ஐந்தாவது அத்தியாயம்சமீபத்தில் படித்த சுஜாதாவின் (சற்று பெரிய) சிறுகதை தொகுப்புகளில் ஒன்று - “ஐந்தாவது அத்தியாயம்”. இதில் “ஐந்தாவது அத்தியாயம்” மற்றும் “ஓரிரவில் ஒரு ரயிலில்” என இரு கதைகள் இருந்தன. இதில் என்னை கவர்ந்தது “ஓரிரவில் ஒரு ரயிலில்”. சக்திவாய்ந்த இந்து தலைவரான சுவாமி ராஜ் பண்டிதருக்கு பாதுகாப்பாக வரும் அஷோக்குக்கு சுவாமிஜி அருள்வாக்கு சொல்கிறார் - அவனுடைய வருங்கால மனைவி, இரண்டாவது எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டு, அதே ரயிலில் வருகிறாள் என்று. ஆச்சரியமாக அஷோக்கின் நண்பனுடைய தங்கையான பிருந்தாவும் அதே ரயிலில் வர... அந்த ஓரிரவில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கும் குறுநாவல் - ”ஓரிரவில்..”. அடுத்த கதையான “ஐந்தாவது அத்தியாயம்” கணேஷ் - வசந்த் தோன்றும் ஒரு கொலை த்ரில்லர். தனது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் ஒரு தொடர்கதையில் வருவதாகவும், அதில் ஐந்தாவது அத்தியாயத்தில் தான் கொல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கும் ஆபத்து வரும் என்று அபூர்வா வக்கீல்களான கணேஷ் - வசந்தை அணுக.. குறித்த தினத்தில் கொலையும் நடந்துவொடுகிறது. (எனக்கு) கொஞ்சம் குழப்பமாக கதையாக முடிகிறது. மேலும் இதில் பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. உங்களில் யாரேனும் இந்த “ஐந்தாவது அத்தியாய”த்தை படித்திருந்தீர்கள் என்றால் கொலைகாரர் யாரென்று பின்னூட்டமிடவும்... ப்ளீஸ்!!! {oshits} வாசகர்கள் இந்த பதிவுக்கு

விரும்பி சொன்ன பொய்கள்சுஜாதாவின் இந்த 1987-ல் ’குங்குமச் சிமிழ்’ இதழுக்காக எழுதப்பட்ட நாவல், ஒரு புதுமையான முயற்சி. நாவலின் கடைசியில் வரும் ஒரே வார்த்தையில் மொத்த நாவலின் course-உம் மாறிப்போகக்கூடிய சாத்தியம் உண்டு. The best part is - அந்த வார்த்தையை படிக்கும் வாசகர்களான நாம் முடிவு செய்துக்கொள்ளவேண்டும். கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால் இது ஒரு adult love story with a strong undercurrent of eroticism. கோபத்திலும், காமத்திலும் எப்போது obsession எனப்படும் ஒரு வெறித்தனமான நிலையில் இருக்கும் ராதாகிருஷ்ணனின் கடந்த காலத்தை அறிந்தும் அவனுக்கு வேலை கொடுக்குகும் புருஷோத்தமன், தன் இளம் மனைவி மந்தாகினிக்கு மதுரையை சுற்றிக்காட்டும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். கொஞ்சம் abnormal-ஆக நடந்துக்கொள்ளும் மந்தாகினியுடன் மரக்குடியில் சலனமான இரவில் கடற்கரை வெளியில் passionate உடலுறவு ஏற்படுகிறது. இப்போது ராதாகிருஷ்ணனுக்கு மந்தாகினி பைத்தியம் பிடித்துவிட அவளை தொடர்ந்து சென்னைக்கு வந்த இடத்தில் எதிர்பாராதது நடந்துவிடுகிறது. இந்த 80 பக்கக்கதையில் 78 பக்கங்கள் வரை ஒரு கண்மூடித்தனமாக காமம் / காதலில் விழுந்த மனிதனின் உளவியல்ரீதியான பயணமாக போய்விட்டு கடைசி 2 பக்கங்களில் சடாரென்று கியர் மாற்றி வேறு தளத்தில் முடிகிறது. ஆரம்பம் கொஞ்சம் மந்தமாக ஆரம்பித்தாலும் கதை சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் (உபயம்: மந்தாகினியின் உடற்கூறு பற்றிய சுஜாதாவின் வர்ணனை மற்றும் ராதாகிருஷ்ணனுடனான உடலுறவு) கதையில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வதை உணரமுடிகிறது. சுஜாதாவின் பலமே இந்த பளீரென்று முகத்தில் அடிக்கும்படியான எழுத்துக்கள் தான். நிச்சயம் இதை நான் (வயதுக்கு வராத) சிறுவர்களுக்கு படிக்க கொடுக்கமாட்டேன். ஆனால் பெரியவர்கள் இந்த கதைப்போக்கை உணர்ந்து பாராட்ட முடியும். இந்த புத்தகம் ஏற்கனவே என்னோடு இருந்தபோதும் இது குறித்த அனன்யாவின் பதிவை படித்தபிறகே ஒரு குறுகுறுப்பு வந்து ஒரே மூச்சில் படித்தேன், ரசித்தேன். புத்தக விவரங்கள்:- விசா பதிப்பாளர்கள், சென்னை; 80 பக்கங்கள்; விலை: ரூ. 38/- .

Aaaa....சுஜாதா எழுதிய இந்த ‘ஆ’ நாவல் இதனை படிப்பவர்களை நிச்சயம் ‘ஆ’ என்று வாயை பிளக்க வைக்கும்.. கொட்டாவி விடுவதற்கு அல்ல... பிரமிப்பில்... பயத்தில்.... ஆச்சரியத்தில்... 1992-இல் குமுதத்தில் தொடராக எழுதப்பட்ட இந்த கதை முற்பிறவி / Split personality / பேய் என்று பல விஷயங்களை உள்ளடக்கியது. இது பேய்க்கதையா இல்லை விஞ்ஞானபூர்வமான கதையை என்று படித்து முடித்த பின்பு தான் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் படிக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வாக்கியத்திலும், ஒவ்வொரு எழுத்திலும் போதை போல / விஷத்தை போல விறுவிறு என்று நம் மண்டைக்குள்ளே பரபரப்பு ஏறுவதை உணரலாம். முடிவில் இது அறிவியல் ரீதியாக அலசப்படுவதும் சுவாரசியமாக தான் இருக்கிறது. இது தொடர்கதையாக வந்த காலத்தில் படித்த பல வாசகர்கள் தங்களுக்கும் அது போன்ற அமானுஷ்ய குரல்கள் கேட்பதாக சுஜாதாவுக்கு எழுதினார்களாம். அதற்கு சுஜாதா ஒரு கற்பனை கதையை நம்பும்படியாக எழுதுவதால் வரும் பின்விளைவுகள் என்று பதிலளித்திருக்கிறார்.

Nylon Kayiruஇது எழுத்தாளர் சுஜாதாவின் முதல் நாவலாம். 1968-இல் குமுதத்தில் 14 வார தொடராக வந்திருந்ததாம். நிச்சயம் அந்த காலகட்டத்திய வாசகர்களுக்கு முற்றிலும் புதிய எழுத்து நடையாக, புத்தம் புது படிக்கும் அனுபவமாக இருந்திருக்கும். நீண்ட வாக்கியங்கள் இல்லை, சுற்றி சுற்றி பேசப்பட்ட பெரிய வசனங்கள் இல்லை. மாறாக நறுக்கு தெரித்தாற்போல straight to matter - சிறிய வாக்கியங்கள், விறுவிறுப்பான துப்பறியும் நடவடிக்கைகள், இன்றும் கூட contemporary-ஆக உள்ளது. சுஜாதா தன் முன்னுரையில் இந்த நாவலை தற்போது படிக்கும் போது இன்னும் சில மாற்றங்கள் செய்திருக்கலாம், ஆனால் முதல் முயற்சி என்பதால் அதை மாற்றம் செய்ய விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறார். பம்பாயில் ஒரு பெண்பித்தனான கிருஷ்ணன் கொலை செய்யப்படுகிறான், அதை பிராசிக்யூஷன் அவசரம் அவசரமாக ஹரிணி, அவள் சகோதரன் தேவ் ஆகியோரால் செய்யப்பட்ட ’சொந்தப் பகையால் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று முடிக்க முயல்கிறது. அதை குற்றம் சாட்டப்பட்ட தேவ்-இன் வக்கீல் கணேஷ் சாமர்த்தியமாக உடைத்துவிட்டுகிறான். இந்த கேசை ஒரு ரிட்டையர் ஆகப்போகும் போலீஸ் சூப்பரிண்டெண்ட் ராமநாதன் தன் கடைசி 15 நாட்களில் கையில் எடுத்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறார். அந்த வழக்கை ராமநாதன் உடைப்பது படு சுவாரசியம். வயது பெண்கள் தங்களை கிருஷ்ணன் போன்ற பெண்பித்தர்களிடம் எப்படி இழக்கிறார்கள், அதை தொடரும் சட்டவிரோதமான கருக்கலைப்பின் ஆபத்துகளும் இந்த நாவலின் பாடங்கள். கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் துப்பறியும் படம் பார்ப்பது போல விறுவிறுப்பு. இந்த புத்தகம் அவருடைய பயணத்துக்கு ஒரு நல்ல தொடக்கம். இன்று கூட ரசிக்கும் அளவுக்கு காலத்தை தாண்டி நிற்கிறது.

புத்தக விவரம்:-
பதிப்பாளர்கள்: விசா பதிப்பகம், சென்னை.
பக்கங்கள்: 144 பக்கங்கள்
விலை: ரூ. 41/-

Kanavu thozhirchalaiசுஜாதாவின் இந்த திரையுலகத்தில் நடப்பதாக எழுதப்பட்ட நாவலை முதலில் படிக்க கொஞ்சம் கசப்பாக தான் இருந்தது. அதனால் தான் முதல் அத்தியாயத்தை மட்டும் படித்துவிட்டு அப்படியே விட்டுவிட்டேன். தன் நாவலின் முதல் அத்தியாயத்தை திரையுலக பிரமுகர்களான இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமி ஆகியோருக்கு படிக்க கொடுத்துவிட்டு, அதை பற்றிய தன்னுடைய உரையாடலை முன்னுரையில் போட்டிருக்கிறார் சுஜாதா. ’சினிமாவுக்கு சென்ஸார் அவசியமா?’, ‘அமெரிக்காவில் உள்ளது போல நீலப்படங்களை திரையிட தனி தியேட்டர்கள் வேண்டும்’ ஆகிய வழக்கமான வாதங்களை கொண்ட உரையாடல் என்றபோதும், எழுத்தில் கவர்ச்சியாக இருப்பது திரையில் ஆபாசமாக தோன்றும் என்றும், எழுத்தும் திரையும் வெவ்வேறு ஊடகங்கள் என்று நினைவில் கொண்டபிறகே படைப்புகளை படைக்கவேண்டும் என்ற ஒரு சுவாரசியமான வாதத்தை முன்வைக்கிறார். ஒரு எழுத்தாளருக்காக சென்னை அண்ணா சாலையில் கட்-அவுட் வைக்கப்பட்டது இந்த ஆனந்த விகடனில் வெளியான இந்த நாவலுக்காக தானாம். ‘கனவு தொழிற்சாலை’ எழுதப்பட்ட 70 களின் இறுதியில் அது path breaking-ஆக இருந்திருக்கலாம் ஆனால் இப்போது அது பழகிவிட்டது.

சுஜாதாஇந்த புத்தகத்தை பற்றி சொல்லும் முன்பு எனக்கு சொல்லத்தோன்றியது ஒன்றே ஒன்று. இயக்குநர் மணிரத்னத்துக்கும் சுஜாதாவுக்கும் பொதுவான ஒரு விஷயம் - இருவருடைய படைப்புக்களும் காலத்தை மீறி நிற்பவை. அதனால் தானோ என்னவோ இருவருக்கும் ”ரோஜா, பம்பாய், தில் சே..., கன்னத்தில் முத்தமிட்டால்..” என நன்றாக பொருந்திப்போனது. சுஜாதாவின் 'கொலையுதிர்காலமு'ம் அந்த வரிசையில் இடம்பெற்றதே. இது எழுதப்பட்டது 1981-ல் என்றபோதும், 28 ஆண்டுகளுக்கு பிறகு படிக்கும்போது அடுத்த நூற்றாண்டுக்கும் பொருந்துவதாக இருப்பது இதன் சிறப்பு. வழக்கம் போல ஒரு தொழிநுட்பத்தை எடுத்துக்கொண்டு சுஜாதாவால் அதை சுற்றி பின்னப்பட்ட ஃபார்முலா கதை. ஆச்சரியம் என்னவென்றால் அந்த தொழில்நுட்பம் இன்றும் வளர்ந்து வரும் நிலையிலேயே இருக்கிறது என்பது தான். அப்படியென்றால் சுஜாதா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை எத்தகைய தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று யூகித்துக்கொள்ளலாம். இருப்பினும் ‘கொலையுதிர்காலம்’ஒரே நிகழ்வை விஞ்ஞானத்தையும், பிசாசுகளை மையப்படுத்தும் பைசாசத்தையும் கொண்டு விவரிக்க முற்பட்டு அதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டிருப்பதிலும் ஒரு cult status-ஐ அடைகிறது. தங்கள் நம்பிக்கையை படிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இத்தனை பீடிகைகளுக்கு உள்ளாகும் ‘கொலையுதிர் காலம்’ தான் என்ன?

பத்து செகண்ட் முத்தம்டில்லியில் நடந்த 1983 ஆசிய விளையாட்டு போட்டியின் போது சுஜாதா எழுதிய இந்த கதை ஒரு காதல் கதை அல்ல. உலகளாவிய பந்தயங்களில் கலந்துக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்த சில விநாடிகளுக்காவே தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிக்கின்றனர். அவர்களுடைய சிந்தையும், உடம்பும் விளையாட்டையன்றி வேறு எதுவும் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு பெண் ரசி என்கிற தமிழரசி, தன் கோச் மற்றும் மாமாவான ராஜ்மோகனின் மேற்பார்வையில் உலக சாதனையை நிகழ்த்தும் முயற்ச்சியில் இருக்கிறாள். இடையில் ரிப்போர்ட்டர் மனோ மூலம் அவள் மனதில் காதல் நுழைகிறது. ராஜ்மோகனின் அளவுகடந்த கண்டிப்பும், சாதனை நிகழ்த்தும் முனைப்பும் காயப்படுத்தியிருந்த தமிழரசியின் மனதுக்கு இந்த காதல் அமிர்தமாக இனிக்கிறது. விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிடும் மனநிலைக்கு போகிறாள் ரசி. தடுமாறிய ரசியின் விளையாட்டு ஆர்வத்தை மீண்டும் விளையாட்டுக்கு திருப்ப ஒரு பெறும் விலை கொடுக்கப்படுகிறது. மொத்தமே 2-3 நாட்களில் நடப்பதாக எழுதப்பட்ட இந்த நாவல் கீழே வைக்க தோன்றாத அளவுக்கு விறுவிறுப்பாகவும், மனதை தொடுவனவாகவும் உள்ளது. விசா பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள இந்த 104 பக்கங்களும், ரூ. 50/- விலையும் கொண்ட புத்தகம், நிச்சயம் உங்களை கவரும்.

24 ரூபாய் தீவுசுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் 'categorise' செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் 'ஒண்டித்வளி' என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததாம். இந்த நாவலை 'அப்படியே' எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாஸன் அடிக்கடி சொல்வார் என்று சுஜாதா தன் நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். 120 பக்கங்களில் ஒரு நிருபரின் அபாயகரமான வாழ்க்கையை அச்சு அசலாக நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சுஜாதா. நம்புங்கள்... இந்த நாவலை படிப்பது ஒரு roller-coaster ride-க்கு சமானம்.

{mosimage}

பக்கம் பக்கமாக எழுதப்படுபவையே இலக்கியம், மக்களிடம் எடுபடும் என்ற மாயையை தன் நேரடியான எழுத்துக்களால் முறியடித்து தமிழ் எழுத்துலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா. இன்றும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்குபவர் சுஜாதா. இவர் பேரை போட்டாலே படித்த இளைஞர்கள் யோசிக்காமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பது பதிப்பாளர்களின் கருத்து. அத்தகைய ஒரு role model இன்று நம்மைவிட்டு எட்டாத உயரத்துக்கு போய்விட்டார் என்பது உண்மையிலேயே வருத்தமான விஷயம். இன்று காலை ஆஃபீஸுக்குள் நுழைந்தவுடனே திரு. சுஜாதா நம்மை விட்டு போய்விட்டார் என்பதை கேள்விப்பட்டேன். ஏதோ ஒரு சோகம் நெஞ்சை அழுத்தியது. அவர் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். என்னை போன்ற வாசகர்களுக்கு உங்கள் மறைவு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஏதோ ஒரு வகையில் உங்கள் பாதிப்பு எங்கள் வாழ்க்கையில் எப்போதும் இருக்கும் - உங்கள் எழுத்துக்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக..

பிரிவோம் சந்திப்போம்மனதில் நின்ற, higher benchmarks ஏற்படுத்திய ஒரு நாவலுக்கு sequel எனப்படும் இரண்டாம் பாகம் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பதை எண்டமூரியிடம் கேளுங்கள். மனிதர் 'துளசிதளத்'தில் score செய்து, அதை 'மீண்டும் துளசிதளத்'தில் தொலைத்தார். இப்போது சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' இரண்டாவது பாகத்தை படிக்கலாமா? வேண்டாமா? என்று ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியாக 'சரி! புத்தகத்தை வாங்கிவிட்டோம் எனவே படித்து தான் வைப்போமே' என்று படிக்க ஆரம்பித்தேன். எனது 'worst fears come true' போல ஆரம்பித்த நாவல், கடைசியில் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டது. எனக்கு முன்பு என் அம்மா இதனை படித்துவிட்டார். எனவே அவரிடம் நிறைய இதனை பற்றி பேசினேன். A worthy sequel for a successful prequel.

சுஜாதாOne thing leads to another... and we end up experiencing new pleasures.. சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலின் முன்னுரையில் அதன் நாயகி நிதியை 'பிரிவோம் சந்திப்போம்' மதுமிதாவுடன் ஒப்பிட்டு இருப்பார். எனவே கோவையில் புத்தகம் வாங்க போனபோது 'பிரிவோம் சந்திப்போம்'-இன் இரண்டு பாகங்களையும் வாங்கினேன். சுஜாதாவிடம் இருந்து ஒரு hard hitting stark நாவலை எதிபார்த்த எனக்கு இனிய அதிர்ச்சி. 24 வயதில் வரும் முதல் காதலை அதன் அப்பாவித்தனம் குறையாமல், பிரமிப்பு நீங்காமல், மிக அழகாக, தெளிந்த நீரோடையின் நடையை போல சலசலத்திருக்கிறார்.

இரண்டாவது காதல் கதைஇது வைத்தியிடம் இருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். ஏதெங்கிலும் பயணத்தின் நினைவாக புத்தகங்கள் வாங்கி அந்த பயணத்தை பத்திரப்படுத்துவது. இந்த முறை கோவை சென்றபோது சென்ட்ரலில் உள்ள ஹிக்கின்போத்தம்ஸில் வாங்கியது சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை'. இதன் நடை சுஜாதாவின் 'அனிதாவின் காதல் கதை'யை ஒத்திருந்தாளும், இம்முறை கதையின் களம் Board Room Politics-ல் மையம் கொண்டுள்ளது. வாழ்க்கையை பட்டாம்பூச்சியை போல சிறகடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருக்கும் நிதியின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது, கூடவே எதிர்ப்புக்களும். வாழ்க்கையை போல கட்டுப்பாடான ஆசானும் இல்லை. நிதியின் வாழ்க்கையில் இரண்டாம் காதல் நுழைகிறது. வழக்கமான தனது விறுவிறுப்பான நடையில், சுஜாதாவின் முத்தியரையோடு ஜிவ்வென பறக்கிறது இந்த 'இரண்டாவது காதல்'.