Click the image to read further”மன்”னார், “மதன”கோபால், “அம்பு”ஜாக்‌ஷி ஆகியோரிடையே நிகழும் உணர்ச்சிகரமான கண்ணாமூச்சி ஆட்டம் தான் “மன்மதன் அம்பு”. படத்தின் பேர் தான் கிளுகிளுப்பாக உள்ளது ஆனால் (ஆச்சரியமாக) இந்த கமல் படத்தில் முத்தங்கள் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை... சொல்லப்போனால் நல்லதிரைக்கதையும் இல்லை. படத்தின் முதல் குழப்பம் - இதை உணர்ச்சிப்போராட்டமாக கொண்டுபோவதா இல்லை நகைச்சுவையாக கொண்டுபோவதா என்கிற தெளிவு இல்லாதது. இரண்டாவது குழப்பம் - கிட்டத்தட்ட “மின்சார கனவு” படத்தின் சாயல் எளிதில் முடிவை யூகிக்க வைப்பது. கமல் நல்ல நடிகர் என்பதில் ஐயமில்லை, ஆனால் திரைக்கதையாசிரியராக, (நிழல்) இயக்குநராக அவரது ரெண்டுங்கெட்டான் நிலையும் ஐயமில்லை. அதனால் “மன்மதன் அம்பு”வை பார்க்க உட்காரும்போதே சில இழுவைகளுக்கு மனதை தயார் படுத்திக்கொண்டே உட்கார்ந்தேன். எனினும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் இழுவை போட்டு கமல் தன்னை நிரூபித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

Click the image to read furtherநான் முன்பே சொன்னது போல கரு.பழனியப்பனின் படத்தை ஆர்வமாக எதிர்பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் "பிரிவோம் சந்திப்போம்" படத்துக்கு அடுத்து தானே கதாநாயகனாக நடித்து இயக்குகிறார் என்று கேள்விப்பட்ட போது "இவரும் அடுத்த சீமான் ஆகிவிடுவாரோ?" என்று தோன்றியது. ஆனால் கடந்த வாரம் "மந்திரப் புன்னகை" படத்தை பார்த்தபோது அவர் நடிகராகவேண்டிய அவசியம் புரிந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம், எனவே ஒரு தனிமனிதனின் வித்தியாசமான உலகத்தை எட்டிப்பார்க்கிறோம் என்கிற முன்னுரையோடு ஆரம்பிக்கையிலேயே நம்மை ஒரு வழக்கத்துக்கு மாறான பயணத்தை கொடுக்கப்போகிறார் என்று தயாராகிவிடுகிறோம்.

நான் முன்பே சொன்னது போல கரு.பழனியப்பன் - வித்யாசாகர் கூட்டணிக்கு நான் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சமாக தான் இருப்பேன்.  சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த “மந்திர புன்னகை” பாடல்கள் இவர்களுடைய முந்தைய படைப்புகளான “பார்த்திபன் கனவு”, “சிவப்பதிகாரம்” மற்றும் “பிரிவோம் சந்திப்போம்” பாடல்களின் கால் பங்குக்கு கூட வரவில்லை என்றபோதும், இந்த மந்திர புன்னகையில் வந்த “சட்டச் சட சடவென...” பாடல் இனிமையானது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். பெங்களூருவில் தான் படம் வெளியாகவில்லை என்றால் இணையத்தில் கூட திருட்டு பதிப்பு வெளிவரவில்லை. ”கௌரவர்கள்”, “துரோகம்.. நடந்தது என்ன?”, “குற்றப்பிரிவு” என கேள்விப்படாத படம் எல்லாம் இணையத்தில் பதிவிறக்கத்துக்கு கிடைக்கிறது ஆனால் “மந்திரப் புன்னகை”யை யாரும் கண்டுக்கொள்ளாவே இல்லை. கலைஞர் தொலைகாட்சியில் ஒரு நள்ளிரவில் இந்தப் பாடலை ஒருமுறை பார்க்க நேர்ந்தது. அதிகம் மக்கள் கேட்டிராத இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்கும் பிடிக்கும்.

Endhiran

நான் சில மறந்துபோன காரணங்களுக்காக 'தளபதி'க்கு பிறகு ரஜினியின் படங்களை தியேட்டரில் பார்ப்பதில்லை என்று வைத்திருந்தேன். ஆனால் 'படையப்பா' வெளியானபோது எனது கல்லூரியின் கடைசி வருஷத்தில் இருந்தேன். எனவே நண்பர்களோடு கடைசி படமாக இருப்பதால் எனது கொள்கையை தளர்த்திக்கொண்டு சேலம் கே.எஸ் தியேட்டரில் நண்பர் குழாமோடு போனேன். படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சியில் படத்தை விட தியேட்டரில் இருந்த 'Mass Hysteria'வை மிகவும் ரசித்தேன். அதனால் நல்ல மசாலா படங்களை தியேட்டரில் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்ற மனநிலைக்கு வந்தேன். முத்து, சந்திரமுகி, குசேலன் ஆகிய (நல்ல) மலையாள படங்களின் மோசமான தமிழ் தழுவல்களை பார்க்கவே தவிர்த்து விட்டதால், அடுத்ததாக தியேட்டரில் பார்த்தது 'சிவாஜி'. மாயாஜாலில் படம் வெளியான இரண்டாவது நாளில் CTS கும்பாலோடு பார்த்தபோது IT இதயத்துக்குள்ளே உறங்கி கிடந்த தரை டிக்கெட்டுகள் தியேட்டரில் இறங்கி ஆடிய ஆட்டத்தை பார்த்தபோது எனக்கும் கால்கள் தானாக ஆட்டம் போட துவங்கின. 'எந்திரன்' வெளியானபோது நான் லண்டனில் இருந்தேன். சரி! ஊருக்கு சென்று சேலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் 'எந்திரன்' நாங்கள் பெங்களூரூவில் குடியேறிய பிறகு பார்த்த முதல் தமிழ் படமாக, பூட்டு சிங் வாழ்க்கையில் பார்த்த முதல் திரைப்படமாக மாறிவிட்டது.

Click the image to read furtherரொம்ப நாட்களுக்கு மட்டை போட்டுவிட்டு கடைசியாக ”அங்காடி தெரு”வை பார்த்தபோது மனசு கல்லாக பாரமானதை தவிர்க்கமுடியவில்லை. படம் முழுவதும் ரத்தமும் சதையுமாக யதார்த்தமான மனிதர்கள். “களவானி” ஒரு இன்ப அதிர்ச்சி - வரிவிலக்கு பெறுவதற்காக தமிழில் பெயர் வைத்துவிட்டு புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் பலான படமோ என்ற சந்தேகத்தில் நான் ஒரு பொருட்டாகவே கருதாத படத்தை, இணையதளத்தில் (கதையை படிக்காமல்) நல்ல விமர்சனங்களை படித்தபிறகு பார்த்தபோது ஒரு இனிய அதிர்ச்சி. அனுஷ்கா விபச்சாரியாக நடிக்கும் “தாகம்” என்று போஸ்டர் அடித்து தியேட்டரில் தெலுங்கிலேயே ஓடும் “வேதம்” அந்த ஒரு கேவலமான “இழுப்பு”க்கு தகுதியில்லாத அருமையான கலைப்படைப்பு. பட்ட காலிலேயே படும் என்பதற்கு உதாரணமாக “சொம்பு”, “சின்ன தளபதி” ஆகியோரின் நடிப்பில் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கிறதாம் இந்த “வேதம்”. இனி இவை குறித்த என்னுடைய குறுங்கருத்துக்கள்.

Click the image to read furtherமணிரத்னத்தின் படங்கள் வெறும் படங்கள் அல்ல.... அவை ஒரு event by itself. ராவணன் படத்துக்கு எதிர்பார்ப்புகள் வேகமாக எகிறிக்கொண்டிருந்த சமயத்தில் அவரை வெறுக்கும் ரசிகர்கள் கூட “கிழிப்பத”ற்க்கேனும் படத்தை பார்க்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வெளியான ராவண் / ராவணன் படத்துக்கு முதல் விமர்சனமான "SRK payroll”ராஜா சென் முதல் நடுநிலையான தரண் ஆதர்ஷ் வரை எல்லாருமே சொல்லி வைத்தது போல கிழித்தெடுக்க எனக்கு கொஞ்சம் ஆர்வக்குறைவு ஏற்பட்டது உண்மையே. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை மிக மிக யதேச்சையாக என் அண்ணா குடும்பத்தினரோடு சேலம் கீதாலயாவில் பார்த்தபோது படம் “அசாதாரணமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டதே தவிர அத்தனை மோசமான படம் அல்ல” என்று தோன்றியது. அழகான தருணங்கள், மிக திறமையான Technicians, பழமையை உடைக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான கதைக்களம் என எல்லாம் இருந்து மணிரத்னம் அசாதாரணமாக கோட்டை விட்டிருப்பது தான் பரிதாபம். இது என்னை ஏன் “ராவணன்” ஈர்த்தது / வெறுப்படித்தது என சொல்லும் பதிவு.

Click the image to read furtherமணிரத்னம் - ஏ.ஆர் ரகுமான் கூட்டணியின் 9வது இசைப் படைப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் சமீபத்தில் வெளியானது. முதலில் ஹிந்தியின் “ராவண்” ஏப்ரல் 24ம் தேதியும், பின்னர் தமிழ் / தெலுங்கில் மே மாதம் முதல் வாரத்தில் வெளியான இதன் இசை வழக்கம்போல எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனால் ஏ.ஆர் ரகுமானின் இசை என்பது மதுபானத்தை போல. குடித்த சில ரவுண்டுகளுக்கு பிறகு தான் போதை ஏறும். அது போல ரகுமானின் இந்த பாடல்கள் நம் மீது வளர கொஞ்சம் சமயம் எடுத்துக்கொண்டது உண்மை தான். முதலில் ஹிந்தியில் கேட்டபோது எல்லாமே ஒரே பாடல் போல தோன்றியது. ஹிந்தி பதிப்பின் வரிகளை எழுதியது மாபெரும் கவிஞரான குல்ஸார் ஆனபோதும் சமயமின்மை காரணமாக வரிகளை கூர்ந்து கவனிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் பதிப்பு வந்தபோது (நன்றி: அழகான வரிகளை எனக்கு முன்னோட்டமாக சொன்ன அரவிந்தன்) அந்த பாடல் எந்த சூழலுக்கு வந்திருக்கு என்று யூகிக்க ஆரம்பித்தபிறகு பாடல்களின் தனித்துவம் புரிய ஆரம்பித்துவிட்டது. மொத்தம் 6 பாடல்கள், அவற்றில் மிக எளிதாக 3-4 தேறும். நான் வரிசை படுத்தியிருப்பது எனது விருப்பத்தின் அடிப்படையில்.

Vishnuvardhanபசங்க படத்துக்கு நான் எழுதிய பதிவில் தமிழில் குழந்தைகளை மையப்படுத்தி கடைசியாக வந்த Mainstream தமிழ் படம் “அஞ்சலி” என்று எழுதியிருந்தேன். அதற்கு அனன்யா அக்கா அஞ்சலிக்கு பதிலாக நடிகை லட்சுமி இயக்கிய ”மழலைப்பட்டாளம்” தான் தமிழின் கடைசி குழந்தைகள் படம் என்றும், சந்தர்ப்பம் கிடைத்தால் நான் அதை கட்டாயம் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். நேற்று அதன் DVD-ஐ பார்க்கும் சமயம் கிடைத்தது. கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சுமித்ரா ஆகியோருடன் ஒரு பெரும் மழலை பட்டாளமே நடித்திருந்த இந்த படம் பயங்கர ஏமாற்றத்தையே தந்தது. படத்தை இயக்கியது பெண் இயக்குநராக இருந்தும் கதாநாயகி “கன்னி”யாக தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தில் கதை ஆரம்பித்ததுமே புஸ்ஸென்று போய்விட்டது. தன் சகோதரி பிள்ளைகளை தன் பிள்ளையாக வளர்க்கும் சுமித்ராவை, அந்த பிள்ளைகளுக்கே ”அது நம் அம்மா அல்ல” என்று அடையாளம் தெரியவில்லையாம். விஷ்ணுவர்த்தன் மட்டும் 6 பிள்ளை பெற்றவராக இருக்கலாமாம் ஆனால் அவரை கல்யாணம் செய்துக்கொள்ளும் சுமித்ரா மட்டும் கன்னி கழியாதவராக இருக்கவேண்டுமாம். கதாநாயகி அல்லவா? சரி.. பெரியவர்கள் விஷயத்தை விட்டுவிட்டு குழந்தைகள் விஷயத்துக்கு வரலாம் என்று பார்த்தால் எல்லாம் நாடகத்தனமான over acting. விசு அல்லவா இதன் திரைக்கதை ஆசிரியர், பின்னே எப்படி நாடக வாசனையை தவிர்க்கமுடியும்? விஷ்ணுவர்த்தனுக்கு ‘டெல்லி’ கணேஷ் குரல் கொடுத்திருப்பதால், படம் முழுக்க ‘டெல்லி’யே நடித்திருப்பது போன்ற ஒரு தோற்றம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்திருந்தால் 30 நிமிடத்திலேயே படத்தை நிறுத்தியிருப்பேன். (அகிலாவும் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தபடியால்) கஷ்டப்பட்டு 2:30 மணி நேரத்தை ஓட்டிவிட்டு, படம் முடிந்தவுடன் ”பசங்க” DVD-ஐ போட்டு damage control-இல் இறங்கினேன். சும்மா சொல்லக்கூடாது... பசங்க... பசங்க தான்.

Thamizhpadam’பசங்க’ படத்துக்கப்புறம் நான் சமீபத்தில் மிகவும் ரசித்து பார்த்த தமிழ் படம் இந்த “தமிழ் படம்”. ஆங்கிலத்தில் பிரபலமாக உள்ள Spoof என்கிற ‘நக்கலடிக்கும்’ genre-ஐ தமிழுக்கு கொண்டு வந்துள்ள புதுமையான முயற்சி. இவ்வளவு காலமாக மக்களை ‘பொழுதுபோக்கு’ என்கிற பெயரில் எப்படியெல்லாம் ஏமாற்றி மூளையை மழுங்கடித்துக் கொண்டிருந்தது இந்த தமிழ் திரையுலகம் என்று நினைக்கும் போது மெலிதாக ஒரு கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இவர், அவர் என்று பாரபட்சமில்லாமல் மானாவாரிக்கு எல்லோரையும் ஓட்டி வாரியிருப்பது உண்மையிலேயே சுவாரசியம். இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழ் திரையுலகத்தினர் கோபத்தில் இருப்பதாகவும், அதை தயாரித்தது ‘பெரிய இடம்’ என்பதால் பொத்திக்கொண்டு இருப்பதாக படித்தபோது சிரிப்பு தான் வந்தது. தவறை சுட்டிக்காட்டினால் கோபம் வருவது இயற்கை தானே? இந்த படத்தில் வரும் காட்சிகளின் மூலப் படத்தை பார்த்த / அறிந்தவர்களுக்கு மட்டுமே இதை அனுபவிக்க முடியும் என்பதால் இந்த படத்தை என்னுடைய மற்ற மொழி நண்பர்களுக்கு காண்பிப்பதில் சிக்கல். Spoof-ஆக வரும் காட்சிகளை தமிழ் இயக்குநர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டு அடுத்த படங்களில் ஹீரோயிஸ காட்சிகளாக புகுத்தி கழுத்தறுப்பார்களோ என்ற பயமும் வருகிறது.

{mosimage}

கொஞ்ச நாட்களாக பார்த்த படங்களை பற்றி ஒன்றும் எழுதவில்லை... பெரிதாக காரணமில்லை - வெறுமனே சினிமா குறித்த பதிவுகள் குவிந்துவிட கூடாது என்கிற கவனம் தான். பின்பு பல படங்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டபடியால் ஒவ்வொன்றை பற்றியும் சுருக்கமாக சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து போட்ட பதிவு. என்னென்ன படங்கள் நான் சமீபத்தில் பார்த்தது? தமிழில் - ஊட்டி வரை உறவு, மறுபடியும், மலையாளத்தில் - வாஸ்தவம், தலப்பாவு, ஹிந்தியில் - Woh Kaun Thi, Anupama, Arth. மலையாள - வாஸ்தவம் / தலப்பாவு மற்றும் தமிழ் ஊட்டி வரை உறவு தவிர மற்றவை எல்லாம் veoh.com-ல் இருந்து Download செய்யப்பட்டவை. முன்பே சொன்னது போல - பல அரிய படங்கள் எல்லாம் veoh-ல் கிடைத்தது. எனவே இந்த பதிவு Veoh-க்கும், Google Videos-க்கும் மற்றும் இதை upload செய்த புண்ணிய ஆத்மாக்களுக்கும் சமர்ப்பனம்.

{mosimage}

I am building an online library of my all time favourite movies - Mahesh Talkies. It is still in developing stage. You can view the movies but I am yet to add the synopsis, cast & crew details for each movie. Watch this space... {oshits} readers

{mosimage}

கிட்டத்தட்ட 90’களின் இறுதியில் கே. பாலசந்தரின் மின் பிம்பங்கள் தயாரித்து சன் டி.வி.யில் தொடராக வந்த ‘ரமணி vs ரமணி’யின் முதல் பாகத்தில் வாசுகியும், பப்லு என்கிற பிருத்விராஜும் நடித்து இருந்தனர். 90-களில் GenX எனப்படும் இளைய தலைமுறையின் பிரதிபலிப்பாக, மேல்தட்டு குடியை சேர்ந்த, படிப்பிலும், சம்பாத்தியத்திலும் இணையான புதுமணத் தம்பதியாக வாசுகியும், பிருத்விராஜும் கலக்கியிருந்தனர். பின்னர் கே.பி-க்கும் சன் டி.வி-க்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து மின்பிம்பங்களின் அனைத்து தொடர்களும் ராஜ் டி.வி-க்கு மாற்றப்பட்டபோது இந்த ‘ரமணி vs ரமணி - I' மீண்டும் ராஜ் டி.வி-யில் ஒளிபரப்பப்பட்டது. கிட்டத்தட்ட 10-12 வருடங்களுக்கு மேலே ஆனாலும், இன்றும் புதிதாக இருக்கிறது இந்த தொடர். தற்போது ’ஜீ தமிழி’ல் ஒளிபரப்பாகிரது போல. இதில் வரும் வாசுகியை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. “தொலிபிரேமா” என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனின் தங்கையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வாசுகி, அந்த படத்தின் ஒளிப்பதிவாளரை காதலித்து கல்யாணம் செய்துக்கொண்டு ஒரேயடியாக காணாமல் போய்விட்டார். இந்த நாடகத்தின் அத்தியாயங்களை நான் Yahoo! Videos Playlist- இல் upload செய்துள்ளேன். இந்த தளத்தில் சொடுக்கி பார்த்து ரசியுங்கள். - {oshits} பார்வைகள்.