Jayakanthan
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
{mosimage}'சில நேரங்களில் சில மனிதர்கள்' - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது. இதை முதலில் நான திரைப்படமாகத்தான் பார்த்தேன். எனது 13ஆம் வயதில், DD-1இன் மாநில மொழி திரைப்பட வரிசையில் ஒரு ஞாயிற்றுகிழமை மதியம் பார்த்தேன். அந்த சமயம் நான் ராமாயணம், மகாபாரதம் என இதிகாசங்களை படித்து முடித்திருந்த சமயம். அதில் வந்த chauvinistic கருத்துக்களால் கற்பு, கலாச்சாரம் குறித்து ஒரு மாதிரியான அபிப்பிராயம் தோன்ற ஆரம்பித்திருந்த formative years-இல் இருந்தேன். அந்த படத்தில் லக்ஷ்மிக்கு (அதாவது கங்காவுக்கு) இழைக்கப்பட்டது கொடுமை என்று மட்டும் புரிந்தது. வேறு எதுவும் புரியவில்லை. காலப்போக்கில் எனக்கு அந்த படத்தை பற்றி நிறைய மறந்து போய்விட்டது. கடந்த வாரம் வேறு சில புத்தகங்கள் வாங்கப்போன போது இந்த நாவல் கண்ணில்பட்டு வாங்க நேர்ந்தது.

Synopsis

{mosimage}கங்கா - 17 வயதான இந்த இளம்பெண் ஒரு மழைக்கால முன்னிரவில், காலேஜ் வாசலில் ஒர் கார்-காரனால் Lift கொடுக்கப்படுகிறாள். ஆனால் அவன் அவளை island ground-க்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிடுகின்றான். அழுகையும் ஓட்டமுமாக வீட்டுக்கு வரும் கங்கா தன் தாயிடம் நடந்ததை கூற அவள் அதிர்ச்சியில் ஓலமிட்டு ஊரை கூட்டிவிடுகிறாள். கங்காவின் அண்ணன் அவளை அடித்து, கொட்டும் மழையில் வீதியில் வீசிவிடுகிறான். நிராதரவாக ஊராரின் கேலிப்பேச்சுக்கு ஆளாகி இரண்டு நாட்கள் தெருவில் கிடந்த கங்காவுக்கு அவள் மாமா மூலமாக ஆதரவு கிடைக்கிறது. கங்கா நன்றாக படித்து ஆபீசர் ஆகிவிடுகிறாள். காலம் அவளை இறுக்கமாக, ஆண்களை வெறுக்கும் misanthropist-ஆக மாற்றிவிடுகிறது.

கங்காவின் மாமாவும் சமூகமும் அவள் கெட்டுபோனவளாதலால் திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்று போதிக்கின்றனர். 'You can be a concubine to somebody but not a wife to anybody' (நீ ஒரு வைப்பாட்டி ஆகலாம், மனைவியாக தகுதியில்லாதவள்) என்று அடிக்கடி குத்திகாட்டப்பட்டு ஆண் சமூகத்தையே ஒரு வெறுப்புடன் பார்க்கிறாள். தன் மாமாவின் பேச்சுக்களால் (அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவளை கெடுத்தவனையே கண்டுபிடித்து கல்யாணம் பண்ணி காட்டட்டும்') கடுப்படையும் கங்கா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனை 12 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கிறாள். அவன் இப்போது 'பிரபு இண்டஸ்ட்ரீஸ்' முதலாளி - பிரபு என்கிற பிரபாகர். தன்னை கெடுத்ததால் வந்த குற்றவுணர்ச்சி, மற்றும் தாழ்வு மனப்பான்மையுடன் தவிக்கும் பிரபுவுக்கு நல்ல தோழியாக மாறுகிறாள் கங்கா. மெல்ல மெல்ல அவன் மீது காதலும் கொள்கிறாள்.

தன்னுடைய இந்த விரக்தியான வாழ்க்கைக்கு காரணம் பிரபு அல்ல, மாறாக தன்னை சுற்றியிருந்த மனிதர்களும், தன்னுடைய கட்டுப்பெட்டி தனமான வளர்ப்பும் தான் என்ற முடிவுக்கு வருகிறாள் கங்கா. அசடான பிரபுவிடமே கசங்கி தன் வாழ்க்கையை கோட்டைவிட்ட தான் எவ்வளவு அசடு, பலாத்காரம் செய்தால் இணங்கிவிடுவேன் என்பதை உணர்ந்து தன்னை வளைக்க விரும்பிய மாமா, அரதபழசான கட்டுபெட்டித்தனமான கொள்கைகளால் பாழாகிப்போன தன் வாழ்க்கையை நினைத்து, இனியேனும் தைரியமாக தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முடிக்கிறாள் கங்கா. ஆனால் நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன? பிரபு கங்காவின் எதிர்காலத்தை கருதி கனத்த மனதுடன் பிரிகிறான். படிப்பவர்களை அதிர்ச்சியடைய செய்யும் எதிர்பாராத முடிவு.

இந்த நாவலை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - mindblowing. தனக்கு இழைக்கப்பட்ட ஒரு சில நிமிட கொடுமைக்காக காலம் முழுவதும் அவஸ்தைப்பட்ட கங்காவின் பரிதாப கதை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல சமூகத்தின் வக்கிரங்களை சாடுகிறார் ஜெயகாந்தன். கிட்டத்தட்ட 448 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை சம்பவங்கள் வாரியாக குறுக்கினால் 2-3 நிமிடங்களில் முடித்துவிடலாம். சற்று மிகைப்படுத்த பட்ட statement என்றாலும் - இது ஒரு matured-ஆன காதல் கதை என்றும் சொல்லலாம். ஆனால் அதை கங்காவின் பார்வையில், அவள் எண்ணங்களுடன் நிறைய விளக்கங்களுடன், தன்னை சூழ்ந்த மனிதர்களை குறித்த புரிதல்களுடன் கதையை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்.