Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

கொஞ்ச நாட்களாக பார்த்த படங்களை பற்றி ஒன்றும் எழுதவில்லை... பெரிதாக காரணமில்லை - வெறுமனே சினிமா குறித்த பதிவுகள் குவிந்துவிட கூடாது என்கிற கவனம் தான். பின்பு பல படங்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டபடியால் ஒவ்வொன்றை பற்றியும் சுருக்கமாக சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து போட்ட பதிவு. என்னென்ன படங்கள் நான் சமீபத்தில் பார்த்தது? தமிழில் - ஊட்டி வரை உறவு, மறுபடியும், மலையாளத்தில் - வாஸ்தவம், தலப்பாவு, ஹிந்தியில் - Woh Kaun Thi, Anupama, Arth. மலையாள - வாஸ்தவம் / தலப்பாவு மற்றும் தமிழ் ஊட்டி வரை உறவு தவிர மற்றவை எல்லாம் veoh.com-ல் இருந்து Download செய்யப்பட்டவை. முன்பே சொன்னது போல - பல அரிய படங்கள் எல்லாம் veoh-ல் கிடைத்தது. எனவே இந்த பதிவு Veoh-க்கும், Google Videos-க்கும் மற்றும் இதை upload செய்த புண்ணிய ஆத்மாக்களுக்கும் சமர்ப்பனம்.

Tab Title 1

ஊட்டி வரை உறவு

{mosimage}இது மறைந்த ஸ்ரீதரின் படம் என்பதால் ‘காதலிக்க நேரமில்லை’ போல இருக்கும் என்று ஆர்வத்தோடு பார்த்தேன். ஆனால் ‘காதலிக்க..’வின் சமர்த்து இதில் சுத்தமாக இல்லை. ஆள் மாறாட்டத்தை கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்து கொடுத்து இருந்தார் ஸ்ரீதர். நாயகர்களான சிவாஜிக்கும், முத்துராமனுக்கும் அவ்வளவாக வேலை இல்லை. நாயகர்களுக்கே இந்த நிலைமை என்றால் நாயகிகளுக்கு என்ன சொல்வது? இந்த படத்தைவிட இதன் தயாரிப்பு பற்றி ஸ்ரீதர் சொன்னது தான் சுவாரசியமாக இருந்தது. நான்கு வருடங்களாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதை பலமுறை மாற்றப்பட்டதாம். ஒரு முறை பாதி எடுக்கப்பட்ட பின்பு அந்த கதை எம்.ஜி.ஆருடன் தான் நடிக்கும் ‘அன்பே வா!’ போல இருக்கிறது என்று நாகேஷ் சொன்ன பின்பு மீண்டும் வேறு கதை வைத்து முழுதும் எடுக்கப்பட்டதாம். கடைசியாக கே.ஆர் விஜயாவை வைத்து படமாக்கப்பட்ட ஒரு பாடல் திருப்தியாக இல்லாததால் ரிலீசுக்கு 4 நாட்களுக்கு முன்பு வேறு பாடல் பதிவு செய்யப்பட்டு (“தேடினேன் வந்தது”) படமாக்கியபோது தரை வேறாக தெரிய, பம்பாயில் வேறு படப்பிடிப்பிலிருந்து அவசரம் அவசரமாக கொண்டுவந்து மீண்டும் படமாக்கப்பட்டு இணைக்கப்பட்டதாம். இத்தனை கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது இந்த படத்தில் தெரிகிறது - சரியான திட்டமிடல் இல்லை என்பது. படம் அவ்வளவு மோசம் இல்லை எனினும் ‘காதலிக்க நேரமில்லை’யை பார்த்தபின்பு இந்த படம் சுவாரசியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.

மறுபடியும்:-
{mosimage}எனது All Time favourites-ல் இந்த படமும் ஒன்று. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை 2 நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். பல இடங்களில் DVD/VCD-ஐ தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கடைசியாக Google Videos-ல் யாரோ ஒரு புண்ணியவான் 1 வருடத்துக்கு முன்பு ஏற்றிவைத்து இருந்திருக்கிறார். அதை Download செய்து பார்த்தபோது இம்முறை படம் இன்னும் நன்றாக இருந்தது. ரேவதி நடிப்பில் பின்னியிருந்தார். குடும்பமே உலகம் என்று நினைத்து சந்தோஷமாக இருந்த துளசி (ரேவதி), தன் கணவனான திரைப்பட இயக்குநர் முரளி (’நிழல்கள்’ ரவி) நடிகை கவிதா (ரோகினி) கூட கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறான் என்று தெரிந்தவுடன், மீண்டும் தன் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதால் படத்துக்கு ‘மறுபடியும்...’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி பாலுமகேந்திராவின் ’டச்’ தெரிந்தது. நாடகத்தன்மையை ஓரளவுக்கு குறைத்து இயல்பாக நகர்த்தியிருந்தார். இளையராஜாவின் பாடல்கள் இனிமை என்றால், இதன் பின்னணி இசை ‘மாஸ்டர் பீஸ்’. அற்புதமான இசைக்கோர்வைகளை கேட்க முடிந்தது. பாலு மீது இருந்த மதிப்பை இந்த படம் குறைத்துவிட்டது. ஏன் என்று இதே பதிவில் பின்னால் சொல்கிறேன்.
{jacomment off}