கன்னிகள் ஏழு பேர்
இந்திராவிடம் எனக்கு எப்போதும் ஒரு பிரச்சினை... எப்போதெல்லாம் அவர் முகவுரையில் தன் நாவல் பற்றி ஆஹா ஓஹோ என்று சிலாகித்துவிடுகிறாரோ அப்போதே அந்த நாவல் மீது எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இம்முறை தனது எழுத்தாளர் பயணத்தை பற்றி சொல்லிவிட்டு, ஆன்மீக த்ரில்லர் வகையில் தான் மட்டுமே எழுதுவதாக சந்தோஷப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த “கன்னிகள் ஏழு பேர்” தனக்கு பெயர் சொல்லும் நாவலாக இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளார். மற்றவர்களுக்காக எழுதுவதும், தனக்கு திருப்திக்காக எழுதுவதும் பல சமயங்களில் எதிர்கோட்டில் பயணிக்கும் சமாசாரம். அதனால் அவரது இந்த “பெயர் சொல்லும் நாவல் ஆசை” எனது எதிர்பார்ப்புக்கு எதிர்கோட்டில் பயணித்துவிட்டது போல. கடந்த முறை “சிவம்” நாவல் படித்தபோதும் இத்த்கைய அனுபவத்துக்கு உள்ளானேன். எனினும் இந்த நாவலை நல்ல / கெட்ட நாவல் என்று judgemental-ஆக கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை. மேலும் ஒரு படைப்பாளியின் வயதை / அப்போதைய மனோநிலையை அவரது படைப்பை கொண்டு அறியலாம். இந்த நாவலில் இந்திராவின் வயது முதிர்ச்சி தெளிவாக புலப்படுகிறது. சொல்லப்போனால் இதை படிக்கும்போது எழுத்தாளர் பாலகுமாரனின் கடைசிகட்ட எழுத்துகளான “ரகசிய கண்ணி” மற்றும் காஞ்சி பெரியவரின் புகழ் பாடும் (பெயர் மறந்துபோன) நாவல்களை திரும்ப படிப்பது போல இருந்தது.