Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

தமிழ் திரையுலகில் உண்மையான சுட்டிப்பெண் யாரென்று கேட்டால் சட்டென வரும் எனது பதில் ‘ரேவதி’. நான் ஒன்றும் புராதன காலத்தில் வாழும் மனிதன் அல்ல எனினும் எத்தனை நடிகைகளை பார்த்து வருகிறேன், எனினும் தமிழ் திரையில் Original bubbly girl யார் என்று கேட்டால் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ‘மௌன ராகம்’ ரேவதி தான். சமீப காலமாக எனது iPod-ல் புன்னகை மன்னன் பாடல்களை, குறிப்பாக “சிங்களத்து சின்ன குயிலே”, “கவிதை கேளுங்கள்” ஆகிய பாடல்களை, பார்க்கும் போது இந்த இளமையும், துறுதுறுப்பும், நடிப்பு திறமையும் இணைந்து இனிமேல் நடிகைகள் யாருமே தமிழ் சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்களா? என்ற ஆதங்கம் மேலோங்குகிறது. அந்த ரேவதி இப்போது ஒரு வயதான சேச்சியாக என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. நடிகை, சமூக சேவகி, இயக்குநர், நாட்டிய தாரகை என்று பலதரப்பட்ட முகங்களை கொண்ட ரேவதியை இப்போது தமிழ் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. எனவே ரேவதியை குறித்து ஒரு சின்ன தேடல் தான் இந்த பதிவு.

Page 1

நான் மிகவும் சின்ன பையனாக இருந்தபோது என் குடும்பத்தோடு காஞ்சிபுரம் கோவிலுக்கு போயிருந்தேன். அங்கே ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. கூட்டத்தில் ‘ரேவதி வந்திருக்காங்க..’ என்று பரபரப்பாக செய்தி பரவியது. என் அம்மா ’அதோ அந்த வெள்ளை புடவையில் இருப்பது தான் ரேவதி’ என்று காட்டினார். மிக சிறிய வயது ஆனதால் எனக்கு ரேவதியின் முகமே நினைவில்லை. ஆனாலும் நான் பள்ளிக்கூடத்தில் நான் ரேவதியை பார்த்தேன் என்று சொல்லிகொண்டு இருந்தேன்.

{mosimage}கொச்சியில் மேஜர் எம். கேளுன்னிக்கும், லலிதா அவர்களுக்கு ஆஷா கேளுன்னியாக பிறந்து தேசமெங்கும் பல இடங்களில் வளர்ந்து கடைசியில் சென்னையில் மட்டுமல்ல நல்ல திரைப்பட விரும்பிகள் மனதிலும், தாய்மார்களின் உள்ளத்திலும்’ரேவதி’யாக செட்டில் ஆன கதை கிட்டத்தட்ட ஒரு fairy tale என்றே சொல்லலாம். நான் ரேவதியின் சுயசரிதையை எழுதப்போவதில்லை மாறாக எனக்கு எப்படி ரேவதியை (திரையில்) தெரிந்தது, என் all time favourite நடிகையாக உயர்ந்தார் என்பதை பற்றி தான் இந்த பதிவு. ரேவதி தன் பெயரிலேயே ஒரு இணையதளத்தை வைத்திருக்கிறார் (http://www.revathy.com ) எனவே அவரது வாழ்க்கையை அவரது வார்த்தைகளாலேயே அதில் படித்துக்கொள்ளலாம்.

பின்பு நான் ஏழாவதோ / எட்டாவது படிக்கும்போது டி.டி-1ல் மௌனராகம் படம் போட்டு இருந்தார்கள். ஏகத்துக்கும் கட் செய்யப்பட்டு காட்டப்பட்ட அந்த படத்தில் எனக்கு ரேவதியின் முகம் கொஞ்சம் பதிவானது. குறிப்பாக ‘ஓஹோ மேகம் வந்ததோ’ பாடலும், ஸர்தாருக்கு தமிழ் சொல்லித்தரும் காட்சிகளும் எனக்கு பிடித்தது. படம் புரியும் பக்குவம் இல்லாத வயதினால் எனக்கு ஃப்ளாஷ்பேக்குக்கும், மோகன் கதைக்கும் வித்தியாசம் புரியாமல் குழம்பியது தான் மிச்சம். ஆனால் இது தான் ரேவதி, ஒரு நல்ல நடிகை என்று அபிப்பிராயம் உருவானது.

{mosimage}எனினும் ரேவதியை பற்றி தீவிரமாக ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றியது என்றால் அது அவரது கணவர் சுரேஷ்மேனனுடன் நடித்த சொந்த தயாரிப்பான “இரவில் ஒரு பகல்” என்ற தொலைக்காட்சி தொடரிலிருந்து தான். பெரிதாக ஒன்றும் காரணமில்லை, ஒரு familiarity தோன்றியதும், அதன் பிறகு அவர் என்னென்ன படங்களில் நடித்து இருக்கிறார் என்று ஒரு ஆர்வம் வந்தது. அந்த அபிப்பிராயத்துக்கு பின்பு நான் ரேவதி நடித்திருந்தால் அது நல்ல படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் டி.டி-ல் வரும் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். தொலைகாட்சி தொடர் வந்தபோது எல்லாம் ரேவதிக்கும் சுரேஷ்மேனனுக்கும் திருமணம் முடிந்துவிட்டு இருந்தது. இந்த தொலைகாட்சி தொடருக்கு பிறகு ரேவதி மீண்டும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருந்தார். (அஞ்சலி, ஆயுள் கைதி, இதயத்தாமரை, ராஜா கைய வச்சா.. என அவரது இரண்டாவது இன்னிங்க்ஸும் நல்லபடியாக போய்க்கொண்டு இருந்தது)

For some strange reasons, நான் ரேவதி ஊட்டியில் வசிப்பது போலவும், அவர் ஒரு மாமூல் தமிழ் நடிகை அல்ல என்பது போலவும் ஒரு அபிப்பிராயம் வைத்து இருந்தேன். ரேவதியின் ஒரு பேட்டியில் ‘நான் ஓய்வு நேரத்தில் என் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் கும்பலாக சைக்கிள் எடுத்துக்கொண்டு அடையாறில் ரவுண்ட் அடித்து விட்டு, அவர்களோடு ஐஸ்க்ரீம் சாப்பிடுவது, என்னை ஒரு சாதாரண மனுஷியாக, grounded-ஆக வைத்திருக்கிறது’ என்று சொல்லியிருந்தார். அப்போது தான் எனக்கு உறைத்தது இவரும் சென்னையில் வசிக்கும் ஒரு சராசரி நடிகை என்று. A funny preconceived notion.

{mosimage}திருமணம் ஆனாலும், ஏற்கனவே இருந்த நல்ல பேர் மற்றும் குடும்பப்பாங்கான நடிகை என்ற இமேஜ், ரேவதிக்கு தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டு இருந்தன. அவருக்கு சமகாலத்தில் அறிமுகமான ஊர்வசி மலையாள பக்கம் ஒதுங்கிவிட்டதற்கு காரணம் என்னவென்று ஊர்வசியே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். “ஒரு காலகட்டத்தில் என்னை பட அதிபர்கள் கவர்ச்சியாக நடிக்குமாறு நிர்பந்தித்தனர். அதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். அந்த சமயத்தில் ரேவதி மிக அழகான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். ஒரு சமயத்தில் என்னை கவர்ச்சியாக நடிக்க சொன்ன பட அதிபரிடம் எனக்கு ஏன் ரேவதிக்கு கொடுப்பது போன்ற கதாபாத்திரங்களை தரமாட்டேன் என்கிறீர்கள். எனக்கு அது போல நடிப்பது தான் பிடிக்கிறது. அதற்கு அந்த பட அதிபர் ரேவதி குள்ளம், அதனால் அவருக்கு கவர்ச்சியான உடைகள் ஒத்துவராது என்று கூறினார்”. அதற்கு பிறகு ஊர்வசி தமிழில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து மலையாளத்தில் ஒதுங்கிவிட்டாராம். எனவே ஒரு வகையில் ரேவதியின் குள்ளமான உயரமே அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக மாறியது.