ஆதலினால் காதல் செய்வீர்
மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் இந்த படைப்பை சமீபத்தில் சென்னை ரயில் நிலைய ஹிக்கின்போத்தம்ஸில் பிடித்தேன். நாவலை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - Simply hilarious!!! ஆரம்பத்திலேயே கதையை யூகிக்க முடிந்தாலும், அடுத்த 142 பக்கங்களில் நம்மை கிட்டத்தட்ட விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறார். Diametrically opposite-ஆக - காதல் அவசியமில்லை என்ற ஆரிஸ், காதலிக்கவே பிறந்த ஜோமோ, விற்பனை பிரதிநிதியான கிட்டு / கிட்டா, கல்யாணம் ஆனபின்பும் மனையுடன் கடிதத்தில் காதலிக்கும் பார்ஸ்ஸாரதி மாமா என நான்கு நண்பர்கள், அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் - அபிலாஷா, அபிராமி, ஷாலினி, கஸ்தூரி மற்றும் நீலா ஆகிய பெண்கள் என செம ரகளை. இந்த நாவலை யாரும் இன்னும் சினிமாவாக எடுக்க முயற்சிக்காதது ஆச்சரியம் தான்.