படம் பார்க்கும் போது பார்வையாளர்களின் மனதை பதைபதைக்க வைக்க கொலை,கொள்ளை, சேஸிங்க காட்சிகள் எல்லாம் தேவையில்லை என்று நிரூபிக்க ஒரு த்ரில்லர் உதாரணம் இந்த படம். எதிரில் உள்ளவற்றை மற்றுமே பார்க்க முடிந்த பார்வை குறைவுள்ள விதார்த்துக்கு அவர் பார்த்த ஒரு கொலையை மறைக்க பணம் கொடுக்கப்படுகிறது. அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது தான் இந்த 1:30 மணிநேர திரைப்படம். கிரெடிட் கார்ட் தொகை வசூலிக்கும் சிறிய கம்பெனியின் ஊழியர்களின் நிலைமை, கண் மருத்துவமனைகளின் கொள்ளை, வக்கீல்களின் வண்டவாளம் என பல விஷயங்களை இந்த குறுகிய சமயத்தில் கோடிட்டு காண்பித்திருந்தாலும், இந்த நேரத்துக்கு படம் கொஞ்சம் நீளமாக தோன்றுகிறது. தயாரிப்பாளர் / கதாநாயகன் விதார்த் கனக்கச்சிதமாக பொருந்துகிறார். கதாநாயகியாக  "இறைவி "புகழ் பூஜா திவாரியா தன்னுடைய தியேட்டர் நாடக பின்புலத்தின் அனுபவத்தை கொண்டு தன்னுடைய சிறு கதாபாத்திரத்துக்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறார். படத்தின் முடிவில் வரும் இரண்டு திருப்பங்களில் ஒன்று நாம் எதிர்பார்க்கக்கூடியது ஆனால் அடுத்தது உண்மையிலேயே எதிர்பாராதது. இயக்குநர் மணிகண்டனின் ஒளிப்பதிவில் பல ஃப்ரேம்கள் அற்புதமானவை. Classic. குற்றமே தண்டனை - பார்ப்பவர்களுக்கு தண்டனை அல்ல ஆனால் கொஞ்சம் ஆற அமர நிதானமாக ரசிக்கவேண்டிய படம் இது.

தமிழ் சினிமாவில் science thriller-ஐ பார்த்து ரொம்ப நாளாச்சு.. கடைசியா பார்த்த நல்ல sci-fi என்ன என்று யோசித்தால் எனக்கு நினைவுக்கு வருவது "எந்திரன்" மட்டுமே..அதனால் sci-fi என்கிற ஆர்வத்தோடு இந்த 'இருமுகன்'-ஐ பார்க்க உட்கார்ந்தால்..... ஆ!!!! படம் செம ஜவ்வு.. அடுத்த காட்சியிலே என்ன நடக்கும், யார் என்ன பேசுவாங்க என்பதை என் குட்டிப்பையன் ஆதி கூட பட்பட்டென்று சொல்லிவிடுவான். அவ்வளவு amateurish.

சன் டி.வியின் ஆரம்ப காலத்தில் அதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று - கே.பாலசந்தரின் தொடர்கள். மாறி வந்த சினிமா ட்ரெண்டுகளுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் தன் அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் கே.பாலசந்தர் சின்னத்திரையில் முழுவீச்சில் தொடர்கள் தயாரிப்பில் இறங்கியிருந்தார். அவரது மின்பிம்பங்கள் நிறுவனம் தயாரிப்பு என்றாலே புதுமையான களங்கள், நல்ல தொழில்நுட்பங்கள் என்று தைரியமாக பார்க்கலாம். நிறைய content தேவை என்பதால் தான் இயக்கியது மட்டும் போதாது என்று பல புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார். அப்படி உருவான வைரங்கள் என்று சொன்னால் - மர்மதேசம் தொடர்கள், ரமணி vs ரமணி 1 & 2, மற்றும் ஜன்னல் வரிசை ஆகியவை.

I did watch Kabali on the first day (even though on online) but it was not for a craze on "Thalaivar", but to support the online piracy and rebel againt the unwanted hype by my cousins who behaved as if watching this movie on FDFS is their sole purpose of their existence. But what I saw was refreshing.. The best part of the movie is to watch Rajni playing his age rather than romancing girls of 1/3rd of his age or making funny faces in the name of comedy. It is the high time he should switch to playing such roles like Amitabh Bachchan who reinvented himself followed by the debacles of Mrityudaata, Lal Badshah etc and switched tracks with "Mohabbatein". At that time all the top directors were waiting for this and swarmed him with roles specially written for him like Khakee, Aks, Baghban, Sarkar, Kaante which can't be carried out by anyone else than the AB himself. Watching Rajni emoting in the sequences of searching his wife and the peace in his face when he had got his family back is like return of classic Rajni who shined under the baton of K Balachander or the sensitive Mahendran. Let us leave the actor Rajni to follow his wish of playing suitable roles rather than playing to the gallery of dumb fans... Director PA Ranjit should be applauded for daring to bring out the actor buried inside the Superstar tag. Irrespective of this movie is a flop or hit, the real fans of the actor has something to rejoice at. தலைவருக்குள்ளே இருக்குற நடிகன் வந்துடுடான்னு சொல்லு..

தமிழ் சினிமாவில் எப்படி தான் திடீரென்று ஒரே genre படங்கள் ஒரே நாளில் வருகின்றனவோ? இறைவி வந்து பார்த்தது மனதில் செட்டில் ஆகும் முன்னரே அடுத்த வெள்ளிக்கிழமை வந்திறங்கியுள்ளது "ஒரு நாள் கூத்து". இந்த படம் பார்த்ததும் "இதற்கு இறைவி என்று பேர் வைத்திருக்கலாமோ ?" என்று தோன்றியது. இதுவும் "இறைவி" போல 3 பெண்களை பற்றிய படம் தான். சொல்லப்போனால் இறைவியை விட இதில் பெண்கள் அதிகம் முன்னிறுத்தப் பட்டுள்ளனர். அவர்களது தரப்பு உணர்வுகள் இன்னும் ஆழமாக சொல்லப்பட்டுள்ளன. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்ததால் இந்த படம் மிகவும் பிடித்திருந்தது.

Time travel movies are little tricky.. they can either be the best or the worst but nothing in between. Reason is the narrative. If the story tends to move back and forth in time, then the audience always need to be on toes to understand & differentiate between the past and the present and the future. Director Vikram Kumar seems to have mastered the technique to translating the complicated stories into simple understandable movies that can be understood by the layman. Vikram's "Manam" (Telugu, 2013) featuring the Akkineni clan was a brilliant testimony of narrating an intriguing reincarnation drama without any confusion to the viewers. His latest movie - 24 is a wonderful fantascy with time travel as the backdrop.

Vazhakku-Enn-189 review

பாலாஜி சக்திவேல் படங்கள் எல்லாம் எல்லோரும் சிலாகிக்கப்பட்டாலும் ஏனோ அவை என்னை அதிகம் ஈர்த்ததில்லை. ”சாமுராய்” படத்தை அவரே ஒத்துக்கொள்வதில்லை. அடுத்து வந்த “காதல்” படம் வணிகரீதியாகவும், விமர்சகர்க ரீதியாகவும் பெருவெற்றி பெற்றபோதும் எனக்கு அந்த படத்தின் வலியை ஒத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் - என் பெண் பத்தாவது படிக்கும்போது ஒரு வண்டி மெக்கானிக்கோடு ஓடிப்போனால் நானும் அந்த படத்தில் வந்த அப்பா செய்ததையே செய்வேன். அதனால் இந்த படம் பெரிதாக ”காவியமாக” எனக்கு தெரியவில்லை. அடுத்து வந்த ”கல்லூரி” என்ன சொல்ல வந்தது என்று தெரியவில்லை. ஆனால் தமன்னா என்ற நடிகைக்கும் நடிக்க வரும் என்று மட்டும் அந்த படம் காட்டியது. இந்த inconsitency-ஆலோ என்னவோ எனக்கு “வழக்கு எண் 18/9” படத்தை எதிர்பார்க்கும் அளவுக்கு ஆர்வம் வரவில்லை.

3

இந்த படப்பாடல்கள் வந்து காலங்கள் ஆகிவிட்டன, படமும் வந்து பெட்டிக்குள் சுருண்டு போய் மாதங்கள் ஆகிறது, இப்போது இதற்கு போய் இசை விமர்ச்னம் எழுதுகிறேன் என்றால் நான் இத்தனை காலமாக கோமா-வில் இருந்திருக்கவேண்டும் என்று நீங்கள் நக்கலாக சிரிப்பது எனக்கு இந்தப்பக்கம் தெரிகிறது. என்ன செய்வது? கடந்த வாரம் சுரேஷ் ரூமில் கேபிள் டி.வி-யில் இந்த படம் போட்டபோது, நான் என்னவோ படித்துக்கொண்டே இதன் ஒலிச்சித்திரம் கேட்டபோது தான் இதன் இசையை கேட்டேன். அற்புதமான பின்னணி இசை என் கவனத்தை கவர, (அரைக்கண்ணால் படத்தை பார்த்துக்கொண்டு இருந்ததில் பாதி படம் வரை பிடித்திருந்தது வேறு விஷயம்) அதை தொடர்ந்து பதிவிறக்கம் செய்து கேட்டபோது “அடடா! அழகான இந்த ஆல்பத்தை மிஸ் செய்ய இருந்தோமே” என்று தோன்றியது. ஒரு வாரம் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தபோது, இதன் ஹிந்தி பதிப்பையும் கேட்டேன். 3 (ஹிந்தி) ஓரளவுக்கு தமிழ் மூலத்தின் essence-ஐ தக்கவைத்திருந்தது. இதை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றி எழுதியது தான் இந்த பதிவு.

Rasigan

”எத்தனை நாளுக்கு தான் ஃப்ளாப் இயக்குநராக இருப்பது... சில சினிமாக்களை எடுத்தே சம்பாதிச்ச காசை எல்லாம் அழிச்சாச்சு... ஒரு பையனை பெத்துப்போட்டாச்சு.. அவனை கதாநாயகனா ஆக்கிட்டா வர்ற காலத்துல முதலமைச்சரா அனாலும் ஆயிடுவான்.. ஏன்னா நம்ம தமிழ் ரசிகர்களுக்கு சினிமாவுல இருந்து மட்டும் தான் சி.எம் வேணும்” என்று யோசித்துக்கொண்டிருந்தார் அந்த மூன்றெழுத்து இனிஷியல் இயக்குநர். பையனை வச்சு எடுத்த முதல் படம் கையை சுட்டுவிட... மகனின் இரண்டாவது படத்தில் தன்னால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட நடிகர் நன்றிக்கடனாக கிட்டத்தட்ட முழுநீள கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுக்க, கூடவே கதாநாயகியின் கவர்ச்சியும் சேர்ந்து படத்தை கொஞ்சமாக காப்பாற்றியது.

இந்த வாரம் மிக யதேச்சையாக மூன்று நல்ல படங்களை பார்க்க நேர்ந்தது. 7ம் அறிவு உட்பட மொத்தம் நான்கு படங்கள் பார்த்தபோதும் அதில் மூன்று முத்துகளாக அமைந்தது சந்தோஷம். கன்னட ராஜ்யோத்சவ தினத்தை முன்னிட்டு எங்கள் ஆஃபீஸில் கன்னட புத்தகங்கள், CD & DVD sales போட்டிருந்தார்கள். அதில் ‘இஜ்ஜோடு’ என்ற கன்னட படத்தின் DVD-ஐ வாங்கினேன் - மீரா ஜாஸ்மின் நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக. அனன்யா அக்கா ஞாபகப்படுத்தியதால் ’ப்ரணயம்’ என்ற மலையாளப் படத்தை பதிவிறக்கம் செய்துவைத்தேன். மற்றும் தமிழில் long due ஆன “வாகை சூட வா”. இது தவிர்த்து “7ம் அறிவு” பார்த்தோம். இதில் 7ம் அறிவு தவிர மீதி மூன்றும் நல்ல கவிதைகள். மூன்று படங்களும் மனதை தொட்ட படங்கள் என்றபோது emotionally drain செய்யாமல், நல்ல படங்களை பார்த்த திருப்தியை கொடுத்ததால் இந்த பதிவு.

Sadhurangamசில மாதங்களுக்கு முன்பு எனது பழைய பதிவுகளை திரும்பி பார்த்தபோது ஆர்வக்கோளாரில் குப்பை படங்களுக்கும், பாடல்களுக்கும் பதிவு எழுதி வீணடித்ததை நினைத்து, இனிமேல் (atleast இந்த வருடத்தில்) சினிமா குறித்த பதிவுகள் எழுதுவதில்லை என்று முடிவு செய்தப்புறம் தான் “தெய்வத்திருமகள்", “எங்கேயும் எப்போதும்" மற்றும் கரு. பழனியப்பனின் சமீபத்திய ரிலீஸ் “சதுரங்கம்" என வரிசையாக நல்ல தமிழ் படங்களாக பார்க்க நேர்கிறது. எனவே எனது கொள்கையை காற்றில் விட்டுவிட்டு இந்த படங்கள் பார்த்ததை எனது பதிவில் பதிவு செய்யவேண்டும் என்று தோன்றி எழுதப்பட்ட பதிவு இது. “பார்த்திபன் கனவு“ பெற்ற பெரும்வெற்றிக்கு பிறகு கரு. பழனியப்பன் - ஸ்ரீகாந்த் கூட்டணியில் உருவான “சதுரங்கம்“ கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது. இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக நேரடியாக டி.வியில் வெளியாகும் படம் என்ற “பெருமை“யை பெறும் என்று என்னை போன்ற சாதாரண ரசிகர்கள் பலரும் கைவிட்டுவிட்ட நிலையில், சற்றும் மனம் தளராமல் போராடி திரையில் வெளியிட்டிருக்கும் திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

யுத்தம் செய்பொதுவாக எல்லோராலும் சிலாகிக்கப்பட்ட 2 மிஷ்கினின் படங்களை நான் பார்த்ததில்லை. அவரது முதல் படமான "சித்திரம் பேசுதடி" வெளியானபோது "தமிழ் சினிமாவை ரட்சிக்க இன்னொரு தெய்வம் வந்துவிட்டார்" என்று விமர்சகர்களெல்லாம் கொண்டாட, அதை நம்பி நான் "சித்திரம் பேசுதடி"யை ஆர்வத்தோடு பார்க்க - ஒரு மூன்றாம் தர கதையை வித்தியாசமான ஒளிப்பதிவாலும், புதுமுகங்களை மட்டுமே வைத்து எடுத்ததாலும், எளிதாக விமர்சகர்களை ஏமாற்றியிருந்தார் மிஷ்கின். அதற்கு அடுத்து வந்த "அஞ்சாதே"வை நான் பார்க்கவில்லை - காரணம் படத்தில் சில கற்பழிப்பு காட்சிகள் இருக்கிறது என்று எனது நண்பர்கள் எச்சரித்துவிட்டது தான். 'நந்தலாலா' எதோ காரணமாக தவறிப்போக, இப்போது 'யுத்தம் செய்' பார்த்தேன். மிஷ்கினின் முத்திரையான 'சிறு கதைகளம்" அதை வைத்து பின்னப்பட்ட திரைக்கதை என கொஞ்சம் சுவாரசியமாகவே போனது 'யுத்தம் செய்'.