திரைக்கதை - பாலுமகேந்திரா’ என்று போடுவதிலிருந்தே காமெடி ஆரம்பித்துவிடுகிறது. நிமிஷத்துக்கு 100 காமெடிகள் வருவதால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமக்கு புதிதாக இருக்கும். அதிலும் கமல்ஹாசனும், கோவை சரளாவும் வரும் காட்சிகள் அத்தனையும் எனக்கு மிக மிக பிடித்தவை. எனக்கு சோர்வாக இருக்கும் போதெல்லாம் நான் அந்த காட்சிகளை போட்டுவிட்டு குழந்தைகளை போல ‘கெக்கே பெக்கே’ என்று சத்தமாக சிரிப்பது வழக்கம். இந்த பதிவு என் பார்வையில் ‘சதி லீலாவதி’யின் விமர்சனம் அல்ல, எனக்கு பிடித்த ஆனால் அதிகம் கவனிக்கப்படாத சில காட்சிகளின் குறிப்பு.

{mosimage}
Oflate I have stopped writing music reviews - simple... that no today's music intrests me, or compels me to record my opinion about it. Infact lack of soul in today's music either in Tamil or Malayalam or even Hindi had made me revisit the golden period of Indian Film Music i.e late 70's - mid90's. With Maestro Illayaraja making a rapid stride in comeback with small budget films like "Kangalum Kavi Paaduthey" or "Mallepoovu (Telugu)" or "Vinodayatra" & "Innathe Chinta Vishayam (Mal.)", my playlist is filled by him only. So I just thought of how to share my playlist with you, suddenly I remembered my old account with "IMEEM" that I signed up 9-10 months ago. Like weekly Top 10 programmes, I have decided to share my playlist (mostly melodies) with you all. Hope you'll like them. No need of hanging around in the same page, just launch the stand alone player and continue your browsing. Happy music..

{mosimage}

Even though I anticipated much for its release I was able to see "Dashavatharam" only after 70 days of its thearrical release. It is a sort of an ego trip of a narcisst Kamal Hassan. No doubt that too much hardwork had gone into its concpetion and execution, but somewhere the story falls flat beacuse of its wafer thin plot. Believe me, I didn't read any of its reviews till date as I felt that I might be biased towards or against of it. Balaram Naidu is loveable but most of the roles out of 10 were inconsequential and created to fill that number 10. Seems Kamal Hassan had worked backwards after finalising the title. Asin sparkles in few moments but had nothing to do except screeching "ஐய்யோ......" and "என் பெருமாளை என் கிட்டே குடுத்திடுங்கோ...". Technically speaking too much efforts had gone into the visuals and it shows... That's it the problem - IT SHOWS. The VFX are very easily identifiable, so it feels like watching a row resolution movie on a computer monitor. Great idea but not so great finesse... in terms of content as well as technique.

{oshits} visits....

Maestro Illayarajaமிக யதேச்சையாக தான் தெரிந்தது - இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். இசையருவி தொலைகாட்சியில் என் உள்ளம் கவர்ந்த பாடகி சித்ராவின் பேட்டியை பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன். சில நாட்களாகவே இசைஞானியின் சமீபத்திய படைப்பான "கண்களும் கவிபாடுதே" படப்பாடல்களை பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இன்று அதற்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இசைஞானியை வாழ்த்த வயதும் அருகதையும் எனக்கு இல்லை, ஆனால் அவர் நீண்டகாலம் ஆரோக்கியத்தோடும், ஆர்வத்தோடும் வாழ்ந்து மேலும் பல படங்கள் பண்ணவேண்டும், என் போன்ற ரசிகர்கள் கேட்டு இன்புறவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் "கண்களும் கவிபாடுதே" படப்பாடல்களை இதுவரை கேட்கவில்லை என்றால் உடனே கேளுங்கள். இசைஞானியை 80-களில் கேட்ட அதே சிலிர்ப்பு கிடைக்கிறது. மொத்தம் 5 பாடல்கள், அதில் 4 தேவாமிர்தம்.

{mosimage}

எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல்களில் ஒன்று இசைஞானி இளையராஜா இசையில், எஸ். ஜானகியம்மா "காதல் ஓவியம்" படத்துக்காக பாடிய 'நாதம் என் ஜீவனே...' பாடல். ஏனோ அந்த படத்தை இதுவரை நான் பார்க்க முயற்சித்ததில்லை & மற்ற சில பாடல்களை மாத்திரமே பார்த்திருக்கிறேன். இந்த வாரம் வாங்கிய DVD-யில் 'காதல் ஓவியம்' படத்தின் எல்லா பாடல்களும் இருந்தது. இந்த சனி, ஞாயிறுக்குள்ளே 'நாதம் என் ஜீவனே..' பாடலை கிட்டத்தட்ட 20-25 முறை பார்த்திருப்பேன். இந்த பாடலில் இசையை தவிர என்னை கவர்ந்திழுத்த இன்னொரு அம்சம் - ராதா. நான் ராதா நடித்த கடைசிகால படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். 1 இஞ்சுக்கு சாயம் பூசிக்கொண்டு சற்று முத்தலாக இருந்த ப்ளாஸ்டிக் ராதா தான் எனக்கு தெரிந்தது. ஆனால் அம்மணி வந்த புதிதில் தான் மிக அழகாக இருந்திருக்கிறார் என்பது என் இப்போதைய அபிப்பிராயம். மிக அழகான முகவெட்டு, கூர்மையான நாசி, மனதை அள்ளும் புன்னகை, நடையில், பாவனையில் நளினம்.. என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

{mosimage}நேற்று இரவு DVD-யில் ஸ்ரீதரின் 'நெஞ்சம் மறப்பதில்லை' பார்த்தேன். Definitely a film ahead of its times. முதல் பாதியில் நிறைய காட்சிகளில் வசனங்களே இல்லாமல் முழுவதுமாக visuals-களிலேயே ஓட்டியிருப்பார். குறிப்பாக கதாநாயகன் கல்யாண்குமார் பாழடைந்த பங்களாவுக்கு போகும் காட்சிகளிலும், பூர்வஜென்மத்து நினைவுகள் திரும்பும் கட்டத்திலும். உண்மையிலேயே மிகவும் திகிலாக இருந்தது. Credit Titles-களில் வரும் அந்த Instrumental score காலத்துக்கும் நிற்ககூடியது. எம். என். நம்பியார் 109 வயது கிழவனாகவும் மிரட்டியிருக்கிறார். No wonder nobody else is so menacing like him as a villain. தேவிகாவுக்கு வேலையே இல்லை. The show belongs to Kalyan Kumar and MN Nambiar. 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் மிகவும் haunting, 'அழகுக்கும் தமிழுக்கும்..' பாடல் இனிமையான துள்ளல். சவுக்கு தோப்பு காட்சிகளிலும், பூர்வஜென்மத்து க்ளைமேக்ஸில் துரத்தல் காட்சிகளும் தொழிநுட்பம் பெரிதாக வளராத அந்த நாட்களிலேயே இன்றைய (2008) தரத்துக்கு எடுத்து இருக்கிறார். ஸ்ரீதர் என்ற கலைஞனின் முழு Technical வீச்சையும் இந்த படத்தில் பார்க்கலாம். Infact தமிழில் முதல் முதலாக இயக்குனரின் படங்கள் என்று அறியப்பட்டவை ஸ்ரீதரின் படங்கள் தானாம். அதுவரை சிவாஜி படம், எம்.ஜி.ஆர் படம் என்று அறியப்பட்ட படங்களுக்கு நடுவே 'ஸ்ரீதர் படங்கள்' என்று தான் முதன் முதலாக இயக்குனருக்கு முழு credit கிடைத்ததாம். Moserbaer DVD-யில் ரூ. 34/- க்கு கிடைக்கிறது. இது வரை இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் தயவு செய்து பாருங்கள்.

Pirivom SanthippomKaru. Pazhaniappan is somebody whom I think could be my mentor in marriage life. I consider his 'Parthiban Kanavu' a bible for all who start their marriage life with a cynicism. After a disastrous 'Sivappathikaram', Karu. Pazhaniappan returns to his familiar terrain - the marital life of a girl with dreams of being in a big family. In 'Pirivom Santhippom', Karu. Pazhaniappan dissects the concept of 'thani kudithanam' (nuclear family) and puts the life of a newly weds under a microscopic scanner. Karu. Pazhaniappan manages to demystify the so called privacy and space a nuclear family (thani kudiththanam) offers. Also he breaks the prototype of a 'realistic' movie by making PS, a reality far from regular grisly output. "Pirivom Santhippom" is colourful yet honest, earnest and at the same time tugs the chords of your emotional strings.

Shalini Ajith1. Who are the popular actor & director who makes a walkin appearance in the shopping mall during the song 'Poongaviyam' from 'Karpoora Mullai'?
- Suresh Gopi & Fazil. (Fazil directed the movie and Suresh Gopi did the Raja's role in Malayalam version - Ente Surya Puthriykku)

2. Which is the popular music that comes in the background when Arvindswamy sees Vaishnavi in 'Roja'?
- 'Nee Illai endral' stanza from 'Telephone mani pol' song (Indian)

3. What song comes as re-recording in the scenes Mohanlal meeting Madhubala from movie 'Asokan'?
- Sevvanam Chinnapen (Pavithra)

Kannamoochi Enada?
Still from Kannamoochi Enada?

Sometimes the promos, publicity stills and posters of the movies are more intresting than the actual movie itself. This remake of 'Meet the Parents' faced brickbats with the critics as well as box office, but this poster is so funny, especially Sathyaraj's facial expression on being kissed by Prithviraj. I couldn't control my laughter seeing this banner in Mount Road despite being caught in a traffic jam.

{mosimage}தமிழ் படம் பார்த்தே கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது. வேலை பளுவினால் அல்ல... பார்ப்பதற்கு தரமாக எந்த படமும் இல்லை. சமீபத்தில் எல்லோரும் 'கற்றது தமிழ்' படத்தை பற்றி ஆஹா... ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள். Infact அந்த படம் வரும் முன்பு நானும் அதை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு திரைவிமர்சனம் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காட்சியை பார்த்தவுடன் என் முடிவை மாற்றிக்கொண்டேன். எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் ஹிட் படம் எனக்கு பிடிக்காமல் போவது இது முதல் முறை அல்ல. எல்லா விஜய்யின் படங்களும் அபத்தங்களின் உச்சக்கட்டம் & தமிழ் சினிமாவின் அவமான சின்னங்கள். பல நேரங்களில் எனக்கு பிடித்த படம் ஓடாத தோல்வி படமாக மாறிவிடுவதும் உண்டு. ஓரு முறை எனக்கு சந்தேகம் வந்தது... நாம் ஒரு வேளை 'Out of Sync'-ல் வளர்ந்து விட்டோமோ என்று. பின்பு 'இது எனக்கு பிடித்தது, பிடிக்காதது, இதை மற்றவர்கள் influence செய்யவேண்டிய அவசியம் இல்லை' என்று ஒரு திமிர் வந்துவிட்டது. இதோ சில படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றவை, இருப்பினும் என்னை தியேட்டரை விட்டு தூர ஓட வைத்த படங்கள்.

{mosimage}என்னால் தங்கர் பச்சானின் படங்களை பற்றி சிலாகித்து பேசமுடியும். தமிழ் சினிமாவில் பொதுவாக கிராமத்திய படங்கள் என்றாலே பொள்ளாச்சியையும், கவுண்டர்களை சுற்றியே இருக்கும். அந்த கலாச்சாரத்தை தாண்டி மிக இயல்பாக தென்னாற்காடு பகுதி கிராமங்களை திரையில் கொண்டுவருபவர் தங்கர்பச்சான். மேலும் அவர் இலக்கியவாதியாக இருப்பதனால் தங்கரின் படங்கள் நம் மனதோடு ஒரு சில துளியேனும் உரசிவிட்டு போகும். என்னை கடந்த வருடங்களில் விசும்பி அழ வைத்த வெகு சில படங்களில் அழகியும் ஒன்று. 'சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' மலையாளத்தில் வந்த 'சிந்தாவிஷ்டயாய சியாமளா' என்ற படத்தின் remake என்ற போதிலும், தங்கர்பச்சான் அதன் திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து, அதன் எளிமை கெடாமல் திரைக்கு கொண்டுவந்திருந்தார். எனவே 'பள்ளிக்கூடம்' படத்தை சற்று தைரியமாக பார்க்கலாம் என்று தோன்றியது. 'அழகி' அளவுக்கு நெஞ்சை தொடவில்லை என்றாலும், பல இடங்களில் நம் கண்ணை துடைத்துக்கொள்ள வைத்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.