Panimalai

 

ரொம்ப நாளுக்கு அப்புறம் படித்த புத்தகம் இது. எனக்கு எண்டமூரியின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. முதல் சில பக்கங்களிலேயே இது “பெண்மை” பற்றி பேசும் புத்தகம் என்று தெரிந்தாலும், அவருடைய “பந்தம் பவித்ரம்” போல இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் படித்தேன். அந்த கல்லூரியின் கடைசி நாளில் வைஜெயந்தி, அனுராதா, விசாலி மற்றும் பார்கவி ஆகியோர் சில வருடங்களுக்கு பிறகு குறிப்பிட்ட இந்த நாளில் இதே மரத்தடியில் மீண்டும் சந்தித்து தங்கள் வாழ்க்கை எப்படி போகிறது, என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டன என்று பரிமாறிக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது. அப்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது இது பெண்கள் எப்படி “ஆணாதிக்க” சமுதாயத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரப்போகிறார்கள் என்ற கதையாக இருக்கும் என்று. நான் ஏற்கனவே episode format பிரியன் என்பதால் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.

Pallavan Pandyan BhaskaranShift-ல் வேலை செய்யும்போது எப்போதுடா regular time-ல் வருவோம் என்று மனம் துடிதுடிக்கும். இப்போது மாலைகளில் வீட்டுக்கு வருவது என் அம்மாவுக்கு சங்கடமாக உள்ளது. காரணம் - அவர்களது மெகா சீரியல்கள் பார்ப்பது தடைபடுகிறது. வயதானவரை எதற்கு கஷ்டப்படுத்தவேண்டும் என்று என்னை அறைக்குள் சிறை வைத்துக்கொள்வதால் சில சமயம் SAP-ல் என்னை update செய்துகொள்வது, புத்தகம் படிப்பது என்று ஏதோ பொழுதுபோகிறது. அந்த வகையில் இன்று ஒரே மூச்சில் 328 பக்கங்கள் படித்து முடித்த புத்தகம் - “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதிய “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”. இ.சௌ-வின் புத்தகங்களை படித்தவர்களுக்கு அவருடைய ஆன்மீக த்ரில்லர்களின் layout தெரிந்துவிடும். அதிலிருந்து அச்சு அசல் மாறாத அடுத்த assembly production இந்த “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”.

Marmadesamகிட்டத்தட்ட 90-களின் பிற்பகுதியில் - சன் டி.வி வீடுகளில் காலூன்ற ஆரம்பித்த சமயம் - cable TV connection இருந்த நகர்ப்புறங்களையும், டவுன்களையும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட முக்கால்வாசி தமிழகத்தை வியாழக்கிழமைகளில் பயமுறுத்தி முடக்கிய “பெருமை” கே.பாலசந்தரின் “மின் பிம்பங்க”ளுக்கும், இந்திரா சௌந்தர்ராஜன் - நாகா கூட்டணிக்கு மட்டுமே உண்டு. அவர்களது கைவண்ணத்தில் உருவான “மர்மதேசம்” தொடர் மூலம் தமிழக வாசகர்களின் முதுகுத்தண்டை உறையவைத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்த “ரகசியமாய் ஒரு ரகசியம்” ஒரு நாயை கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தது என்றால் அடுத்து வந்த “விடாது கருப்பு” ஒரு குதிரையை வைத்து தமிழ் நேயர்களை முடக்கிக்கொண்டிருந்தது. கடந்த முறை புத்தகங்கள் வாங்க போனபோது இது “விட்டுவிடு கருப்பா” என்ற பெயரில் புத்தகமாக பார்த்தேன், வாங்கினேன்.

Yandamoori Virendranathதெலுங்கு எழுத்தாளர் “யண்டமூரி” விரேந்திரநாத் தனது படைப்பான இந்த புத்தகத்தில் Abstract பாணி கதை சொல்லும் முயற்சியை கையாள முயற்ச்சித்திருக்கிறார். Abstract பாணி என்பது சில நிகழ்ச்சிகளை கொஞ்சம் மிகைப்படுத்தி படிக்கும் வாசகர்களை அதிர்ச்சி அடையவோ அல்லது amuse செய்தோ தான் சொல்லவந்ததை வேறு விதமாக அவர்களது மனதில் பதிக்கும் முறை. வித்யாதரி புத்தக கடையில் த்ரில்லர் என்ற புத்தகத்தை வாங்கி அதில் வெறும் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருப்பதை கண்டு பொழுதுபோக்காக தன் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கிறாள். சிறிய வயதிலிருந்து சூழ்நிலைகள் காரணமாக ஆண்களை வெறுக்கும் வித்யாதரியை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி தன்னுடைய காதலை சொல்கிறான் அனுதீப். அவ்வப்போது தன் காதலை நிரூபிக்க சில சில அதிசயங்களை நிகழ்த்திக்காட்டும் அனுதீப்பிடம் வித்யாதரிக்கு காதல் தலைதூக்கும் போதெல்லாம் அந்த அதிசய நிகழ்ச்சிகளுக்கு logical reasoning மூலம் காரணம் கற்பித்துக்கொண்டு வித்யாதரி அவனை மேலும் மேலும் அவமானப்படுத்துகிறாள். கடைசியில் அதிசயங்களின் உச்சக்கட்டமாக உலகமெங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுகிறான் அனுதீப். அந்த ஆச்சரியத்தில் இருந்து மீளும் வித்யாதரிக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. பல இடங்களில் இந்த புத்தகம் Mushy romance என்னும் அளவுக்கு காதல் காதல் காதல் என்று ஒரே லெக்சராக இருக்கிறது. கடைசியில் அந்த எல்லாமே காதல் என்பது சுயநலமில்லாத எதிர்பார்ப்பில்லாத அன்பு, காதல் என்பது காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்ச்சி என்கிற cliche-க்களுடன் முடிகிறது. கதை Abstract முயற்சி என்பதால் அனுதீப் யாரென்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்த எழுத்தாளர் விரேந்திரநாத்தே வித்யாதரியை பார்த்து விளக்கம் கூறிவிட்டு அவளிடம் இருக்கும் “த்ரில்லர்” நாவலை எடுத்துக்கொள்வதாக முடித்திருக்கிறார். புது வகையான முயற்சி என்பதால் பாராட்டலாம் என்றாலும் நீளத்தையும், பல இடங்களில் வளவளவென்று தேவைக்கு மீறிய வசனங்களையும் குறைத்திருந்தால் இன்னும் எடுபட்டிருக்கும்.

Sagarasangamamதெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி விரேந்திரநாத் எழுதி, தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலை சமீபத்திய பயணத்தில் தான் படித்தேன். பெங்களூரில் இருந்து வரும்போது ஏறிய அந்த பாடாவதி Express Bus-க்கு நன்றி. என் வழக்கமான கொள்கைக்கு எதிராக ஒரு புத்தகத்தை முழுமூச்சாக படிக்க நேர்ந்தது அந்த பயணத்தில் தான். அதனால் தானோ என்னவோ அந்த நாவலின் தாக்கத்தை முழுமையாக என்னுள் இறக்கிக்கொள்ள முடிந்தது. படித்து முடித்தவுடனேயே கௌரி அவர்களுக்கு SMS மூலம் எனது கருத்தை அனுப்பினேன். அவ்வளவு பிடித்திருந்தது அந்த புத்தகம். எனினும் முழுவதுமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதை பற்றிய பதிவு வேண்டாம், ஒரு 3-4 நாட்கள் கழிந்த பின்பும் அப்படியே உணர்ந்தால் தோன்றியதை எழுதலாம் என்று சிறு அவகாசத்தின் பின்பு எழுதப்படும் பதிவு இது. பயங்கர பில்டப் கொடுக்கிறேன் எனவே இது ஒரு path breaking நாவலாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள். It is a 60-70s styled drama with an old world charm. சில சமயங்களில் பின்னோக்கி செல்வதும் ஒரு இனிமையான அனுபவமே.

எண்டமூரி விரேந்திரநாத்தெலுங்கில் ‘ப்ரேமா’ என்ற பெயரில் எழுதப்பட்டு தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எண்டமூரியின் இந்த நாவலை நான் ஏற்கனவே படித்து இருக்கிறேன் ஆனால் சரியாக நினைவில்லை. இம்முறை மீண்டும் படித்தபோது எனக்கு பிடித்து இருந்தது. தலைப்பு ’காதல் எனும் தீவினிலே’ என்றிருந்தாலும், என்னை பொருத்தவரை இது வழக்கமான காதல் கதை என்று ஒதுக்கிவிடமுடியாது. மனிதர்கள் பரஸ்பரம் வைக்கும் அன்பை, எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு லட்சியத்துக்காக வைக்கப்படும் அன்பை, நம்பிக்கையை அழகாக விவரிக்கிறது இந்த நாவல். It worked for me for various reasons - ஒரு எளிமையான கிராமத்தில் வாழும் எளிமையான மக்களிடையே நடக்கும் நாவல் என்பதால் எழுதப்பட்ட நடையும் மிக எளிமையாக இருக்கிறது. எனினும் கதை உலகளாவிய phenomenon-ஆன ஆழமான அன்பை பற்றி கொஞ்சம் complex-ஆகவே இருக்கிறது.

எண்டமூரி விரேந்திரநாத்இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஓரளவுக்கு நல்ல முயற்சி. தன்னை சுற்றியிருந்தவர்களின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அப்பாவி கிருஷ்ணனை சிறைவாசம் எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் வெளியே வந்தானா? பழிவாங்கினானா? என்று விரியும் ஒரு சாதாரண கதை. இதை சுவாரசியமாகவும், வித்தியாசமாகவும் ஆக்குவது இதில் வரும் கிருஷ்ணனின் குருவான தாகூரின் கதாபாத்திரம். முடிவில் கிருஷ்ணன் தன்னை சமுதாயத்தின் பாதுகாவலாளியாக நியமித்துக்கொண்டு புரட்சி பாதை மூலம் பயணிக்க தொடங்குகிறான். பல இடங்களில் மிகவும் cliched-ஆக பயணிக்கும் இந்த நாவலை ஒரு முறை படிக்கலாம். பதிப்பு: அல்லையன்ஸ், 244 ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர் சென்னை. பக்கங்கள்: 216, விலை: ரூ. 50

எண்டமூரி விரேந்திரநாத்சமீபத்தில் கல்லூரியில் சேர்ந்த என் அக்காவின் பெண் தன்னுடைய கண்டிப்பான பெண்கள் கல்லூரியை பற்றியும், 'காய்ந்து' கிடக்கும் வயசு பெண்களை பற்றியும் புலம்பி தீர்த்துவிட்டாள். மேலும் சில சுவாரசியமான தகவல்களையும் (பெண்கள் எப்படி சோப்புக்குள் மொபைல் ஃபோன்களை பதுக்கி வைத்து பாய் ஃப்ரெண்டுகளுடன் ரகசியமாக பேசுகிறார்கள், தினசரிகளில் வரும் ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களை அறையில் ஒட்டிக்கொள்ள நடக்கும் போட்டிகள், பார்வையாளர்களாக வரும் ஆண்களோடு கடலை போடுவது....) தந்தாள். அதனாலோ என்னவோ என்னால் இந்த நாவலை புரிந்து படிக்க முடிந்தது. 'லேடீஸ் ஹாஸ்டல்' - பேரே கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கிறதே கதை எப்படியிருக்கும் என்று முன்னுரையில் பார்த்தபோது, இது கிரிக்கெட்டும், சைக்காலஜியும் கலந்த கலவையென்று போட்டிருந்தது. கிரிக்கெட் தேர்வில் நடக்கும் அரசியலும், வழி தவறும் கல்லூரி பெண்களும் விவாதிக்கப்படும் இந்த கதை ஒரு கொலையின் பின்புலத்தில் நடக்கிறது. இந்த கொலையின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் பாதையில் கிரிக்கெட் வாரிய அரசியல், பெண்கள் கல்லூரி விடுதியில் நடக்கும் அவலங்கள் என நிறைய தகவல்கடு நகர்கிறது இந்த கதை.

எண்டமூரி விரேந்திரநாத்'பவித்ரபந்தம்' என்று பெயர் வைத்திருந்தால் சற்று வழக்கமானதாக இருந்திருக்குமோ என்னவோ, எண்டமூரி விரேந்திரனாத்தின் தெலுங்கு நாவலான 'அநைத்திகம்'-இன் தமிழ் மொழிபெயர்ப்புக்கு 'பந்தம் பவித்ரம்' என்று கொஞ்சம் வித்தியாசமாக பெயர் வைத்திருக்கிறார் கௌரி கிருபானந்தன். 1998-இல் எழுதப்பட்ட இந்த நாவல் பிரபல திரைப்படமான 'அமோரெஸ் பெரெஸ்' மூலம் பிரபலமான 'segmented screenplay' முறையில் எழுதப்பட்டுள்ளது. (இதே திரைக்கதை யுக்தியில் மனிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' 2001-ல் வெளியானது). 3 கதாபாத்திரங்கள் தங்களது கண்ணோட்டத்தில் நிகழ்வுகளை நமக்குரைத்து, முடிவில் ஒரு பொதுவான நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து ஒரு முடிவுக்கு வருவது இந்த style திரைக்கதை யுக்தி. பந்தம் பவித்ரமும் ஷியாமலா, அகல்யா, ராக்காயி என்று சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்த மூன்று பெண்களின் perspective-இல் விரிந்து, கடைசியில் ஒன்றாக ஒரு தெளிவான முடிவுக்கு வருகிறது. எண்டமூரியின் வழக்கமான எழுத்துக்களில் இருந்து 'U turn' எனப்படும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பயணிக்க தயாராவோம்.

It would have been a big loss to the literary field if Endemoori Virendranath hadn't decided to resign his bank job to become a full fledged writer. This was exactly what I felt when I read his thriller "Thookku Thandanai" which is a translated version of Telugu "Abhilasha". He is one of the few writers who is able to carve a niche for himself in the minds of readers of other language. Speciality of EV is his versatility. He can write thrillers, family dramas and romance at ease. He writes in Telugu and his most of the works are translated by Susila Kanagadurga and Gowri Kribanandhan. Gowri Kribhanandhan had done a neat job in translating it into Tamil and juxtaposing it with the Tamil milieu. If you had travelled in the hairpin bends of a hill station, then you can feel the same thrilling experience throughout the 376 pages of this novel.

Meendum ThulasiThe story takes off exactly from the moment where "Thulasi Thalam" ends. This time it starts from the view of antagonists and how they try to settle the scores with the people who killed their leader "Kaadhara". It is really tough to write a sequel to the novel that had raised the bar to higher standards. Endemoori Virendranath manages to succeed only to a certain extent but my opinion is that he has deliberately attempted to reduce the starkness and smudge the drear of sorcery. I personally feel that this sequel is a sort of bit confused effort in which direction the novel had to be taken either to believe that black magic exists or it is just a early concept of hypnotism.

Yandamoori VirendranathI won't recommend this novel to people with weak heart or soft hearted people. It is a real spooky thriller that gives an eerie feeling of deja vu. My experience of reading this were really terrific. Yes! they were, not it was. First time I read it about 5 years back at my cousin's place. I read it at a stretch because I had to leave to my home that night. I reached Cuddalore, since I didn't get an auto rickshaw at late night I walked all the way to home. Through out the way it was very haunting and felt relieved once I reached the home. That night I slept with lights on. Second time I read last week here in Abu Dhabi.