Phoneஎன் முன்னாள் பாஸ் ஒருமுறை சொன்னார் - “உனது ப்ளாகுகளை படித்துவிட்டு உன்னை சந்திப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும்”. காரணம் - நான் எழுதுவதை படித்துவிட்டு நான் நிறைய பேசுபவன் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால் எனக்கு ஃபோன் செய்தீர்களானால் நிச்சயம் கியாரண்டியாக அடுத்த 2-3வது நிமிடத்தில் உங்கள் வேலையை தொடர போய்விடலாம். ஃபோனில் மணிக்கணக்கில் பேசுபவர்களை கண்டால் எனக்கு ஒரு வித பிரமிப்பு தான் தோன்றும் - பேசுவதற்கு இவ்ளோ விஷயங்கள் இருக்கிறதா என்று. எனக்கோ நேரடியாக விஷயத்துக்கு வரவேண்டும். அது குறித்து பேசி முடித்தவுடன் - வேறு என்ன பேசுவது என்று தெரியாது. “அப்புறம்....”, “வேற என்னடா?” போன்ற கேள்விகள் கொஞ்சம் அலர்ஜி தான். அதுவும் அந்த கேள்விகள் தொடர்ந்து வரும் பட்சத்தில் நான் அம்பேல். குறிப்பாக பழைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பேசும்போது தொடர்ந்து ரெண்டு பக்கமும் மாத்தி மாத்தி “அப்புறம்”... “வேற..” வரும்போது எப்போதுடா பேச்சை முடிப்பாங்கன்னு இருக்கும். என்னையும் மதிச்சு ஃபோன் பண்ணியிருக்காங்க, என் கிட்டே இன்னும் கொஞ்ச நேரம் பேசனும்னு ஆசைப்படுறாங்கன்னு தெரிஞ்சாலும் என்னால வெட்டியா மொக்கை போட முடியலையே! எனக்கு நல்லா தெரிஞ்ச விஷயம் பத்தி கேளுங்க... மணிக்கணக்குல லெக்சர் எடுக்குறேன். இல்லைன்னா எனக்கு புதுசான விஷயத்தை சொல்லுங்க... நான் எவ்ளோ நேரம்னாலும் கேட்டுக்குறேன்... ஆனா ரெண்டு தடவை “அப்புறம்”.. “வேற என்ன விஷயம்?” வந்தா ஃபோனை கட் பண்ணிக்குறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. அதுக்காக நான் திமிர் புடிச்சவன் இல்லை... என்னால முடியலை!!! நான் ஒரு நல்ல ‘conversationalist" கிடையாதுங்குறது என்னுடைய வட்டத்தில் எல்லாருக்கும் தெரியும். எனக்கு புடிச்ச சில விஷயங்கள் தவிர்த்து மற்ற விஷயங்கள் என்னால பேச முடியாது. அதனால நான் வெறுமனே உளறிகொட்டுறதை விட அமைதியா இருக்குறதே உத்தமம்னு நினைக்கிறவன். என் பொண்டாட்டி கூட என்னை திட்டி, குதறி பாத்துட்டா... எனக்கு தான் மொக்கை போட வரமாட்டேங்குது. நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன்? அதே மாதிரி எதிர் முனையிலே பேசுறவங்களும் எப்போ ஒருத்தர் “அப்புறம்..”, “வேற..”ன்னு தினறுராங்களோ, அப்போவே பேச்சை கட் பண்ணினாங்கன்னா மரியாதை / அன்பு குறையாம இருக்கும்ங்குறது என்னோட அபிப்பிராயம். இல்லைன்னா ”திமிர் புடிச்சவன், பேசமாட்டேங்குறான்”, “சரியான தத்தி..”ன்னு அனாவசியமான எதிர்மறையான அபிப்பிராயங்கள் வந்து உறவை பங்சர் பண்ணிடும்.

தீபாவளி நரகாசுரன் செத்ததுக்காக கொண்டாடப்பட்டதா இல்லை ராமர் அயோத்திக்கு திரும்ப வந்ததுக்காக கொண்டாடப்பட்டதாங்குற காரணம் எதுக்குங்க? ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு சந்தோஷமா போச்சா? அவ்ளோ தான். எனக்கென்னவோ முன்னாடி மாதிரி இப்போ தீபாவளி அவ்வளவு சந்தோஷமா கொண்டாடப்படுறது இல்லைன்னு ஒரு அபிப்பிராயம். என்னடா இவன்... “எங்க காலத்துல”ன்னு பெருசுங்க போல ஆரம்பிக்குறானேன்னு பயப்படாதீங்க, நான் ”யூத்” இல்லைன்னாலும் அவ்ளோ ”பெருசு” இல்லை. தீபாவளின்னாலே விடிய காலையிலே எழுந்து சீயக்காய் வச்சு, எண்ணெய் தேய்ச்சு குளிச்சு, அம்மா கையால மஞ்சள் வச்ச புதுத்துணி வாங்கி போட்டுகிட்டு தீபாவளி வந்துடுச்சுன்னு கட்டியம் கூறுர மாதிரி ஒரு சரவெடி போட்டு, வெளிச்சம் வந்தா மத்தாப்பு நல்லா தெரியாதுன்னு அவசரம் அவசரமா 2 டப்பா மத்தாப்பு காலி பண்ணி, வெளிச்சத்துல நம்ம டிரெஸ் எப்படி இருக்குன்னு பார்த்துகிட்டு, பக்கத்து வீட்டு பிள்ளைங்க கிட்டே “இது தான் உன் தீபாவளி டிரெஸ்ஸா?”ன்னு பார்த்து (சில சமயம் மனசுக்குள்ளே சின்ன பொறாமையோடு) ஒப்பிட்டுக்கொண்டு, அம்மா செய்த தீபாவளி பலகாரங்களை சம்புடங்களில் போட்டு தர பக்கத்து வீடுகளுக்கு கொண்டுப்போய் கொடுத்துவிட்டு வந்து, தேங்காய் அரிசி மாவு அடை - கறிக்குழம்பு என்ற தீபாவளி ஸ்பெஷலை முடித்துவிட்டு, விடிய்ற்காலையில் நேரமே எழுந்தது கண்ணை அழுத்த, கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு மாலையில் (தீபத்துக்கு என்று கொஞ்சம் ஒதுக்கப்பட்ட பிறகு மீதி) பட்டாசு எல்லாத்தையும் காலி செய்து தீபாவளி முடிஞ்சுது என்பதை அறிவிக்கும் விதமாக பட்டாசு குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் என எல்லாவற்றையும் கொளுத்து முடிக்கும்போது “இனி அடுத்த வருஷம் தான்” என்ற ஏக்கம் தான் மிஞ்சும். இப்போ டி.வியிலே சினிமாக்காரன் / சினிமாகாரிகளின் இளிப்பு, சினிமா இவற்றுக்கு இடையே கிடைத்த கொஞ்ச நேரத்தில் பிள்ளைகள் பட்டாசு வெடித்துவிட்டு கடமையாக டி.வியில் ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள். விடுங்க... இது தமிழனின் சாபம் (கலாநிதி மாறன் குடும்ப உபயம்)... இதை நினைக்கிறதை விட உங்களுடன் சில தீபாவளிகளின் நினைவை பகிர்ந்துக்கலாம்.

Homosexualsவலைமனையில் எழுதுவதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் - நமது கருத்தை ஒத்துப்போகும் / வெட்டிப்போகும் நபர்களின் நட்பு கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த பதிவை படித்துவிட்டு ஒரு நண்பர் பதில் அனுப்பினார். கல்லூரி முடித்திருப்பதாக சொன்னார் "நீங்கள் Brokeback Mountain பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டிருந்தார். அதில் இரு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையேயான உறவை சொல்லியிருப்பார்கள் என்றும் "ஓரினச்சேர்க்கை பாவம் அல்ல" என்றும் எழுதியிருந்தார். "ஒருவருடைய sexuality என்பது தனி மனிதர்களின் விருப்பம்... அதை சரி என்றும் தவறு என்றும் சொல்லும் உரிமை எனக்கு இல்லை... அந்த விவாத நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டதாக நம்பிய இளைஞரை குறித்து எனக்கு தோன்றியதை எழுதினேன்" என்றும் சொன்னேன். மேலும் ஓரினச்சேர்க்கையை வெறுக்கவோ / ஆதரிக்கவோ செய்யும் அளவுக்கு எனக்கு அது பற்றிய ஆழமான அபிப்பிராயம் எல்லாம் கிடையாது. ஆனால் ஓரினச்சேர்க்கை உறவால் வாழ்க்கையின் பிற்பகுதியில் எந்த ஒரு பயனும் இல்லை என்பது எனது கருத்து. பிறகு வழக்கமாக எனது பதிவுகளை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக்கொள்வார்.

Radioரொம்ப நாள் ஆச்சு... பதிவு எழுதி! இந்த காலகட்டத்துல என்னோட கூகுள் ரேங்க் எல்லாம் கீழே இறங்கி போனதை கூட கவனிக்க முடியாத அளவுக்கு சமயப்பற்றாக்குறை. அப்படி என்ன வெட்டி முறிக்கிறேன்னு கேக்காதீங்க... அப்புறம் அழுதுடுவேன்... ஆமாம்! முன்னாடி எல்லாம் எதை பார்த்தாலும், படிச்சாலும் என்னோட நண்பர்கள் கிட்டே (அது நீங்க தாங்க) பகிர்ந்துக்கணும்னு எழுதுவேன்... கொஞ்ச நாளா மரத்துப்போச்சு. திரும்ப எழுதணும்னு நினைக்கிறப்போ என்ன எழுதறதுன்னு தெரியலை. சந்தியா கிட்டே சொன்னப்போ அவங்க "ரேடியோ" பத்தி எழுதுங்களேன்னு கரு எடுத்து குடுத்தாங்க. அதை டெவலப் பண்ணி உங்ககிட்டே பகிர்ந்துக்குறேன்.

Vijay and meசில நேரங்களில் சில விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்று நமக்கு புரியாது ஆனால் அவை நடக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியூட்டுவனவாக அமைந்துவிடுகிறது. சமீபத்தில் எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. எனது ஆஸ்திரேலியா வாழ் நண்பரை பற்றி சொல்லியிருக்கிறேன் அல்லவா? கடைசியாக அவர் கடந்த வருடம் சென்னைக்கு வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அதற்கப்புறம் அவரை எப்போது பார்ப்பேன் என்பது தெரியவில்லை. ஒருவேளை நான் ஆஸ்திரேலியா போனால் பார்க்கக்கூடும் என்று இருந்தோம். எனது Aussie PR வேலைகள் தடைபட்டு மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டபோது ஆஸ்திரேலியா இன்னும் இரண்டு வருட தூரத்தில் இருப்பதாக தோன்றியது. திடீரென்று விஜய் நான்கு நாட்களுக்கு சென்னைக்கு அவரது பள்ளியின் alumni meeting-க்கு வருவதாக சொன்னபோது எனக்கு பயங்கர சந்தோஷம்.

Aadhiஎங்கள் புட்டுவை நாங்கள் செல்லமாக “குட்டி பூ” என்று கூப்பிடுவது உண்டு. அவன் பிறந்த சமயத்தில் அழகிய புஷ்பம் போல மெலிதாக, அழகாக இருந்ததால் அப்படி கூப்பிட ஆரம்பித்தோம். அப்படி கூப்பிடுவது இன்னும் தொடர்கிறது. இதில் ஒரு நகைச்சுவையான சம்பவம் நடந்தது. அகிலாவின் அக்கா ஒரு நாள் நாங்கள் அவனை ”குட்டிப்பூ” என்று அழைப்பதன் காரணத்தை துப்பறிந்து கண்டுபிடித்துவிட்டாராம். நானும் அகிலாவும் கல்யாணம் ஆனதும் ஒன்றாக முதலில் பார்த்த படம் “பூ”. அதன் ஞாபகமாக நாங்கள் புட்டுவை “குட்டிப்பூ” என்று அழைக்கிறோமாம். எனக்கு சிரிப்பாக வந்தது. ஒருவேளை நாங்கள் அதே சமயத்தில் வெளிவந்திருந்த “வாரணம் ஆயிரம்” படத்தை முதலில் பார்த்திருந்தால் அவரது Logic-ல் ஆதியை “குட்டிப்பூ”வுக்கு பதிலாக ”குட்டி யானை” என்று கூப்பிட வேண்டியிருந்திருக்குமோ? (வாரணம் = யானை) புட்டூ... Great escape!!! அப்புறம்... புட்டுவின் அழகு அவன் கண்கள். “வித்யா பாலனுடைய கண்களுக்கு பிறகு நான் பார்த்த பேசும் / 'expressive" கண்கள் புட்டுவுடையது” என்று அடிக்கடி சொல்வதுண்டு. அப்படிப்பட்ட வித்யாவால் சமீபத்தில் ஒரு சின்ன ஆறுதல்.

Love MakingAdmitted that it will be more of an subjective answer rather than being objective because of the experience that varies with the individuals. Yet this post is based on a typical Indian guy (shall I say archaic) point of view / journey of sex. Whenever I had friends who got married after me, I used to get queries from them regarding sex. Considering that I myself was suffering from Performance Anxiety when I got married, now I feel that have a company in a good number of guys who have apprehensions about sex after marriage. When looking back why it was so, I feel that it was because of the way we were brought up with sex discussions as a taboo, with a "helping hand" that ensured our virginity to be lost only with the wife in the "first night" after marriage. This doesn't mean that pre-marital sex didn't exist then, but I am talking about those who either did't have the chance / courage to do that.

Anaikatti - Click the image to read furtherசில சமயங்களில் ஏதோ ஒரு பொருள் நம்மை வேறு ஏதோ ஒரு பழைய ஞாபகங்களை தூண்டிவிடும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டி.வி-யில் ”காதல் சொல்ல வந்தேன்” என்ற படம் போட்டிருந்தார்கள். ஆனால் 2000 - 2001 வருடத்தில் “காதல் சொல்ல வந்தேன்” என்ற பெயரில் ஒரு படம் தயாராகியிருந்தது. கார்த்திக் - இஷா கோப்பிகர் நடித்திருந்த அந்த படம் வெளிவரவே இல்லை. ஆனால் அதில் இரண்டு அற்புதமான பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஹரிஹரன் பாடிய “செம்பருத்தி பூவே..” மற்றும் “சொல்ல வந்தேன்... காதல் சொல்ல வந்தேன்” ஆகிய இரண்டு பாடல்களும் மனதை வருடுவன. அந்த பாடல்களை முதல் முதலாக கேட்டது ஒரு அழகான அனுபவம் ('காதல் சொல்ல வந்தேன்’ வெளிவராததால் அந்த பாடல் பின்னர் சுந்தர்.சி - அஞ்சலி நடித்த “ஆயுதம் செய்வோம்” படத்தில் சிற்சில மாற்றங்களுடன் “இன்னும் ஒரு வானம்” என்று வேறு வரிகளில் உபயோகப்படுத்தப்பட்டது).