கடிகை
நான் படித்த பாலகுமாரனின் முதல் சரித்திர நாவல் (புதினம் என்று எழுதனுமோ?) - 'கடிகை'. அந்த காலத்தின் குருகுலத்தை, கல்வியிலும், ஆட்சியிலும் அந்தணர்கள் செலுத்திய ஆதிக்கத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் புத்தகம் இது. சரித்திர ரீதியாக எவ்வளவு உண்மை என்று ஆராயாமல் 'கடிகை'யை அந்த காலத்து வாழ்வின் Documentation என்ற மட்டில் ஏற்றுக்கொண்டால் மிக அற்புதமான அனுபவம். கிட்டத்தட்ட கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு' parallel-ஆக பயணிக்கிறது இந்த கதை. 'பொன்னியின் செல்வனில் வந்த அருண்மொழிய்ம், ஆதித்த கரிகாலனும், குந்தவையும், வந்தியத்தேவரும், ரவிதாஸனும், வீரபாண்டியனும் இந்த புத்தகத்தில் வருகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் Negative Characters-ஆக வருகின்றனர். பொன்னியின் செல்வனை தீவிரமாக நேசிப்பவர்களுக்கு 'கடிகை' பிடிப்பது சற்று கடினமே.